ஊருக்கு போனதும் முதல் வேலையாக ஜீவா படித்த காலேஜ் க்கு போக தீர்மானித்தான். தீபாவளி டைம் ஆனதால..மழைகொஞ்சம் சாரலாக அவன் முகத்தை நனைத்து. சில் என்ற காற்றில் மனம் படபடக்க அவன் படித்த காலேஜ் முன்பாக வந்து நின்றான். தீபாவளி லீவ் என்பதால் காலேஜ் ல யாருமே இல்லை. வாட்ச்மன் மட்டும் இருந்தான். பார்த்த உடனே அடையாளம் கண்டுகிட்டாரு
தம்பி நீங்க ஜீவா தானே
ஆமா தாஸ் அண்ணே..நல்லாருக்கீங்களா?
ஆமா தம்பி எதோ இருக்கேன்.. என்ன இந்த பக்கம்..
இல்லண்ணே...சும்மா காலேஜ் பார்த்திட்டு போலாம்னு ...என்று இழுத்தேன்..
வாங்க தம்பி இது உங்க காலேஜ் நல்லா பாருங்க...மழை நேரத்தில வந்திருகீங்களே தம்பி...அப்படின்னு சொல்லிட்டு சிரித்தார்..
இல்ல தாசண்ணே...இனி இது மாதிரி டைம் கிடைக்காது இல்ல...அப்படின்னு நான் சொல்லும்போதே...தாசண்ணன் காலேஜ் மெயின் கேட் திறந்து விட்டாரு...
ஆமா தாஸ் அண்ணே..நல்லாருக்கீங்களா?
ஆமா தம்பி எதோ இருக்கேன்.. என்ன இந்த பக்கம்..
இல்லண்ணே...சும்மா காலேஜ் பார்த்திட்டு போலாம்னு ...என்று இழுத்தேன்..
வாங்க தம்பி இது உங்க காலேஜ் நல்லா பாருங்க...மழை நேரத்தில வந்திருகீங்களே தம்பி...அப்படின்னு சொல்லிட்டு சிரித்தார்..
இல்ல தாசண்ணே...இனி இது மாதிரி டைம் கிடைக்காது இல்ல...அப்படின்னு நான் சொல்லும்போதே...தாசண்ணன் காலேஜ் மெயின் கேட் திறந்து விட்டாரு...
ஜீவா ஓட்டமும் நடையுமாக....கண்களை அந்த காலேஜ் முழுவதும் சுழல விட்டான்.. ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஜீவா என்று ரகசியமாக யுவாஞ்சலி கூப்பிடுவது போல ஒரு உணர்வு. கால்கள் மட்டும் தன்னிச்சையாக அந்த மகிழம்பூ மரம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது.
அதோ...அந்த விளையாட்டு மைதானத்துக்கு பக்கதுல ...மஞ்சள் நிற பூக்களை சூடிக்கொண்டு....என்னை போலவே மழை சாரலுடன் கொஞ்சி கொண்டு....எங்கள் காதல் மகிழம்பூ மரம்...
ஜீவா மெதுவாக அடி எடுத்து வைத்து அந்த மகிழம்பூ மரத்தின் அடியில் வந்தான். தரை எல்லாம் மகிழம்பூகள் மஞ்சள் நிறத்தில்....ஒரு பூவைகூட மிதிக்க கூடாது என்று எவளவோ முயற்சி செய்தும் சில பூக்கள் அவன் காலடியில் உயிரை விட்டன. மனம் பதறி விட்டது ஜீவாவுக்கு. ஐயோ என் காதல் பூக்கள் என் காலடியில் கல்லறையை தேடுவதா... மெதுவாக மரத்தை தொட்டு பார்த்தான். மனசு பூரா எதோ ஒரு சொல்ல முடியாத சந்தோசம் .
ஜீவா...வாடா அந்த மகிழம்பூ மரத்துக்கு அடியில போய் உட்காருவோம்..
ஹ்ம்ம் வாடி யுவா...நமக்கு புடிச்ச இடமே அது தானே..
என்னடா ஜீவா இவளோ பூ தரையில கிடக்குது..
அது ஒண்ணுமில்ல..நாம காதலர்கள் வாரோம்னு இந்த மகிழம்பூ மரத்துக்கு தெரியும். அதான் நம்மளை வரவேற்க இவளவு பூக்கள் டி
ஏன் ஜீவா இந்த மகிழம்பூ மரத்துக்கு நம்ம காதல் புரியுமா டா
கண்டிப்பா என் கண்மணி.. நம்முடைய காதல், சிரிப்பு, சிணுங்கல், அழுகை, சண்டை எல்லாமே இந்த மகிழம்பூ மரத்துக்கு நல்லாவே தெரியும் டி.
ஏன்டா ஜீவா இந்த பூக்கள் எல்லாம் பூக்கிறது நமக்காக தானே?
கண்டிப்பா யுவா...எப்போ எல்லாம் இந்த மகிழம்பூ மணம் எனக்கு கிடைக்குதோ அப்போ எல்லாம் கண்டிப்பா எனக்கு உன் நினைவு வரும்டி..
கண்டிப்பா யுவா...எப்போ எல்லாம் இந்த மகிழம்பூ மணம் எனக்கு கிடைக்குதோ அப்போ எல்லாம் கண்டிப்பா எனக்கு உன் நினைவு வரும்டி..
எல்லோருக்கும் காதலுக்கு என்ன எல்லாமா அடையாளம் வச்சிருப்பாங்க...நமக்கு இந்த மகிழம்பூ & அதோட மணம் வச்சுக்கலாமா ஜீவா
ஹ்ம்ம் கண்டிப்பா .... இந்த மகிழம்பூ மரம் எப்போதும் நமக்காக பூக்கும் நம் காதலை சொல்லும்டி..
ஜீவா ...I Love U ...டா ......யுவாஞ்சலி ஜீவா-வின் தோள்களில்
சாய்ந்துகொண்டாள்...கண்ணீருடன்..!
எதோ ஒன்று கன்னத்தில் ஊர்வது போல இருந்தது ஜீவா-வுக்கு...
அப்போதுதான் நினைவு வந்தவனாக அண்ணாந்து அந்த மகிழம்பூ மரத்தை பார்த்தான்..
ஜீவன்-வின் கண்களில் கண்ணீர் முட்டியது..
யாருக்காக இன்னும் பூக்கிறாய்......!!!
அப்போதுதான் நினைவு வந்தவனாக அண்ணாந்து அந்த மகிழம்பூ மரத்தை பார்த்தான்..
ஜீவன்-வின் கண்களில் கண்ணீர் முட்டியது..
யாருக்காக இன்னும் பூக்கிறாய்......!!!
மகிழம்பூ மரம் சிரித்தது....
நாளைக்கும் நிலவு வரும்...நாமிருக்க மாட்டோம்...
நாளைக்கும் பூ மலரும்...நாமிருக்க மாட்டோம்...
காதலை தான் வாழவைத்து..
காதலர்கள் போகிறோம்...
ஜீவன் போன பின்னாலும் செடி கொடியாய் வாழ்கிறோம்...
நாளைக்கும் நிலவு வரும்...நாமிருக்க மாட்டோம்...
நாளைக்கும் பூ மலரும்...நாமிருக்க மாட்டோம்...
காதலை தான் வாழவைத்து..
காதலர்கள் போகிறோம்...
ஜீவன் போன பின்னாலும் செடி கொடியாய் வாழ்கிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக