
ஜீவா I hate you da..
நீ ஒரு நம்பிக்கை துரோகி..
என் மூஞ்சில இனிமேல் முழிக்காதே
என் கூட friendship வச்சுக்கவும் உனக்கு இனி உரிமை இல்லை..
என்னை பத்தி பேசவும் உனக்கு எந்த அருகதையும் இல்லை..
I hate you...I hate u...
வார்த்தைகள் படபட என அவளிடம் இருந்தது வந்ததை பார்த்து ஜீவா ஒரு கணம் ஆடி தான் போயிட்டான். கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்க்க ஆரம்பித்தது. அவளுடைய கோபத்தை முதன்முதலா பார்கிறான், ஆனாலும் உருகி உருகி இவ்ளோ நாளும் பழகிட்டு திடீர்னு இந்த வார்த்தைகள் அவ சொன்னதும் என்ன செய்யுறதுன்னு ஒரு கணம் புரியாமல் உறைந்து தான் போனான் ஜீவா. நிலவு ஏன் எப்படி சுடுகிறது? அவள் ரொம்பவும் பிடிவாதக்காரி, கொஞ்சம் திமிரும் கூட அவளுக்கு. ஒருவேளை அவளோட திமிரும் பிடிவாதமும் தான் நான் அவளை விரும்ப காரணமா இருந்ததோ?
"இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் வளர்த்து...
பூஜை செய்யும் வேளையிலே..... பறிகொடுதேனோ?"
ஹ்ம்ம் ...15 நாள் ஓடியே போச்சு.......எவ்வளவோ offline messages எல்லாம் குடுத்து பார்த்தாச்சு...ஹ்ம்ம் அவதான் பிடிவாதகாரியாச்சே...ஒரு பதிலும் காணோம். அவ இனி வரமாட்டா...ஐயோ...எனக்கு என்னாச்சு...மனசு ஏன் பிடிவாதமா அவளையே நினைக்குது...!
எங்கேயோ ஒரு "Buzz" sound..
டேய் எப்படிடா இருக்கிறே?
ஹய்யோ...உன்ன பார்த்து எத்தன நாள் ஆச்சுடா..
கண்ணு முழிச்சு பார்கிறேன் ....ஆஹா ....ரோசி....
Yahoo messenger - ல Message வந்திருக்கு ரோசிகிட்ட இருந்து..
அப்போ இவளோ நேரமும் ரோசி என்னை விட்டு போன மாதிரி எல்லாம் .....கனவா?....
மெல்ல மெல்ல மேகம் விலகி..நிலவு முகம் காட்ட தொடங்கியது...கூடவே ரோசி என்கிற ரோஜா பூவின் வாசமும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக