ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

வெண்ணிலா பக்கங்கள்..


"பாளையம்கோட்டை பஸ் ஸ்டாண்ட் எல்லாம் எறங்கு..."

கண்டக்டர் - ன் குரல் கேட்டு ஜீவாவிற்கு தூக்கம் கலைந்தது. மடியில் அவனோட பொண்ணு யுவாஞ்சலி நிம்மதியாக தூங்கிகொண்டு இருந்தாள். அவளை தூக்கி தோளில் போட்டுகொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினான். மதியம் வெயில் முகத்தில் சுளீர் என்று அடித்தது.

எங்க போறது யாரை பார்க்க போறது ஒண்ணுமே புரியவில்லை அவனுக்கு. ஒரு கணம் யாருமே இல்லாத உலகத்தில் அவனும் யுவாஞ்சலியும் நிற்பது போல தோன்றியது அவனுக்கு. கொஞ்சம் யோசித்தவனாக வீரகேரளம்புதூர் ல இருக்கிற அவனோட சித்தி வீட்டுக்கு போலாம்னு முடிவு பண்ணி பக்கதில் இருக்கும் டைம் கீப்பெரிடம் போனான்.

சார்...வீரகேரளம்புதூர் போகிற பஸ் எப்போ இருக்கு?
காலையில ஒரு பஸ் போயிடிச்சே தம்பி. அடுத்த பஸ் 3 மணிக்கு தான்.

ஜீவா டைம் பார்த்தான். மணி 1:24 .. இன்னும் டைம் இருக்கு என்று யோசித்தவனாக அங்கிருந்த பெஞ்ச்-ல் உட்கார்ந்தான். பசிக்குது ஆனா சாப்பிடனும்னு தோனல. மண்டியில யுவாஞ்சலியை படுக்க வைத்தான். பூ போல அவள் படுத்திருக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்தான். ஹ்ம்ம் எனக்கு புள்ளையா பொறந்து இந்த அழகு குட்டி இப்படி கஷ்டப்படனுமா? கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது.

"தம்பி...ஏன்டா இந்த பச்சை புள்ளையா தூக்கிட்டு போறே? எங்க கிட்ட விட்டா நாங்க பார்த்துக்க மாட்டோமா?"
அப்படி இல்லம்மா, உங்களுக்கெல்லாம் இப்ப என் புள்ளைனா உசுரு..அது எனக்கு நல்லாவே புரியுது..
"அப்புறம் ஏன்டா இப்படி பண்றே..."
எனக்கு இவளை விட்டா வேற யாருமில்லைமா....நான் உசுரோட இருக்கனும்மா....அதுக்கு என் புள்ளை என் கூட இருக்கனும்மா ..
"நீ உன் புள்ளை கூட இருக்கலாம்...அதுக்கு தான் சொல்றேன் பேசாம எங்க கூட நீயும் புள்ளையும் இருக்க கூடாதா?"
ஐயோ அம்மா புரியாம பேசாதே..கால போக்கில எல்லாம் என் மனச விட்டு போனாலும்...என்னதான் நான் பழசை எல்லாம் மறந்தாலும்..உங்களை எல்லாம் பார்க்கிறப்ப திடீர்னு எனக்கு நீங்க பண்ணதெல்லாம் நினைவுக்கு வருது. நான் உங்க பக்கத்திலே இருந்தா உங்களை எல்லாம் வெறுத்துடுவேனோ-னு பயமா இருக்கும்மா. உங்களை எல்லாம் விட்டு நான் தூரமா இருந்தாலும் எபோதும் உங்களை எல்லாம் அன்போட நினைச்சுகிட்டே தான் இருப்பேன்மா..
"சரி அப்படி எங்கதான் போறே? ....சொல்லிட்டாவது போ ஜீவா.."
எல்லா விடுகதைக்கும் விடை தெரிஞ்சா வாழ்க்கையில சுவாரஸ்யம் போயிடும்..

எதோ ஒரு பஸ்-ன் ஹாரன் சத்தம் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தான் ஜீவா. மடியில் யுவா தூக்கம் கலைத்திருந்தாள்.

என்ன செல்லோ ...நல்ல தூங்குநீன்களா செல்லோ..
என்னை பார்த்து சிரித்தாள்..
கடைவாயில கொஞ்சம் எச்சில் ஒழுகியிருந்ததை துடைத்து விட்டேன்..
பால் குடிகிறீங்களா செல்ல குட்டி...
பேக்கில் இருந்த பால் புட்டியை எடுத்து....குடுத்தேன்.. அவசர அவசரமாக அதை வாயில் வைத்துகொண்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் என் மடியில் சாய்ந்தாள்..
மடியில் படுத்துக்கொண்டு கைய தூக்கி அப்படி எப்படி என்ன என்னமோ காமித்தாள்...என் முகத்தில் அவள் பிஞ்சு கைகளால் விளையாடினாள்...
எப்போதுமே என் யுவா-வின் வாசம் எனக்கு புடிக்கும்..
பேபி பவுடர் & மில்க் கலந்த ஒரு வாசம்...அவள் கன்னத்துடன் கன்னம் வைத்து விளையடுரப்போ வர வாசம்..... எனக்கு புடிச்ச பூ வாசம் அது..
யுவாஞ்சலி கூட விளையாடிகிட்டே நேரத்தை கடத்தினேன்..

சரியாய் 3 : 15 ஆகுரப்போ வீரகேரளம்புதூர் போகிற பஸ் வந்தது. பஸ்-ல் ஏறவும் இறங்கவும் அவளவா கூட்டம் இல்லை. ஜீவா வசதியாக ஒரு ஜன்னல் ஓரத்து சீட் பார்த்து உட்காந்தான்.

வீரகேரளம்புதூர்......
ஹ்ம்ம்...கேட்கிறதுக்கு கேரளா ஊரு மாதிரி தெரியும்...ஆனால் ....பக்கா தமிழ்நாடு..
என்னுடைய சித்தி அங்க ஒரு அரண்மனை வீட்டில வேலைக்காரியா வேலை பார்கிறாங்க....ஒரு காலத்துல அரண்மனை தான் அது....எப்போதும் கூட்டமா நிறைய பேரு வருவாங்க போவாங்க....பெரிய வீடு....எப்பவும் விருந்துகாரங்க..ஜெ ஜேன்னு இருக்கும் எப்போதும். பிறகு காலபோக்கில் அவங்க மகன், மகள் பேரன், பேத்திகள் எல்லாரும் அங்க இங்கனு போய் செட்டில் ஆனதால அதுக்கு அப்புறம் அவ்வளவா அங்க கூட்டம் இருக்கிறதில்லை. எதையோ இழந்தது போல சில நினைவுகளுடன் அந்த அரண்மனை வீடு இப்பவும் இருக்கு. மூணு வருஷதுக்கு முன்னால போனப்ப பார்த்தது. அந்த குடும்பதுல மூத்த மகன் அவங்க பேமிலி கூட அங்க தங்கி இருந்தான். பழைய டாம்பீகம் ஒன்னும் இல்லை. இருந்தாலும் என்னோட சித்தி அங்க ஒரு வேலைக்காரி. நான் அடிக்கடி வீட்டில சண்டை போடுகிரப்ப அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாம வந்து ஒளிஞ்சுகிற இடம் இந்த சித்தி வீடு. சித்தியோட புருஷன் அவங்களை விட்டு வேற எவளையோ இழுத்துகிட்டு ஓடிட்டாரு. சித்திக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரி எல்லை. எதோ மூளையில கோளாறாம். அதனால அவளுக்கு அடிக்கடி வலிப்பு மாதிரி வரும் போகும். சித்திக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அதனால குடும்ப காரங்க கூட எல்லாம் சண்டை. அவங்களும் அவளவா யாரும் சித்தி வீட்டுப்பக்கம் வருவது கிடையாது. எதாவது விஷேசத்துக்கு சித்திய கூப்பிடுவாங்க அவங்களும் கடமைக்கு வந்து போவாங்க...அவளோதான்.

ஆனால் எனக்கும் சித்திக்கும் கொஞ்சம் ஒத்துபோகும். அதுக்கும் காரணம் இருக்கு. நான் வீட்டில சண்டை போட்டு சித்தி வீட்டுக்கு வந்து எங்க குடும்பதுல நடக்குற எல்லாத்தையும் சித்திகிட்ட ஒன்னு விடாம சொல்லுவேன். அவங்க இந்த நியூஸ் எல்லாம், எப்பவாது யாருகூடையாவது சண்டை போடுறப்ப, உன்னை பத்தி தெரியாதா அப்படி இப்படி-னு நான் சொன்ன தகவல் வச்சு அடிச்சி விடுவாங்க. இவங்க கூட சண்டை போடுறவங்க அப்படியே அதிர்ச்சியில நிப்பாங்க. இவளுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்-னு. இப்படி நான் கோள் சொல்றதால சித்திக்கு என்னை கொஞ்சம் புடிக்கும். அது மட்டுமில்லை...வீட்டில சண்டை போட்டு இங்க வந்து நிக்கிறப்ப, நான் கண்ணன்-னு ஒரு பிரண்டு கூட வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்க போவேன். அதுல எதாவது காசு கிடைக்கும். அதுல கொஞ்சம் என்னோட சித்திக்கு குடுப்பேன். அவங்களுக்கு என்னை புடிக்க இதும் கூட ஒரு காரணம்.

கண்ணன் எப்படியோ எனக்கு பழக்கம் ஆனான். பெயிண்ட் அடிக்கிறது எப்படி-னு எனக்கு கத்து குடுத்த குரு. வீரகேரளம்புதூர்-ல அவளவா பெரிய வீடு எல்லாம் இல்லை. அவ்வளவா ஜன நெருக்கடியும் கிடையாது. வரக்கூடிய பஸ் கூட எப்பவாச்சும் வரும் போகும். மத்தபடி அது ஒரு பட்டிக்காடு. அங்க கண்ணன் தான் பெரிய பெயிண்டர். எல்லாமே வெள்ளை சுண்ணாம்பு அடிக்கிற வீடுதான். எதோ ஒன்று இரண்டு வீட்டில கொஞ்சம் கலர் அடிச்சிருப்பாங்க. அதனால தான் கண்ணன் அங்க பெரிய பெயிண்டர். நான் சித்தி வீட்டுக்கு போனா எப்படியாவது அவன்கூட பேசி கூடவே பெயிண்ட் அடிக்க போயிடுவேன். பெயிண்டிங் மட்டுமில்ல எனக்கு தண்ணி அடிக்க, பீடி புடிக்க எல்லாம் கத்து குடுத்த குரு அவன். சில நேரம் பகலில் வேலை செய்வான். சில நேரம் இரவு தான் வேலை செய்வான். எப்படி ஆனாலும் அவனுக்கு பீடி வேணும். இரவு என்றால் கண்டிப்பா குவாட்டர் அடிக்காமல் வேலை செய்ய மாட்டான். அவன் கூட போய் போய் நான் பீடி குடிக்க தண்ணி அடிக்க பழகினேன். சில நேரம் சித்தியே சொல்வாங்க...ஏன்டா உன்னை எல்லாம் பார்த்த படிச்ச பையன்-னு யாராச்சும் சொல்வாங்களா. நீயும் உன் லுங்கி கட்டும், பனியனும் போதாததுக்கு வாயில பீடி வேற. என்னைக்காவது உன் அப்பா அம்மாக்கு தெரிஞ்சு என் பையன நீ தான் கெடுத்துட்டே-னு எங்கிட்ட கேட்டா நான் சும்மா விட மாட்டேன்.

வெண்ணிலா பக்கங்கள் தொடரும்..

புதன், செப்டம்பர் 01, 2010

இப்படிக்கு ஜீவா L/O ரோசி..



அன்புள்ள ரோசிக்கு,
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதை விட, நீ எப்படி இருப்பாய் என்று தான் மனசு கேட்கிறது. என்னவோ இன்னைக்கு மனதில் உள்ளதை கொட்டிவிடதால் கொஞ்சம் சந்தோசமாகவும் இருக்கிறது.
தென்றலாய் என் வாழ்வில் வந்து புயலாய் நீ வீசிக்கொண்டிருக்கும் அதிசயம் என்னவென்று எனக்கு இன்னும் புரியவில்லை. என்னை பற்றி உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நீ பொய் சொன்னபோதும் கூட என்னால் உன்னை வெறுக்க முடியவில்லை. பதிலாக நான் என்னை பற்றி உன்னிடம் மனம் திறக்க வைத்துவிட்டாய். என் வாழ்வில் புதிய அத்தியாயம் எழுத வந்தவளா நீ? உன்னில் இருக்கும் புதிர்கள் எல்லாம் எனக்கு விளங்காமல் இருந்தாலும் மனம் ஏனோ உன்னையே நினைத்து தடுமாறுகிறது. சில நேரம் நீ சொல்வது மறுக்கனும் போலதான் இருக்கிறது ஆனாலும் உன் வார்த்தை ஜாலங்களில் என் வார்த்தை தந்தி அடிக்கிறது.

இதெல்லாம் காதல் இல்லை வெறும் இன்ஃபாக்ச்சுவேஷன் தான் என்று என் மனது சொல்கிறது. அது உண்மை என்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இது எல்லாம் ஒரு கனவு போலதான் இருக்கிறது எனக்கு. என்றைக்காவது என்னை விட்டு நீ விலகி சென்றால் நீ கனவிலிருந்து நிஜத்திற்கு போய்விட்டாய் என்று தான் நான் நினைப்பேன். இந்த கனவுக்குள்ளிருந்து நான் வெளியே வருவேனா என்று எனக்கு தெரியாது.


இதோ தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தாய்...என்னை பற்றி உன்னிடம் சொல்லியபின்பு விலகி செல்கிறாயா இல்லை என்னை மறுபடியும் விரும்பி உன் ரகசிய குரலில் என்னை அழைப்பாயா எனக்கே தெரியாது. போகும் பாதை எது என்றாலும் இதுவரை உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில் உன் காலடி சுவடுகள். ஒரு ஜென்மம் இல்லை...நூறு ஜென்மம் ஆனாலும் எந்த கனவு காதல் எனக்கு போதும்.

உன் நினைவுகளில் என் சுவாசம் கூட சீராக வர மறுக்கும் தருணத்தில் நீ மூன்றாம் ஜாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய் . இந்த பின்னிரவு கடிதத்தை முடிக்கும் போதும் காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்த கடிதத்தை எழுதி முடிக்கிறேன் .


இப்படிக்கு..
ஜீவா L/O ரோசி

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகிழம்பூ..


ஊருக்கு போனதும் முதல் வேலையாக ஜீவா படித்த காலேஜ் க்கு போக தீர்மானித்தான். தீபாவளி டைம் ஆனதால..மழைகொஞ்சம் சாரலாக அவன் முகத்தை நனைத்து. சில் என்ற காற்றில் மனம் படபடக்க அவன் படித்த காலேஜ் முன்பாக வந்து நின்றான். தீபாவளி லீவ் என்பதால் காலேஜ் ல யாருமே இல்லை. வாட்ச்மன் மட்டும் இருந்தான். பார்த்த உடனே அடையாளம் கண்டுகிட்டாரு


தம்பி நீங்க ஜீவா தானே
ஆமா தாஸ் அண்ணே..நல்லாருக்கீங்களா?
ஆமா தம்பி எதோ இருக்கேன்.. என்ன இந்த பக்கம்..
இல்லண்ணே...சும்மா காலேஜ் பார்த்திட்டு போலாம்னு ...என்று இழுத்தேன்..
வாங்க தம்பி இது உங்க காலேஜ் நல்லா பாருங்க...மழை நேரத்தில வந்திருகீங்களே தம்பி...அப்படின்னு சொல்லிட்டு சிரித்தார்..
இல்ல தாசண்ணே...இனி இது மாதிரி டைம் கிடைக்காது இல்ல...அப்படின்னு நான் சொல்லும்போதே...தாசண்ணன் காலேஜ் மெயின் கேட் திறந்து விட்டாரு...


ஜீவா ஓட்டமும் நடையுமாக....கண்களை அந்த காலேஜ் முழுவதும் சுழல விட்டான்.. ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஜீவா என்று ரகசியமாக யுவாஞ்சலி கூப்பிடுவது போல ஒரு உணர்வு. கால்கள் மட்டும் தன்னிச்சையாக அந்த மகிழம்பூ மரம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது.


அதோ...அந்த விளையாட்டு மைதானத்துக்கு பக்கதுல ...மஞ்சள் நிற பூக்களை சூடிக்கொண்டு....என்னை போலவே மழை சாரலுடன் கொஞ்சி கொண்டு....எங்கள் காதல் மகிழம்பூ மரம்...


ஜீவா மெதுவாக அடி எடுத்து வைத்து அந்த மகிழம்பூ மரத்தின் அடியில் வந்தான். தரை எல்லாம் மகிழம்பூகள் மஞ்சள் நிறத்தில்....ஒரு பூவைகூட மிதிக்க கூடாது என்று எவளவோ முயற்சி செய்தும் சில பூக்கள் அவன் காலடியில் உயிரை விட்டன. மனம் பதறி விட்டது ஜீவாவுக்கு. ஐயோ என் காதல் பூக்கள் என் காலடியில் கல்லறையை தேடுவதா... மெதுவாக மரத்தை தொட்டு பார்த்தான். மனசு பூரா எதோ ஒரு சொல்ல முடியாத சந்தோசம் .


ஜீவா...வாடா அந்த மகிழம்பூ மரத்துக்கு அடியில போய் உட்காருவோம்..
ஹ்ம்ம் வாடி யுவா...நமக்கு புடிச்ச இடமே அது தானே..
என்னடா ஜீவா இவளோ பூ தரையில கிடக்குது..
அது ஒண்ணுமில்ல..நாம காதலர்கள் வாரோம்னு இந்த மகிழம்பூ மரத்துக்கு தெரியும். அதான் நம்மளை வரவேற்க இவளவு பூக்கள் டி
ஏன் ஜீவா இந்த மகிழம்பூ மரத்துக்கு நம்ம காதல் புரியுமா டா
கண்டிப்பா என் கண்மணி.. நம்முடைய காதல், சிரிப்பு, சிணுங்கல், அழுகை, சண்டை எல்லாமே இந்த மகிழம்பூ மரத்துக்கு நல்லாவே தெரியும் டி.
ஏன்டா ஜீவா இந்த பூக்கள் எல்லாம் பூக்கிறது நமக்காக தானே?
கண்டிப்பா யுவா...எப்போ எல்லாம் இந்த மகிழம்பூ மணம் எனக்கு கிடைக்குதோ அப்போ எல்லாம் கண்டிப்பா எனக்கு உன் நினைவு வரும்டி..
எல்லோருக்கும் காதலுக்கு என்ன எல்லாமா அடையாளம் வச்சிருப்பாங்க...நமக்கு இந்த மகிழம்பூ & அதோட மணம் வச்சுக்கலாமா ஜீவா
ஹ்ம்ம் கண்டிப்பா .... இந்த மகிழம்பூ மரம் எப்போதும் நமக்காக பூக்கும் நம் காதலை சொல்லும்டி..
ஜீவா ...I Love U ...டா ......யுவாஞ்சலி ஜீவா-வின் தோள்களில்
சாய்ந்துகொண்டாள்...கண்ணீருடன்..!


எதோ ஒன்று கன்னத்தில் ஊர்வது போல இருந்தது ஜீவா-வுக்கு...
அப்போதுதான் நினைவு வந்தவனாக அண்ணாந்து அந்த மகிழம்பூ மரத்தை பார்த்தான்..
ஜீவன்-வின் கண்களில் கண்ணீர் முட்டியது..
யாருக்காக இன்னும் பூக்கிறாய்......!!!


மகிழம்பூ மரம் சிரித்தது....

நாளைக்கும் நிலவு வரும்...நாமிருக்க மாட்டோம்...
நாளைக்கும் பூ மலரும்...நாமிருக்க மாட்டோம்...
காதலை தான் வாழவைத்து..
காதலர்கள் போகிறோம்...
ஜீவன் போன பின்னாலும் செடி கொடியாய் வாழ்கிறோம்...


செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

கனவு காதலர்கள்


காதலை கொண்டாடும் உலகத்தில் காதலி இல்லாமல் வாழ்வது பெரும் துயரம். எல்லோருக்கும் எப்படியாது காதல் வேண்டும். செல்போன் சிணுங்கல்களில், அரட்டை பக்கங்களில் காதில் headphone மாட்டிகொண்டு முத்த மழைகளில் முகம் தெரியாதவளின் காதலுடன் எப்படி எல்லாமோ காதலில் வாழ்கிறோம்.


காதலிப்பது, காதல் வயப்படுவது,காதலில் ஈடுபடுவது என இத்யாதி இத்யாதிகளுக்கும் அத்தியாவசியத்தேவை , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாலினபேதமில்லாமல் ஒரு ஆள்!. காதலை உணர வாய்ப்பே இல்லாமல் இருப்பது உலகிலேயே மிகவும் கொடியது. அது மனம் சார்ந்தது , உடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் டுபாக்கூர் விடமுடியாது. பெண் வாசனையே இல்லாத ஊரில் புடவை கட்டிய பொம்மை , குச்சி , கம்பு எது கிடைத்தாலும் கூட காதலிக்க (கற்பழிக்கவும்) நேரிடலாம். மேன்சன்களில் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குள்ளேயும் காமம் எப்போதும் விழிப்போடேயிருக்கும். அதனாலேயோ என்னவோ சிவராஜ் சித்த வைத்தியர் தொடங்கி சகல வைத்தியர்கள் மீதும் அவர்களுக்கு தீராத பயம். கைமாறும் காமக்கதை புத்தகங்களினூடாகவும் , புளூடூத்தில் பரவும் ஆபாச வீடியோவாகவும் எப்போதும் காமம் அவர்களினூடே நிறைந்து இருக்கும்.பசி,தூக்கம்,வறுமை இத்தனையையும் தாண்டி அவர்களுக்கான காமத்தை எப்போதும் அவர்கள் தீவிரமான உயிர்ப்போடு வைத்திருந்தனர்.


அதற்கான காரணத்தை எப்போதும் நான் அறிந்திருக்கவில்லை. எனக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது. சேவல்கள் நிரம்பி வழிகிற பண்ணைகளில்தான் கோழிகளுக்கான தேவை அளவுக்கு மீறியே இருக்குமோ என்னவோ!


மேன்சன் நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி இருந்தனர். ஒரு சிலருக்கு பல காதலிகள் இருந்தனர். சிலருக்கு காதலன்கள் இருந்தனர். இரவெல்லாம் செல்போன் சூட்டில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். செல்லம் குட்டி புஜ்ஜிமா , என்னடி பொண்டாட்டி மாதிரியான வார்த்தைகள் சகஜமாக காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். காதலிகள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கும் மட்டுமே வாய்த்திருந்தது. சிலரது காதலிகள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிருந்து காதோடு கட்டியணைக்க வேண்டியதாயிருக்கும். பலருக்கு தூரத்துமனைவிகளைக்கூட செல்போனில் அணைத்து முத்தமிடுகிற பாக்கியமேயிருந்தது. பேச்சிலர்களைக்காட்டிலும் இவர்களுடைய நிலை பரிதாபகரமானது.


எங்களோடு புதிதாக இணைந்த அவனுக்கு காதலிகள் யாருமேயில்லை. எங்களை எப்போதும் ஏக்கமாக பார்த்துக்கொண்டேயிருப்பான். எப்போதும் அருகிலிருந்து நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டேயிருப்பான். அவனுக்கான காதலிக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை. யாராவது பொண்ணுங்க நம்பர் குடு மச்சான் , நான் பேசி கரெக்ட் பண்ணிக்கறேன் என்பான். பாவப்பட்டு ஒரு பெண்ணின் எண்ணை கொடுப்போம். சில நாள் போன பின் திரும்பி வருவான்.. மச்சான் அந்த பொண்ணு பேச மாட்டேங்குது திட்டுதுடா என்பான். இன்னொரு பெண்ணின் செல்போன் எண் தருவோம்.. சில நாட்களுக்கு பின் அதே பதில்தான். தொடர்ச்சியாக நான்கு முறையும் தோல்வி.. ஐந்தாவது முறை கொடுத்த எண் வேலை செய்ய ஆரம்பித்த்து.தினமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பான். எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பான். அவளுடைய அழைப்புக்காக காத்திருப்பான். அவளுடைய போன் பிஸியாக இருந்தால் கடும் கோபமாத்துடன் எங்கள் மீது பாய்வான். பார்க்க பாவமாக இருந்தாலும் கிடைக்காதது கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் திளைப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அவளை அவன் உயிருக்கு உயிராக காதலிப்பதாக சொன்னான். (அவன் அவளை பார்த்தது கூட இல்லை. பேச்சு மட்டும்தான். அவள் சென்னையை சேர்ந்தவள் என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும். வேறேதும் தெரியாது.


மேன்சன்களில் வசிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. சரியான சாப்பாடு கிடைக்காது. சுத்தமான தண்ணீர்கிடையாது. கொசுக்கடிக்கு நடுவில் தூங்கமுடியாது.. மாதம் முழுவதும் காசிருக்காது. சென்னை மேன்சன்களில் மிக நல்ல வசதியான பல மேன்சன்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவை நரகமாகத்தான் இருக்கும். இதையெல்லாம் தாண்டியும் எப்போதாவது குடிப்பதுவும், இரவுக்காட்சி சினிமாவுக்கு போவதும், கும்பலாய் அமர்ந்து கொண்டு விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை மூட்டி தங்களுடைய மூக்கில் குத்திக்கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. என்னுடைய ஹீரோ மார்க்கெட்டிங் வேலை பார்த்தவன். அவனுடைய எல்லா பிரச்சனைகளையும் மறக்க அவளுடைய செல்போன் அழைப்பு அவனுக்கு பேருதவியாய் இருந்தது.
அந்தப்பெண் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் தெரியாது.. அவனுடையே பேச்சு சமயங்களில் சென்டிமென்ட்களை கடந்ததாகவும், ஆபாசங்களாக அறியப்பட்டவையாகவும் இருக்கும். உன்னை கட்டிபிடிச்சிருக்கேன்.. நீ என் கன்னத்தில் முத்தமிடுகிறாய்.. நான் உன் இதழ்களை கடிக்கிறேன் என்று இரவு முழுக்க பேசித் தீர்ப்பான். அவனுடைய காமத்திற்கான அந்த வடிகால் காதல் என்கிற பெயரோடு அவனுடன் வாழ்ந்தது. அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அவள் ஒரு முறை அவனை சந்திக்க விரும்புவதாய் சொல்ல இவனோ பேண்ட் சட்டையெல்லாம் புதிதாய் மாட்டிக்கொண்டு கிளம்பத்தயாரானவன், ஏனோ போகவில்லை. அவளுக்கு தன்னை பிடிக்காமல் போயிருச்சுனா என்றான். ஆனாலும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். பேசிக்கொண்டேயிருந்தவன். திடீரென ஒருநாள் அமைதியானான். அந்தபெண்ணின் எண் உபயோகத்தில் இல்லாமல் போனது. அவளை காணவில்லை. அவள் யாரென்றே தெரியாது. அவளுக்கு என்னாச்சு தெரியாது.. ஆனால் அவளுடைய எண்ணுக்கு அழைத்தால் எப்போதும் ஒரு பெண் இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று சொல்லி சொல்லி அவனை நோகடித்தாள்.


மேன்சன் நண்பனை அடிக்கடி சந்திப்பதுண்டு. திருமணமாகிவிட்டது. சொந்த கார பெண். எனக்கு பிறகு இரண்டு வருடங்கள் அந்த மேன்சனில் தங்கியிருந்தான். என்ன மச்சான் ஆச்சு அந்த செல்போன் பொண்ணு என்று அண்மையில் விசாரித்தேன். சிரித்தான்.. அடிக்கடி போன் பண்ணி பார்ப்பேன்.. என்னைக்காவது அந்த போன் சுவிட்ச் ஆன் ஆகும்னு நம்பிக்கை போக மாட்டேங்குது... நேத்து கூட போன் பண்ணி பார்த்தேன் மச்சான் சுவிட்ஆஃப்னுதான் வருது என்றான் புன்னகையுடன்.


அவளைப்பற்றி பேசும்போது அவன் கண்ணில்தான் என்ன ஒரு உற்சாகம்..

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ரசிகன் நான்..

எப்போதும் மழை தான் அழகு...
எனக்கு புடிச்ச மழை ....அதுல காதலி கூட பைக் ல போகணும்னு ரொம்ப ஆசை..
கட்டிக்கிட்டு..போகணும்..




ஐயோ ..ராக்கி ....ரக்க்ஷா பந்தன்...

எனக்கு புடிக்காத பண்டிகை....குஜ்லீஸ் எல்லாம் என்னை அண்ணான்னு சொன்னா..அப்பப்ப நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு!


காதல் வழி சாலையிலே... வேக தடை ஏதுமில்லை..

நானகுடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை.....

எட்டில் அழகு பதினெட்டில் அழகு...
எந்த பெண்ணும் இருபதில் இரட்டை அழகு......

சைட் அடிக்காம போனா இந்த அழகு தேவதைகளை படைத்த ஆண்டவனுக்கு எவளோ கோபம் வரும்.. ஆமா இதுல என்னோட ஆளு யாருன்னு கண்டு புடிங்க பார்க்கலாம்.



மழை சில நேரம் கொஞ்சம் திமிரா தான் நடக்குது..

பரவாயில்ல ....அழகுக்கு எப்போதும் திமிர் கொஞ்சம் அவசியம் தான் ..


எப்போதுமே எனக்கு புடிச்ச Fruite Salad....Colorfull - ஆ இருக்கணும்...



கம்ப்யூட்டர் மழை!


சில்லு சில்லாய் ...என்னை சிதற செய்தாய் !
ஆஹா மழை .... என் கண்ணாடி அறைக்குள்..


எத்தனை நாள் ஆச்சு மழையில நனைஞ்சு...
எத்தனை நாள் ஆச்சு மழையுடன் பேசி..
எத்தனை நாள் ஆச்சு மண்வாசனை மணம் நுகர்ந்து...
எத்தனை நாள் ஆச்சு முதல் துளியின் ஸ்பரிசம் பட்டு..


போகணும் ஊருக்கு போகனும்
மழையில நனைஞ்சு இரண்டு நாளாவது காய்ச்சல்ல படுக்கணும்..
தூக்கம் தொலைத்த இரவுகளில் மழையின் சத்தம்...
மீண்டும் தூக்கம் கொண்டு வரணும்...


அதுவரை ....
கீழே உள்ள இந்த இணைப்பை கிளிக் பண்ணிக்கலாம்..
கண்ணாடி அறைக்குள் மழையை ரசிக்கலாம் !


Note: Please turn on your speakers / headphones

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

காதல் = Ctrl + Alt +Del


இறந்தகாலம் (அன்பு)


ஜீவா....நான் ஓன்று கேட்பேன் தருவாயா?
என்ன வேணும்டி செல்லம்....நீ கேட்டு நான் தரமாட்டேனு சொல்வேனா?
பேச்சு மாறமாட்டியே....
ஹ்ம்ம்..இல்லை என் செல்லம் என்ன வேணும் கேளு
Promise?
ஹ்ம்ம் promise!
இல்ல வேணாம் ....நீ தரமாட்டே..
அடி என் ராசாத்தி...கேளுமா.
சரி..எனக்கு உன்னோட Yahoo login id & Password venum.....தருவியா?


ஜீவா ஒரு கணம் என்ன சொல்றதுன்னு புரியாம மௌனம் ஆனான்....
ஆஹா ...என்ன திடீர்னு இப்படி கேட்கிறாள்....எதுக்காக கேட்கிறாள்..
என்னை spy பண்ண கேட்கிறாளோ?
ச்சே ச்சே...காதலனை யாராச்சும் spy பண்ணுவாங்களா
ஐயோ ....என்ன பண்ண இப்ப..promise வேற பண்ணிட்டோம்...
அதுவும் கேட்கிறது என்னோட உயிரின் உயிரான காதலி...


ஏய்...ஜீவா என்ன பதிலே காணோம்...பாத்தியா...அப்பவே கேட்கமாட்டேன்னு சொன்னேன்..
நீ தான் ராசாத்தி செல்லம் தரேன்னு எல்லாம் சொன்னே..
இப்போ யோசிக்கிறே பாத்தியா..
சேச்சே...அப்படி ஒன்னும் இல்ல..உனக்கு இப்போ என்னோட longin id & password வேணும் அவளோ தானே..
இந்தா இது தான் என்னோட login id & password
Login id : XXXXXXXX
Password : XXXXXXX
wow ...தேங்க்ஸ் டா என் இனிய காதலா....really I Love you da
நாளைக்கு உனக்கு கால் பண்றேன் ..


அடுத்த நாள்..
"நிலவே நீ வர வேண்டும்...
தனியே உன் துணை வேண்டும்.."
என் செல்போன் ரிங்க்டோன் சிணுங்கியது.
அவளே தான்....என் கனவுகளின் காதல் தேவதை...அவளே தான்.
ஹலோ செல்லம்....சொல்லுடி..சௌக்கியமா?
ஹ்ம்ம்..நல்லாருக்கேன் டா..
என்னடி என்னோட login id & password use பண்ணியா?
அட கருமம்...என்னடா அது...உன்னோட மெயில் inbox - ல இவ்வளவு sexy போட்டோ வச்சிருக்கே...
இதை தான் நாள் full - ஆ பார்த்துகிட்டு இருப்பியா?
ஐயோ...அது என்னோட friends எல்லாம் அனுப்புனது டி....delete பண்ண மறந்துட்டேன்..
கொடுமை டா சாமி...இதை பார்க்க தான் என்னோட login id & password கேட்டியா?
இல்லை டா கண்ணா...என்னோட friend ஒருத்தி சொன்னா..
எவளோதான் லவ் பண்ணாலும்....யாரும் இதுமாதிரி secret எல்லாம் தர மாட்டாங்கனு...
நான் அவள் கிட்ட challenge பண்ணேன்... என்னோட ஆள் அப்படி ஒன்னும் இல்லை..கண்டிப்பா எல்லாமே என்கிட்டே share பண்ணுவாருன்னு சொன்னேன்..
என்னோட நம்பிக்கை வீண் போகலை டா...
அடி பாவி...காதல் என்பதே ஒரு நம்பிக்கைதான் டி..


நம்பி தான் காதலிச்சோம்.....ஒரு இனிய பொழுது.....என் காதல் Ctrl +Alt + Deleted


நிகழ்காலம் (அடாவடி)


இப்போதும் ஒரு மரம்கொத்தி பறவை....
என்னுடைய Login id & Password கேட்டது..
அதை குடுத்த முஹூர்த்தம்......அவள் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போயிட்டா..
மொத்தத்தில்....இதுவும் காதல் இல்லையாம்...
அட...என்னோட வாழ்க்கையில இன்னொரு Ctrl + Alt + Deleted

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

ரோசி என்கிற அழகு ரோஜா!


ஜீவா I hate you da..
நீ ஒரு நம்பிக்கை துரோகி..
என் மூஞ்சில இனிமேல் முழிக்காதே


என் கூட friendship வச்சுக்கவும் உனக்கு இனி உரிமை இல்லை..
என்னை பத்தி பேசவும் உனக்கு எந்த அருகதையும் இல்லை..
I hate you...I hate u...


வார்த்தைகள் படபட என அவளிடம் இருந்தது வந்ததை பார்த்து ஜீவா ஒரு கணம் ஆடி தான் போயிட்டான். கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்க்க ஆரம்பித்தது. அவளுடைய கோபத்தை முதன்முதலா பார்கிறான், ஆனாலும் உருகி உருகி இவ்ளோ நாளும் பழகிட்டு திடீர்னு இந்த வார்த்தைகள் அவ சொன்னதும் என்ன செய்யுறதுன்னு ஒரு கணம் புரியாமல் உறைந்து தான் போனான் ஜீவா. நிலவு ஏன் எப்படி சுடுகிறது? அவள் ரொம்பவும் பிடிவாதக்காரி, கொஞ்சம் திமிரும் கூட அவளுக்கு. ஒருவேளை அவளோட திமிரும் பிடிவாதமும் தான் நான் அவளை விரும்ப காரணமா இருந்ததோ?


"இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் வளர்த்து...
பூஜை செய்யும் வேளையிலே..... பறிகொடுதேனோ?"

ஹ்ம்ம் ...15 நாள் ஓடியே போச்சு.......எவ்வளவோ offline messages எல்லாம் குடுத்து பார்த்தாச்சு...ஹ்ம்ம் அவதான் பிடிவாதகாரியாச்சே...ஒரு பதிலும் காணோம். அவ இனி வரமாட்டா...ஐயோ...எனக்கு என்னாச்சு...மனசு ஏன் பிடிவாதமா அவளையே நினைக்குது...!

எங்கேயோ ஒரு "Buzz" sound..
டேய் எப்படிடா இருக்கிறே?
ஹய்யோ...உன்ன பார்த்து எத்தன நாள் ஆச்சுடா..

கண்ணு முழிச்சு பார்கிறேன் ....ஆஹா ....ரோசி....
Yahoo messenger - ல Message வந்திருக்கு ரோசிகிட்ட இருந்து..

அப்போ இவளோ நேரமும் ரோசி என்னை விட்டு போன மாதிரி எல்லாம் .....கனவா?....
மெல்ல மெல்ல மேகம் விலகி..நிலவு முகம் காட்ட தொடங்கியது...கூடவே ரோசி என்கிற ரோஜா பூவின் வாசமும்..!!!

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மனதை மயக்கிய பாடல் (Adults Only)

சில பாடல் கேட்டால் மனதை மயக்கும் ... சில பாடல் மனசுக்குள் புகுந்து மூளை நரம்பு எல்லாம் தூண்டி விட்டு மெஸ்மரிசம் பண்ணும்...

அப்படி ஒரு பாடல்...

http://www.youtube.com/watch?v=bLlY0UF9VDU&feature=avmsc2

ஞாயிறு, ஆகஸ்ட் 01, 2010

மழை முத்தம் ...



ஏய். ...ஜீவா...!!
(ரகசியமாய் குரல் கேட்க திரும்பி பார்தேன். யுவாஞ்சலி நின்றுகொண்டிருந்தாள்.)

என்னடி யுவா? ...கிளாஸ் முடிஞ்சாச்சு...வீட்டுக்கு போலாமா?

இருடா ....கொஞ்சம் வெயிட் பண்ணு...போலாம்...

ஐயோ யுவா...மழை வரும் போல
இருக்குடி ....இப்பவே லேசா மழை தூறிக்கிட்டு இருக்கு, உன்னை வீட்டில விட்டுட்டு நான் போகணும் டி வீட்டுக்கு..



(கிளாஸ் ல எல்லோரும் போயிட்டாங்க....ஒரே நிசப்தமா இருக்கு)



டேய் ...நீங்க இன்னும் கிளம்பலியா....வாட போலாம்.
(இது சிவா ...என்னை தேடி பார்த்துட்டு...மறுபடியும் கிளாஸ் ரூம் வந்திருக்கான்)

மச்சி ப்ளீஸ் டா...நீ கிளம்பு யுவா எதோ என் கூட பேசணுமாம்....நான் கொஞ்சம் கழிச்சு வரேன் டா.

ம் ம் ..நடக்கட்டும் நடக்கட்டும்....(கன்னடித்துகொண்டே போயிட்டான்)

ஹ்ம்ம் ..நீ சொல்லு யுவா...என்ன மேட்டர்?

ஆமா என்னடா அந்த லவ் லெட்டர் ல ...எழுதியிருந்தே?
என்ன எழுதியிருந்தேன்? (புரிந்தும் புரியாத மாதிரி நடித்தேன்)

"முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்று கேட்பதெப்போ"
"முத்த தமிழ் வித்தகியே இரண்டில் ஒன்று என்னை பார்ப்பதெப்போ"

(சிரித்தேன்) ஹ்ம்ம் ...படிச்சியா? புரிஞ்சுதா?
ஜீவா...எவளோ நாளாடா நாம லவ் பண்றோம்? என்னை நீ புரிஞ்சுகிட்டியோ இல்லையோ ...உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தம்னு எனக்கு நல்லாவே தெரியும் டா.
ஏஏய்...என்ன சொல்றே...தெளிவா சொல் டி (மறுபடியும் நடித்தேன்)
உனக்கு என்னை கிஸ் பண்ணனுமா?
(மனசு படபடனு அடிக்க ஆரம்பிக்குது.....காட்டிக்காம சமாளித்தேன்)
ஜீவா ......(யுவா-வின் சத்தம்...கொஞ்சம் ரகசியமாய் ஒலிக்க ஆரம்பித்தது).
என்னடி யுவா குட்டி...(எனக்கே தெரியாமல் என் சத்தமும் ரகசியம் பேச ஆரம்பித்து)
இங்க யாருமே இல்ல....
அதனால.
அதனால.....என்னை நீ கிஸ் பண்றே

(வெளியே மழை ..கொஞ்சம் வலுத்திருந்தது)

நிஜமா கிஸ் பண்ணிடுவேண்டி ....
ஹ்ம்ம் நானும் நிஜமா தான் சொல்றேன் ஜீவா
ஏய் ..கொஞ்சம் தள்ளி வாடி..மழை சாரல் அடிக்குது இல்ல..
பரவாயில்ல ஜீவா....நீ என்னை என் உடம்பு பூரா தொடுற மாதிரி ...இந்த மழை சாரல் ஒரு சிலிர்ப்பு தருது.....புடிச்சிருக்கு ஜீவா..

(மழை சத்தம்....எங்களின் ரகசிய சிணுங்கலில் கொஞ்சம் வெட்கித்தான் போனது. யுவா-வின் உடம்பு சிலிர்ப்பதை பார்த்துக்கொண்டே...அவளை நெருங்கினேன்..)

ஜீவா (என்று சிணுங்கலாய் சொன்னாள்).....ஒரு விரலால் என் பக்கம் வராதே என்று செல்ல கோபம் காட்டினாள்..
இனி பின்னால் போவதற்கு இடம் இல்லை....சுவரோடு ஒட்டிக்கொண்டு என்னை பார்த்து புன்னகை பூத்தாள்..

(வெளியே அட மழை ...எங்களுக்குள்ளும் அதே மழை ...கொஞ்சம் சூடான மழை)

அவளை நெருங்கி என் கைகளுக்குள் அவளை கொண்டு வந்தேன்...
மூச்சு காற்றும்....என் மேல் சுகமாய் ரீங்காரம் பாட...
கண்களை மூடி தேவதையாய் நின்றாள் என் யுவா..

கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்டேன்...
ஏய்...உன் பெயர் என்னடி?
தெரியாது
நீ எந்த ஊர் டி?
தெரியாது
என்னை தெரியுமா?
தெரியும்
இடுப்புல கை வைக்காதே ஜீவா....கூச்சமா இருக்கு டா
உன்னோட லோ ஹிப் டிரெஸ்ஸிங் ...எனக்கு ரொம்ப புடிக்கும் டி..
அப்படியா?
ஆனா அதுல ஒரு சிக்கல் ....அது என்னான்னு இப்போ கேட்க கூடாது.
இப்போ எனக்கு மழை....நீ....உன் ஸ்பரிசம் மட்டும் தான் ...வேற எதுவும் என் மனசுக்குள்ளே இல்லை ஜீவா..
ஜீவா உன்னை கட்டி புடிக்கணும் போல இருக்கு....ஆனா பண்ண மாட்டேன்..
யுவா-வின் இடுப்பை கட்டிக்கிட்டு....
அவள் உதடுடன்...என் உதடு மெதுவாக சேர்த்து..

மழை இன்னும் பெய்கிறது...
மழை துளிகள் சங்கீதமாய்...
எங்கோ தூரத்தில்..பெயர் தெரியாத ஒரு பறவையின்....மழை பாடல்..
வாழ்க்கை எப்போதுமே அழகு தாண்டி ...யுவா !

வெள்ளி, ஜூலை 30, 2010

ஐயோ ....சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு!


Mr.X: My mobile bill how much?

Call centre girl: sir, just dial 123to know current bill status

Mr.X: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.


Friend I got a brand new Ford IKON for my wife!

Mr.X: Wow!!! That's an unbelievable exchange offer!!!


Teacher : Which is the oldest animal in world?

Mr.X: ZEBRA

Teacher: How?

Mr.X: Bcoz it is Black & White


Judge: Don't U have shame? It is d 3rd time U R coming to court..

Mr.X to judge: U R coming daily, don't U have shame?


Question: "Should Women have Children after 35?"

Smart man Replied: "No! 35 Children R More than Enough!!"


Mr.X attending an interview in Software Company.

Manager: Do U know MS Office?

Mr.X: If U give me the address I will go there sir.


(Best one)

Mr.X got a sms from his girl friend:"I MISS YOU"

He replied:"I Mr YOU" !!.


After finishing MBBS Mr.X started his practice.

He Checked 1st Patient's Eyes, Tongue & Ears By Torch & Finallly Said:

"Torch is okay"


Man1: Oye, what will happen if electricity is not discovered?

Man2: Nothing, we must watch TV in candle light.


Mr.X in airplane going 2 Bombay .... While its landing he shouted: " Bombay... Bombay "

Air hostess said: "B silent."

Mr.X: "Ok.. Ombay. Ombay"


Teacher: "What is common between JESUS, KRISHNA , RAM, GANDHI and BUDHA?"

Mr.X: "All are born on government holidays...! !!


Sir: What is difference between Orange and Apple?

Mr.X: Color of Orange is orange, but color of Apple is not APPLE


பிரிவு வேண்டாம்...மரணம் தா..

ச்சே ..என்னடி இது....
நினைக்கவே கூடாதுன்னு சபதம் எடுத்தாலும்...
நினைவுகளை....நில் என்று சொல்ல முடியவில்லை..



மரணம்...
ஒரு நாள் கூத்து...
ஒரு நாள் அழுகை..
ஒரு நாள் வலி..



உன் பிரிவு..
பலநாள் கூத்து ..
தினமும் வலி..
தினமும் அழுகை..

எனக்கு பிரிவு வேண்டாம்...மரணமே போதும்...!!

வியாழன், ஜூலை 29, 2010

நல்லதோர் வீணை செய்தே..

ரோஜாவின் ....பெயர் கொண்டவளே...
ராஜாவை போல் ...என்னை நடத்தி சென்றவளே....
இதோ ....மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்!



குறிப்பு: subtitle messages in this song is for me & u

புதன், ஜூலை 28, 2010

நண்பனின் பொண்டாட்டி ...சத்தியமா எனக்கு சிஸ்டர் தாங்க!!



டேய் வாசு ...வாடா வாடா மச்சி. நல்லாருக்கியாடா? பார்த்து எம்புட்டு நாள் ஆச்சுடா.. என்னடா மச்சி எங்களை எல்லாம் மறந்துட்டியா?


ச்சே ச்சே ...அப்படி ஒன்னும் இல்லடா ... எல்லோரையும் பார்க்கனும்னு ஆசை தான்..டைம் எங்கடா கிடைக்குது?


நானும் எங்கயும் போறதில்லைடா... வீடு...வேலைன்னு லைப் போய்கிட்டு இருக்கு...காலேஜ் முடிஞ்சதோட எல்லாம் போச்சுடா ...


ஆமா ஜீவா நீ நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் யாரையாச்சும் பார்த்தியாடா?


ப்ச் ...பார்க்கல மச்சி....கீதாவை மட்டும் பார்க்கணும் போல இருக்கு..


என்னது ..கீதாவா? அவளை எதுக்குடா நீ தேடுறே?


அது ஒண்ணுமில்ல ....காலேஜ் ல அவளை கொஞ்சம் கட்டம் கட்டுனேன்..சிக்குவான்னு பார்தேன் ....ஹ்ம்ம் ஒன்னும் வேலைக்கு ஆகலடா...ச்சே ..என்ன கலரு ..என்ன பிகரு...லேப் பக்கம் இரண்டுவாட்டி தனியா சிக்குனா ...எதாச்சும் பண்ணிடலாம்னு பார்த்தேன்....மிஸ் ஆயிட்டா மச்சி மிஸ் ஆயிட்டாடா.. ஹ்ம்ம் யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..


பாரு பேசிகிட்டே நீ எதுக்கு வந்தேன்னு கேட்க மறந்துட்டேன் பாரு...கூல்ட்ரிங்க்ஸ்...டீ ...எதாச்சும்...


நோ நோ ...ஒன்னும் வேண்டாம்...நான் என்னோட கல்யாண பத்திரிகை குடுத்துட்டு போலாம்னு வந்தேண்டா


அட மாப்ள சொல்லவே இல்ல.... வாழ்த்துக்கள்...ஆமா பொண்ணு யாரடா எந்த ஊருடா?


பொறுமை...பொறுமைடா .....சொல்லத்தானே போறேன்...உன்கிட்ட சொல்லாம இருக்க முடியுமா ...பொண்ணு வேற யாரும் இல்ல...இவளோ நேரம் நீ கட்டம் கட்டுனியே ....கீதா....அவ தாண்டா...எனக்கு வர போற பொண்டாட்டி...


!!!!!!!!!!!....@@@@@


காலேஜ்ல இருந்தே நாங்க லவ்வர்ஸ்....அதனாலதான் அவ யார் கிட்டயும் சிக்கல...இந்தா புடி கல்யாண பத்திரிகை....
பத்திரிகை குடுக்க வேண்டியது என்னோட கடமை......கல்யாணதுக்கு வராம இருகிறது உன்னோட கடமை.....மவனே கட்டமா கட்டுறே....வீட்டுப்பக்கம் உன்ன பார்தேன்....அம்புட்டுதான்டியோ....


*&^%!))(((


அடேய் வெங்க பயலே...வாய பொளந்துகிட்டு நிக்காதே...போய் தண்ணிய குடி.....நான் கிளம்புறேன்..



பின்குறிப்பு:


வாசு அவன் வீட்டுல ஒரு நாய் வளர்க்கிறானாம்....அது பேரு கூட ஜீவான்னு வச்சிருக்கானாம். அதோட கழுத்துல என்னோட ஒரு போட்டோ மாட்டி விட்டு....நீ யாரை கடிக்கிறியோ இல்லையோ ...இந்த போட்டோல இருக்கிறவன் வந்தா மட்டும் கண்டிப்பா அவன் பின்னால கடிச்சி வைக்கிறே - னு அதுகிட்ட சொல்லி சொல்லி வளர்த்துகிட்டு வரானாம் ...!


சத்தியமா சொல்றேன் மாப்ள.....உன்னோட பொண்டாட்டி எப்பவுமே எனக்கு சிஸ்டர் தாண்டா.....நம்புடா ....!!!


உனக்காக ஒரு பாடல்...

போகிற போக்கில்....இது உனக்காக மட்டும்


மொழிகள்

தெரிந்தும்ஊமையாகி விட்டேன்...

தொட்டு விட முடியாத

தூரத்தில்நீயும் நானும்..

முடிவில்லாக் கவிதையாய்...

கொட்டிக் கிடக்கின்றன

உன் நினைவுகள்...

ஒரு செக்ஸ் கதை (adults ஒன்லி)


படிக்கும் முன்பு: வயசுக்கு வந்த புள்ளைங்கமட்டும் இந்த கதைய படிச்சு பொது அறிவை வளர்த்துக்கணும்னு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். சின்ன புள்ளைங்க தயவு செய்து வெளிய ஓடிடுங்க...ம் ம் கிளம்பு கிளம்பு..



கொசு சாம்ராஜ்யத்தில் ஒரு வாய்ச்சவடால் கொசு இருந்த்தாம். வடிவேல் ரவுடியாக நடிப்பார் அல்லவா, அதை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரி கொசு அது. அது ஒருநாள் தன் சக கொசுக்களிடம் நான் யானையையே பஜனை பண்ணுவேன் தெரியுமா என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த்து. உடனே மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம். அது எப்படி அவ்வளவு பெரிய யானையை ஒரு கொசு புணர முடியும்? ஒரு கொசு கூட இந்த சவடால் கொசு சொன்னதை நம்பவில்லை. உடனே சவடால் கொசு ”நான் செய்து காட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்று கேட்டது.
சவால் ஏற்கப்பட்ட்து. ஆனால் கொஞ்சம் நேரமாகும்; எல்லோரும் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்றது சவடால். மற்ற கொசுக்களும் ஆர்வத்துடன் யானையை நெருங்கின.
சவடால் கொசு யானையின் பின்பக்கம் போய் ஒரு இட்த்தில் அமர்ந்து கொண்ட்து. மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம், இந்தக் கொசு எப்படித்தான் அவ்வளவு பெரிய யானையைப் புணரப் போகிறது என்று. ரொம்ப நேரம் ஆயிற்று. ஒன்றுமே நடக்கவில்லை. எல்லா கொசுக்களும் அந்த சவடால் கொசுவை முறைத்தன.
சவடால் கொசு “வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது; தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்ட்து. “இல்லையே” என்று கோரஸாக்க் கத்தின எல்லா கொசுக்களும்.
“பொறுங்கள்; பொறுங்கள்… இன்னும் கொஞ்ச நேரம்தான்; வேலை முடிந்து விடும்” என்றது.
அப்போது பார்த்து யானை தன் தும்பிக்கையை உயரே தூக்கி பிளிறியது. உடனே சவடால் கொசு யானையைப் பார்த்து “ஆ… வலிக்குதா… ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டது.


இதை பார்த்துகிட்டு இருந்த மத்த கொசு எல்லாம் தலை சுத்தி கீழ விழுந்துதாம்
இதை வேலை மெனக்கெட்டு படிச்ச நீங்க எல்லாம்..எங்காவது போய் உங்க தலைய முட்டிகொங்க..

சங்கீத மழை ...என்னுள் ...எப்போதுமாய்!

http://www.youtube.com/watch?v=YBLwBzc72Mc&feature=related

எனக்கு நீ....தூரத்து சொந்தம்...!!



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசைவந்தவனுக்கோ சென்று விட ஆசைஇதோ அயல்தேசத்து ஏழைகளின்கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும்விசா அரிப்புகளோடும் வருகின்ற கடிதங்களை நினைத்து நினைத்துபரிதாபப்படத்தான் முடிகிறது! நாங்கள் பூசிக்கொள்ளும்சென்டில் வேண்டுமானால்...வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?தூக்கம் விற்ற காசில்தான்...துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே...இளமை கழிக்கின்றோம்!எங்களின் நிலாக்காலநினைவுகளைஎல்லாம்...ஒரு விமானப்பயணத்தூனூடேவிற்றுவிட்டு கனவுகள்புதைந்துவிடுமெனத் தெரிந்தேகடல் தாண்டி வந்திருக்கிறோம்! மரஉச்சியில் நின்றுஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!வாரவிடுமுறையில்தான்..பார்க்க முடிகிறதுஇயந்திரமில்லாத மனிதர்களை!அம்மாவின் ஸ்பரிசம்தொட்டு எழுந்த நாட்கள்கடந்து விட்டன!இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டுஎழும் நாட்கள் கசந்து விட்டன!பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவுநேர கனவுக்குள் வந்து வந்துகாணாமல் போய்விடுகிறது!நண்பர்களோடு ஆற்றில்விறால் பாய்ச்சல்மாட்டுவண்டிப் பயணம்கண்ணாமூச்சி - பம்பரம் - கோலி - பட்டம் எனசீசன் விளையாட்டுக்கள்!ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...விளையாடி மகிழ்ந்த உள்ளுர்உலககோப்பை கிரிக்கெட்!இவைகளைநினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ...விசாவும் பாஸ்போட்டும் வந்து...விழிகளை நனைத்து விடுகிறது.!வீதிகளில் ஒன்றாய்வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!மாப்பிள்ளை அலங்காரம்!கூடிநின்று கிண்டலடித்தல்!கல்யாணநேரத்து பரபரப்பு!பழையசடங்குகள்மறுத்து போராட்டம்!பெண்வீட்டார் மதிக்கவில்லைஎனகூறி வறட்டு பிடிவாதங்கள்!சாப்பாடு பரிமாறும் நேரம்...எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!மறுவீடு சாப்பாட்டில்மணமகளின் ஜன்னல் பார்வை!இவையெதுவுமே கிடைக்காமல்"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...சங்கடத்தோடுஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...தொலைந்துவிடுகிறதுஎங்களின் நீ..ண்ட நட்பு!எவ்வளவு சம்பாதித்தும் என்ன?நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!காற்றிலும் கடிதத்திலும்வருகின்ற சொந்தங்களின்...நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்அரபிக்கடல் மட்டும்தான்...ஆறுதல் தருகிறது!
ஆம்இதயம் தாண்டிபழகியவர்களெல்லாம்...ஒரு கடலைத்தாண்டியகண்ணீரிலையே...கரைந்துவிடுகிறார்கள்;!"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...இதயம் சமாதானப்படுகிறது!இருப்பையும் இழப்பையும்கணக்கிட்டுப் பார்த்தால்எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...பெற்ற குழந்தையின்முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....முதல் பார்வை... முதல் கழிவு...இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும் ததுவிடுமா?கிள்ளச்சொல்லிகுழந்தை அழும் சப்தத்தை...தொலைபேசியில் கேட்கிறோம்!கிள்ளாமலையேநாங்கள் தொலைவில் அழும் சப்தம்யாருக்குக் கேட்குமோ?ஒவ்வொருமுறை ஊருக்குவரும்பொழுதும்...பெற்ற குழந்தையின்வித்தியாச பார்வை...நெருங்கியவர்களின் திடீர்மறைவுஇப்படி புதிய முகங்களின்எதிர்நோக்குதலையும்...பழையமுகங்களின்மறைதலையும் கண்டு...மீண்டும்அயல்தேசம் செல்லமறுத்துஅடம்பிடிக்கும் மனசிடம்.....தங்கையின் திருமணமும்...தந்தையின் கடனும்...பொருளாதாரமும் வந்து...சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறதுமீண்டும் அயல்தேசத்திற்கு!