முறைப்படி கற்கவில்லை
முன்னெபோதும் இப்படி ஆனதில்லை
முத்தம் முடித்த உஷ்ண உதடுகளில்
வெட்கம் சற்றும் தீரவில்லை
ஆடைகள் சரி செய்யத் தோன்றவில்லை
பின்னெப்போதும் காண வாய்த்திராத
கனவொன்றின் நடுவில்
தேவதைகள் ஊளையிடுவதின்
அர்த்தம் தெரியவில்லை
உன் மார்புக்கு மத்தியில்
மையம் கொண்டிருக்கும்
காதலழுத்தத் தாழ்வு மண்டலம்
கரையைக் கடக்கு முன்
மீண்டு(ம்) பதுங்கிகொள்வோம்
நீர்க்குடையாய் விரிகிறது மழை…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக