பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..
உனது நிழல் தரை விழுந்தால்....என் மடியில்..ஏந்திகோள்வேன்..
வான் மழையில நீ நனைந்தால்...தென்றல் கொண்டு நான் துடைப்பேன்...
ஒரு நாள் என்னை சோதித்துப்பார்...ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்..
பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..
நீலம் மட்டும் இழந்துவிட்டால்...வானில் ஒரு கூரை இல்லை..
சூரியனை இழந்துவிட்டால்.. கிழக்குக்கொரு திலகம் இல்லை..
நீ ஒருமுறை திரும்பிகொண்டால்...என் உயிருக்கு உறுதி இல்லை..
என் உயிருக்கு உறுதி இல்லை...
பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..
நன்றி..கவிஞர் வைரமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக