செவ்வாய், நவம்பர் 29, 2016

Love the Way ♥‿♥




Its rainy here....





After long I wished to write about my true love with whom I madly in love with. I think they are the only one who tend to make me feel happy in any situation possible....I wish to see it more often.

My first and special Love.......RAINS !!!!

When there is rain...I feel the love and start recollecting her memories. Love the way what i did...what she wants.


Love the way write poems for me.....
Love the way you send me those pics of intimacy..
Love the way you type love notes for me...
Love the way you call me different names..
Love the way you whisper your thoughts..
Love the way you playfully make me smile...
Love the way you show care to me..
Love your crazy ways of making love..
And the most beautiful...
I just Love the way you make my heart beat.. ♡

From Miles away...and Yes I am Charmed by YOU !!! 






With Love
Rasigan

திங்கள், நவம்பர் 28, 2016

Setup to Fail





அப்ரசண்டிகளா......இப்பவே சொல்லிடுறேன். செட்டப்ன்னா நீங்க நினைக்கிற "அந்த" செட்டப் கிடையாது. இது வேற..

சரி விஷயத்துக்கு வருவோம்.

ஆபிஸில் பாலிடிக்ஸ் என்பது சர்வ சாதாரணம். அதுவும் மிடில் மேனேஜ்மெண்ட்டில் இது தான் ஐநூறு ஆயிர ரூபாய் மாதிரி - ஜீவாதாரமே. ஒரு பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவர் இந்த பாலிடிக்ஸ் காரணமாக கைமாற்றும் சூழல் வந்தால் செத்தான் சிவனாண்டி. என்ன தான் எழவு ஹாண்ட் ஓவர் ப்ரொசீஜர்சை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு சரி பார்த்து வாங்கியிருந்தாலும் குடுக்கறவன் ஒள்ளிச்சு வைச்சிருப்பான் பாருங்க ஒரு கன்னிவெடி. திரில்லிங்கான ஒரு கேம். எல்லாம் சரின்னு திருப்திப்பட்டு "நானும் அடிக்கிறேண்டா சிக்ஸர்"- னு பேட்டை சுழட்டுறப்போ கரெக்ட்டா படக்கூடாத இடத்துல பால் படுமே அது மாதிரி ஒரு கண்ணிவெடி உள்ளுக்குள்ள வச்சிருப்பாங்க.

நீங்கள் எப்பேற்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும் இதையெல்லாம் ஜுஜுபி என்றாக்கிவிடும் மேலே சொன்னதை விட த்ரில்லிங்கான விளையாட்டு ஒன்று இருக்கிறது. பொண்டாட்டியை மூனு நாள் ஊருக்கு அனுப்பிவிட்டு வீட்டை சமாளித்துப் பாருங்கள்...அதுதான் கேம்.  இதுக்கு ஒரு எம்.பி.ஏ எவனாவது ஆரம்பிக்கக் கூடாதான்னு மனசு ஏங்கும்.

செல்லக்குட்டி மூணு நாள் அவ நண்பிகளுடன் ஹாலிடே. போகிறதுக்கு முன்பாக ஏகப்பட்ட ஹான்டோவர் ப்ரொசீஜர்கள்.

ஒரு வாரமாய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படி (ஹாண்ட் ஓவர்) ஒரே நச்சரிப்பு. (பொலிடிக்கல் கரெக்ட்னஸ்). அது வாங்கி ஸ்டாக் பண்ணவா இது வாங்கி ஸ்டாக் பண்ணவா... சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு போகவா ... 

நோ நோ நோ எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். வீ ஆர் க்ரோன் அப்ஸ் அண்ட் வீ நோ டு ஹாண்டில் சிச்சுவேஷன்ஸ்..கெத்தா சொல்லியாச்சு. இனி இம்ப்ளிமென்ட் பண்ணவேண்டியது தான் பாக்கி.

குக்கர் இங்க இருக்கு, அது அங்க இருக்கு... இது எங்க இருக்குன்னு தெளிவா ஹாண்ட் ஓவர் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அரிசி வைக்கப் போனால் குக்கர் வெயிட்டைக் காணோம். புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து தான். ஜேம்ஸ் வாட் இப்படித் தான் ஸ்டீம் இஞ்சினைக் கண்டுபிடிச்சாரா  தெரியவில்லை. போனை போட்டு ஹி ஹி என்று அசடு வழிந்து "அந்த குக்கர் வெயிட்" என்று சொன்னதும்,  "தெரியும் உங்க லட்சணம்...” என்ற கெக்கலிப்பில் ஆரம்பித்து அங்க பாரு இங்க பாருன்னு கடைசியில் ஒரு ட்ராவில் இருந்தது. என்ன ஒரு வில்லத்தனம். பரமசிவன் என்னிக்காவது பாம்பை கழட்டி வைச்சிருக்காரா...குக்கர் வெயிட் பாத்திரம் தேய்த்து (உணர்த்திய கையோடு) மூடியிலேயே இருக்க வேணாமா?... 

பாத்திரம் தேய்ப்பதெல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல அசால்ட்டா செய்வேன் என்றாலும் கரெட்டாய் ஒரு ஷிப்ட் பாத்திரத்துக்கு அப்புறம் டிஸ்பென்சரில் லிக்விட் சோப் காலி. ரீபில் மெகா பாட்டிலை காணோம். மறுபடியும் போன்...ஹி ஹி என்ற அசடு வழிதல். "சை ... ”இதுக்குத் தான் என்ன வேணும் என்ன வேணும்ன்னு ஒரு வாரமா கேட்டேன்” - ஈஸ்வரா இந்த indispensable factor". செல்லக்குட்டி தலையில் அடித்துக்கொண்டது எனக்கு துல்லியமாக போனில் கேட்டது.

டீ போடறதுக்கு என்னிடம் கண்ணன் தேவனே வந்து டியூஷன் எடுத்துக்கணும். அதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்ற சவுடாலெல்லாம் கரெக்ட்டா தான் போச்சு. ஏலக்காய் இஞ்சியை இடிக்க குட்டி மசாலா இடிக்கும் உரலைத் தேடினால் உரல் இருக்கு இடிக்கும் கம்பியைக் காணோம். இனி இதற்க்கு போன் போட்டால் செல்லக்குட்டி ப்ரோக்ராம் கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு நேராகவே வந்து உரலில் இடிக்கும் கம்பியால் என்னை இடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால்....இந்த வாரம் ...க்ரீன் டீ வாரம்...!

ச்சை... போதும் நிறுத்திக்கிறலாம் என்று தற்சமயம் சரவணபவன் அண்ணாச்சியும், பிட்ஸா ஹட் பாயும் சேர்ந்து நம்ம வீட்டு சிச்சுவேஷன்ஸை ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: இதெல்லாம் எங்களுடன் வேலை பார்க்கும் சிவராம ஐயரின் அரட்டை குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட இன்பர்மேஷன்.

இப்படிக்கு
ரசிகன் 

திங்கள், நவம்பர் 07, 2016

பச்சையாய் ஒரு கொலை (Part 3)





கோயமுத்தூர் காலையிலே பாலித்தீனில் சுற்றப்பட்டு பிரிட்ஜில் வைத்த காய்கறி போல் லேசாக வியர்த்து இருந்தது.

"ஹாப்பி பர்த்டே டு யு ஜீவா ..."

குரல்கள் கோரஸாக ஒலிக்க ஜீவா நேற்று நடந்த சம்பவத்தின் நினைவுகள் துளியுமில்லாமல் சந்தோசமாக கேக் வெட்டிக்கொண்டிருந்தான்.

பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஹால் பூராவும் நிறைந்திருந்தார்கள். கைகளில் கூல்ட்ரின்க்ஸ் பாட்டில்கள். ஜீவாவின் அப்பாவும் அம்மாவும் வாசலில் நின்று வருகிறவர்களை கும்பிட்டு உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஜீவாவின் நண்பர்கள் அவனது தோளை இடித்தனர். "என்ன சார் ....உன்னோட வருங்கால மாமனாரும் வருங்கால மனைவியும் இன்னும் பங்ஷனுக்கு வரல போல..."

"அரைமணி நேரத்துல வந்துடறதா ஹோட்டல்ல இருந்து கொஞ்சம் முன்னாடிதான் போன் பண்ணிருந்தாங்க."

"பொண்ணு பேரென்ன மாளவிகாவா?"

"ம் ..ம்"

"நேர்ல பாத்திருக்கியா?"

"இல்ல...போட்டோல தான்"

"எப்படியிருக்கா?"

"அமர்க்களமான இருக்கா"...ஜீவா மெலிதாய் புன்னகைத்தான்.

"மாப்பிளைக்களை முகத்தில இப்பவே வந்துட்டே"

"ஆமா..நேத்தைக்கு நைட் சென்னையிலிருந்து மிட்நைட் பிளைட் புடிச்சா கோயமுத்தூர் வந்தே?"

ஆமா ..

"என்ன நண்பா....சென்னைல டைட் என்கேஜ்மென்டோ?" கேட்டுக்கொண்டே ஃபிரண்ட் ஒருவன் குறும்பாய் கண்ணாடிக்க - அப்போதுதான் ஜீவாவுக்கு சட்டென்று ரெஜினாவின் முகம் நியாபகம் வந்தது. போலீஸ் இந்த நேரம் கேஸை எந்த கோணத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருப்பார்கள்?

அவள் என்னுடைய அறையில் இருந்துதான் கீழே விழுந்திருக்கிறாள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியுமா?

"நான் எந்த எவிடன்சும்  விட்டுவிட்டு வரலியே?"

"ஜீவா....என்னடா யோசனை" - அவன் அப்பா ஜீவாவின் தோளில் தட்டினார்.

ஜீவா சுதாரிப்புக்கு வந்தான். - "ஒ ...ஒண்ணுமில்லப்பா."

"என்னாச்சு மை டியர் சன் ...ஆர் யு ஆல்ரைட்?"

"எஸ் ....எஸ் ....ஐயம் ஆல்ரைட் பா."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே ....வாசலில் உயர்தர கார் ஓன்று வந்து நிற்பதும் அதிலிருந்து கிருஷ்ணாவும் மளவிகாவும் இறங்கி ...ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையோடு ஹாப்பி பர்த்டே சொல்லிக்கொண்டே ஜீவை கட்டி பிடித்தார் கிருஷ்ணா என்கிற வருங்கால மாமனார்.

சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பின் ஜீவாவின் வருங்கால மாமனார் ஒரு சிறிய சதுர பெட்டியை அவனிடம் நீட்டினார். "மாப்பிளைக்கு இந்த வருங்கால மாமனாரோட பிறந்தநாள் பரிசு. ஒரு டயமண்ட் வாட்ச். ஓபன் பண்ணி பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க மாப்பிளை". 

ஜீவா அந்த பெட்டியை ஓபன் செய்தான். விலையுயர்ந்த டைமண்ட் வாட்ச் பெட்டிக்குள் டாலடித்தது. "தேங்க்ஸ் மாமா. இட்ஸ் சோ நைஸ்."

"இது என்ன மாப்பிளை பிரமாதம். இதை விட விலையுயர்ந்த என் பொண்ணையே உங்களுக்கு தர போறேன்." கடைவாயில் தங்கப்பல் தெரிய சிரித்தார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் சத்யா கூடவே சப்-இன்ஸ்பெக்டர் மதன், லோக்கல் ஏரியா இன்ஸ்பெக்டர் சகிதம் வாசலில் நின்றிருந்த ஒருவனிடம் "இங்க ஜீவா என்கிறது?"

"ஹி ஐஸ் தெயர்...தி பர்த்டே பாய்" - கைகளில் இருந்த கூல்ட்ரிங்கஸ் கோப்பை தளும்பாமல் காமித்தார்.

"தேங்க்ஸ்"....ஜீவாவை நோக்கி நடந்தார்கள்.

பேசிக்கொண்டே எதேச்சையாக வாசலை பார்த்த ஜீவா துணுக்குற்றான். உடம்பில் ஒரு வெப்பம் பரவி குப்பென்று முகம் வியர்த்து சூடு பரவியது.

சத்யா ஜீவாவின் மிக அருகில் நெருக்கமாக வந்து குரலை தாழ்த்திக்கொண்டு ..."மிஸ்டர் ஜீவா"

"எ ..எஸ் ஐயாம்"

"எங்க கூட கொஞ்சம் வாரீங்களா?"

"எ ...என்ன விஷயம்?"

"அதை அப்புறம் சொல்றோம். மொதல்ல கொஞ்சம் எங்க கூட வெளிய வாங்க"

என்ன நடக்கிறதென்று புரியாமலே...எல்லாரும் பார்த்துக்கொண்டு நிற்கும்போதே ஜீவாவின் அப்பா பக்கத்தில் வந்தார்.

"என்ன மேடம் என்ன ப்ராப்ளம்?"

"நீங்க?"

"ஐயாம் ஜீவா'ஸ் பாதர். எதுனாலும் நீங்க எங்கிட்ட சொல்லாலாம்."

ஜீவா கர்சீப்பால் முகத்தில் முளைத்த வியர்வை துளிகளை ஒற்றிக்கொண்டே முகம் வெளிறியபடி நின்றுகொண்டிருந்தான்.

"சென்னைல ஒரு பொண்ணு டெத் சம்பந்தமா உங்க பையனை என்கொய்ரி பண்ண வந்திருக்கோம்"

ஜீவாவின் அப்பா முகம் மாறினார்.

"மேடம் என்னையும் என் பையனையும் யார்னு நினைச்சீங்க ?" - குரலை சற்று உயர்த்தினார்.

சத்யா நிதானமாக ஜீவா பக்கம் திரும்பி ..."லிசன் மிஸ்டர் ஜீவா, இங்க தேவையில்லாத ஒரு சீன் கிரியேட் பண்ணவேண்டாம்னு நினைக்கிறோம். வி டூ ஹாவ் ப்ராப்பர் அரெஸ்ட் வாரண்ட். உங்களை எந்த கேள்வியும் கேட்காம வண்டியில தூக்கி போட்டுக்கிட்டு போக எங்களுக்கு தெரியும். ப்ளீஸ் கோவாப்பரேட் வித் அஸ்"

"ஒ ...ஓகே ...மேடம் நான் உங்ககூட வரேன். லேட் அஸ் கோ"

என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் வந்திருந்தவர்களின் பேச்சுக்குரலும் சலசலப்பும் அணைந்து போயிற்று.

போலீஸ் ஸ்டேஷனில் சத்யா டேபிளின் ஒருமுனையில் காலை தரைக்கு ஊன்று கொடுத்தவாறே உட்காந்திருக்க ஜீவா இன்ஸ்பெக்டர் முன்னால் செயரில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். ஜீவாவிற்கு நா உலர்ந்து தொண்டையில் எரிச்சல் போல் உணர்ந்தான்.

"ஹ்ம் ...சொல்லுங்க ஜீவா. அந்த பொண்ணு யாரு?"

"எ ...எந்த பொண்ணு மேடம்?"

"சென்னைல நீங்க தங்கியிருந்த ஹோட்டல்ல ஆறாவது மாடியில இருந்து விழுந்து செத்தாளே அந்த பொண்ணு? அவ யார்னு நீங்க தான் சொல்லணும்."

"மே ...மேடம்..."

"நீங்க ரூமை 10 நிமிசத்துல வெக்கேட் பண்ணி போயிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா?"

"எ ...என்ன மேடம் சொல்றீங்க? எனக்கு எதுமே புரியல."

சத்யா... சட்டென்று மேஜையிலிருந்து எழும்பி தன்னோட பாண்ட் பாக்கெட்டில் கர்சீப்பில் பத்திரமாக மடித்து வைத்திருந்த ஒருஜோடி கொலுசுகளை மேஜை மீது வைத்தாள்.

"இது செத்துப்போன பொண்ணோட காலில் மாட்டியிருந்த கொலுசுகள்."

சத்யா அந்த கொலுசுகளை கையில் எடுத்து அதன் குண்டு மணி விளிம்புகளை ஜீவாவின் கண்களுக்கு அருகாமையில் காட்டினாள். 

"நல்ல பாருங்க...அந்த குண்டு மணி விளிம்புகளில் தீற்றல் தீற்றலா ஒரு கலர் ஒட்டியிருக்கு. அது என்ன நிறம்னு சொல்றீங்களா மிஸ்டர் ஜீவா?"

குரலில் லேசாக கடுமை தெறித்தது.

"ப...பச்சை கலர் மேடம்."

"வெரிகுட்."

சத்யா இப்போது டேபிளின் மேலிருந்த தன்னுடைய மொபைலை அன்லாக் செய்து உயிர்ப்பித்தாள். பரபரவென்று அதன் ஸ்க்ரீனை தேய்த்து ஒரு போட்டோவை எடுத்து  ஜீவாவிடம் காட்டினாள்.

"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ஹோட்டல் தானே?"

"எ ...எஸ் மேடம்."

"இதுல நீங்க ஸ்டே பண்ணியிருந்தது ஆறாவது மாடி. "

ஜீவா கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கினான் 

"அந்த மாடி சிட் - அவுட் குட்டை சுவருக்கு என்ன கலர் பெயிண்ட் பூசிருக்காங்க?" போட்டோவை ஸூம் செய்து காட்டினாள்.

"ப ....பச்சை."

"அதுக்கு மேல இருக்கிற ஏழாவது மாடிக்கு?"

"ம...மஞ்சள் "

"கீழ இருக்கிற ஐந்தாவது மாடிக்கு?"

"வ..வயலட் "

"சோ...அந்த ஹோட்டல்ல பச்சை கலர் பெயிண்ட் பூசின ஒரே சிட் - அவுட் நீங்க ஸ்டே பண்ணியிருந்த அதே ஆறாவது மாடி சுவருக்கு மட்டும் தான்."

ஜீவா கண்களில் கலவரம் லேசாக பரவ ஆரம்பித்தது.

சத்யா இப்போது வேறு ஒரு போட்டோவை ஓபன் செய்து ஸூம் செய்து காட்டினாள்.

"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ரூம் சிட் - அவுட்டில் உள்ள பச்சை கலர் குட்டை சுவர். அந்த போட்டோல பாருங்க சுவரோட மேற்பரப்புல கீறல் கீறலா விழுந்திருக்கு அந்த கீறல் கோடுகளில் பெயிண்ட் கூட காணாம போயிருக்கும். அது எப்படின்னு உங்களுக்கு புரியுதா?" சத்யாவே தொடர்ந்தாள் - "அந்த பெண் இந்த மாடியிலிருந்து விழுந்திருக்கா...அவ கால்ல இருந்த கொலுசோட குண்டு மணி விளிம்புகள் சுவரோட பெயிண்ட் பரப்பை தேய்ச்சுகிட்டே விழுந்திருக்கு. அந்த பச்சை கலர் பெயிண்ட் தான் அவ கொலுசு குண்டு மண்டியில ஒட்டியிருந்த பச்சை கலர் பெயிண்ட். அந்த ரூம் சிட் - அவுட்டுக்கு வேற எப்படியும் நுழைய முடியாது. அப்படி நுழையணும்னா உங்க ரூம் வழியா இருக்கும் ஒரே கதவுதான் மார்க்கம்.   சோ .... இனி நீங்க தான் சொல்லணும் இந்த பச்சையாய் ஒரு  கொலை எபிஸோடை எப்பிடி முடிக்கணும்னு. உங்களுக்கே தெரியும் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட செகண்ட் கிரேட் விசாரணை எப்பிடி இருக்கும்னு."

சத்யா ஜீவாவிற்கு பின்னால் வந்து இரண்டு கைகளாலும் ஜீவாவின் தோள்களை அமுக்கினாள்.

ஜீவா....டேபிளின் மேல் கண்ணாடி கிளாசில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு தொடர்ந்தான்...

"அவள் பெயர் ரெஜினா.."

முற்றும்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

ஜக்கம்மா சொல்லிட்டா !





"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!"

நடு இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு சாமகோடாங்கியின் குரல் துல்லியமாகவும் அதே நேரம் தூரமாகவும் கேட்டது. எங்கோ ஒரு நாய் கோடாங்கியின் சப்தத்தில் எரிச்சலாகி ஓங்கி பெருங்குரலில் குரைத்துக்கொண்டிருந்து. இப்போது கோடாங்கியின் சப்தம் இன்னும் கொஞ்சம் நெருங்கி கேட்டது.

"நல்லகாலம் பொறக்குது! ....நல்லகாலம் பொறக்குது!! கைவிட்டதெல்லாம் கைக்கு வரப்போகுது. வாய்விட்டதெல்லாம் பகை மறந்து போக போகுது. நல்லகாலம் பொறக்குது!...நல்லகாலம் பொறக்குது!"

சாமகோடாங்கியின் குரலில் ஜீவாவிற்கு முழிப்பு வந்தது. எப்போதும் இரவில் டிவியில் பாட்டு  பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவது அவன் வழக்கம். எழுந்து வீட்டின் உள்பக்கம் பார்த்தான். வேறு யாருக்கும் குடுகுடுப்பைக்காரனின் சத்தம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்பாவின் குறட்டை சத்தம் மட்டும் சீராக கேட்டுக்கொண்டே இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி 2:30 என்று காட்டியது. பக்கத்திலிருந்த சொம்பிலிருந்து ஒருவாய் தண்ணீரை குடித்துக்கொண்டே வெளிப்பக்க கதவின்  அருகே வந்து நின்றான்.

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா....அந்த ஜக்கம்மாதான் மலைப்போல வர்றதை பனிபோல மாத்தணும்."

ஜீவாவுக்கு தூக்கிவாரி போட்டது. காரணம் சாமகோடாங்கி ஜீவாவின் வீட்டின் முன்னாள் நின்றுகொண்டு குறி சொல்லிக்கொண்டு இருந்தான். சொன்னதையே இன்னும் இரண்டுவாட்டி கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு சாமக்கோடங்கி அடுத்தவீட்டை நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!" சமகோடாங்கியின் குரலும் உடுக்கை சப்தமும் வீட்டுக்கு வீடு தாவி சன்னமாக உடைந்துபோய்க்கொண்டிருந்தது.

ஜீவாவிற்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்தது போலிருந்தது. "என்ன இந்த கோடாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி வந்து மட்டும் இப்படி சொல்லிட்டு போறான்?"சாமக்கோடாங்கி குறி சொல்றதெல்லாம் நிஜமா நடக்குமா? - உடம்பு லேசாக நடுங்க தொடங்கியது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தான். மனதிற்குள் ஹோ......என்ற இரைச்சலுடன் ஏதோ உழலுவதை போல உணர்ந்தான். அப்பிடியே கோடாங்கி சொன்னமாதிரி ஏதும் கெட்டது நடந்தா அது எந்த மாதிரி கெட்டது? மனதிற்குள் தேவையில்லாத நினைவுகள் எல்லாம் சுழன்று சூறாவளியாய் அடித்தது. "ச்..சே ...சே ...அப்படி எதுவும் நடக்காது". தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எதற்குமே விடை தெரியாமல்....எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப்போனான்.

அம்மாவும் தங்கச்சியும் நின்று வேலைசெய்யும் அடுப்படியில் தலைக்கு மேல் இருக்கும் பரணில் அந்த இரவு நேரத்திலும் பூனைகள் இரண்டு விளையாடிக்கொண்டிருந்தது. பூனைகளின் விளையாட்டினால் என்றோ ஒருநாள் வேண்டாம் என்று தூக்கி போட்ட இரும்பினால் ஆன தேங்காய் உரிப்பான் ஒன்று தன்னுடைய கூர்மையான தலையை நீட்டி ஒரு இன்ச் முன்னால் நகர்ந்தது.

"டேய் ....ஜீவா எழுந்திருடா. மணி 8 ஆகுது இன்னுமாடா தூங்குறே? வேலைக்கு போகல?"

அம்மாவின் குரல் கேட்டு லேசாக கண்முழித்து பார்த்தான். போர்வையை உதறிவிட்டு எழுந்தான். வழக்கம் போல ஆபிஸ் போக ரெடி ஆனான். நேற்று இரவு நடந்ததை சுத்தமாக மறந்துவிட்டிருந்தான். வாசலில் வந்து சிட் -அவுட்டில் உட்காந்து அன்றைய தினசரி நாளிதழை அவசரம் அவசரமாக புரட்டும்பொழுது பக்கத்துக்கு வீட்டு சந்திரா அக்கா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஆமா...நேத்தைக்கு சாமக்கோடாங்கி வந்தான்க்கா.."

"எப்போ?"

"டைம் சரியா தெரியல. எனக்கு லேசா முழிப்பு வந்துது. ஆனா வெளிய வந்து பார்க்கலக்கா."

ஜீவாவிற்கு நேற்று இரவு நடந்ததெல்லாம் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு துகள்களை போல பரபரவென்று மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. நாளிதழை மடித்து வைத்துவிட்டு வீட்டுக்குள் போய் ஒருதடவை கண்களை சுழல விட்டான். அடுப்படியில் அம்மா பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் காய்கறி நறுக்கிவிட்டு கத்தி அடுப்படியில் வழக்கம் போல் இருந்தது. ஜீவா அதை எடுத்து கத்தி ஸ்டான்ட் -இல் வைத்தான். அம்மா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

"அட....என்னடா இது...புள்ளைக்கு திடீர்னு பொறுப்பு வந்திருக்கு"

ஜீவா...ஒன்றும் பேசாமல் லேசாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து ஹால் பக்கம் வந்தான். ரூமிற்குள் தங்கை ஏதோ செய்வது போல் தெரிந்தது, அயன் பாக்ஸை கையில் எடுத்து துணி அயன் பண்ண போவது தெரிந்தது.

"ஏய்....இரு! இரு!!" - கொஞ்சம் சத்தமாக சொல்லிக்கொண்டே அவளிடம் ஓடினான்.

"ஏய்ய்.....என்ன பண்ண போறே?"

"ஹ்ம் ....பார்த்தா தெரியல? துணி அயன் பண்ண போறேன்."

"இரு... இரு...எங்க உன் கைய காட்டு. பாரு குளிச்சுட்டு தலை துவட்டி கையில ஈரம் இன்னும் இருக்கு. இத வச்சுக்கிட்டு அயன் பாக்ஸை தொடலாமா? மொதல்ல கைய நல்லா துடைச்சுக்கோ. ஈரமான கை வச்சுக்கிட்டு கரண்ட்ல வேலை செய்யலாமா?"

"ஏய் என்னாச்சு உனக்கு இன்னைக்கு? டெய்லி நான் இப்பிடி தானே அயன் பண்ணிட்டு போறேன்."

"விதண்டாவாதம் பண்ணாதே. போ... போய் சொன்ன மாதிரி கைய தொடைச்சுக்கிட்டு வா."

அவள் முணுமுணுத்துக்கொண்டே போனாள்.

அம்மாவும் தங்கச்சியும் அவனை குறுகுறுவென்று பார்த்தார்கள். என்னாச்சு இவனுக்கு இன்னைக்கு.

"டேய் ...என்னடா ஆச்சு? காலையிலே ஒருமாதிரி நடந்துக்கிறே??"

"ஒண்ணுமில்லமா...இங்க பாருங்க எது பண்ணாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!"

இரண்டுபேரும் அவனை எதோ வேற்றுகிரகவாசியை பார்க்கிற மாதிரி பார்த்தார்கள்.

ஜீவா அதைப்பற்றி எல்லாம் கவலை படவில்லை. கோடாங்கி சொன்னதே அவன் மனதுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது.

"சாமக்கோடாங்கி ஏன் அப்படி சொன்னான்? அவன் சொன்ன கெட்டகாலம் என்னவா இருக்கும்? "

ஆபிஸில் ஜீவாவிற்கு வேலையே ஓடவில்லை. மனதிற்குள் ஒருவிதமான பயப்புயல் உருவாகிக்கொண்டே இருந்தது 

சாமகோடாங்கி சொன்னது என்னவா இருக்கும்?

"டேய் ...மச்சி..."

"என்னடா .."

"மச்சி ...இந்த சாமக்கோடங்கி சொல்றதெல்லாம் பலிக்குமாடா ?"

"ஹா....ஹா .....ஹா"

"என்னடா புதுசா ஏதும் வேலைக்கு சேர போறியா?"

"அட ....சொல்லுடான்னா."

"எனக்கு தெரிஞ்சவரைக்கும் அது பலிக்க சான்சே இல்ல. இருந்தாலும் நம்ம வீட்டில உள்ள பெருசுங்க இன்னும் அது ஏதோ தேவதூதனின் மெசேஜ் னு நினைச்சு பலிக்கும்னு தான் நம்புறாங்க."

"பலிக்குமா பலிக்காதான்னு கேட்டா ஒண்ணு பலிக்கும் சொல்லு இல்லாட்டி பலிக்காதுன்னு சொல்லு. நீ வேற சும்மா கன்பியூஷ் பண்ணாதே."

"என்னதான்டா உன் பிரச்னை? காலையில இருந்து ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறே?"

"ஒண்ணுமில்லடா"

ஒண்ணுமில்லை என்று சொல்லிவிட்டாலும் ஜீவா காதுகளில் சாமக்கோடாங்கி சொன்னது திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

பொறுக்க முடியாதவனாக....போன் எடுத்து வீட்டு நம்பருக்கு சுழற்றினான். கொஞ்சம் நேரம் ரிங் போய்ட்டு பின்பு ஜீவாவின் அம்மா போன் எடுத்தார்கள்.

"அம்மா .."

"என்னம்மா எங்க போயிட்டே? போன் எடுக்க இவளோ நேரமா?"

"டேய்.....போன் வந்த உடனே வழக்கம்போல வந்து எடுத்தேன். இன்னைக்கு என்ன ஏதோ போன் எடுக்க நேரம் ஆனா மாதிரி கோபப்படுறே?"

"சரி சரி....ஒண்ணுமில்ல. என்ன பண்றீங்க?"

"வீட்டு பின்னாடி துணி காயப்போட்டு நின்னேன்டா. ஒருநாளும் இல்லாம இன்னைக்கு என்ன போன்? ஏதும் விஷயம் இருந்தாத்தானே நீ போன் பண்ணுவே?"

"ஒ ...ஒண்ணுமில்ல. சும்மா பேசணும்னு தோணிச்சு. தங்கச்சி காலேஜ் போயிட்டாளா?"

"ஹ்ம்ம் ...போயிட்டா"

"சரிம்மா ...நான் போன் கட் பண்றேன்."

கொஞ்சம் நேரம் ஏதோ வேலை பார்த்தோம் என்று, சுரத்தே இல்லாமல் ஏதேதோ பண்ணினான்.

மறுபடியும் போனை எடுத்து சுழற்றினான் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு. அப்பாவின் பெயரை சொல்லி "கொஞ்சம் பேச முடியுமா?"

"இருங்க...கூப்பிடுறேன்"

அப்பா லைனில் வந்தார்.

"யாரு?"

"அப்பா நான் தான் ஜீவா."

"என்னடா திடீர்னு போனெல்லாம்?"

"ஒண்ணுமில்லப்பா....சாப்டீங்களா?"

இல்லப்பா ..ஒரு கார் சர்வீஸுக்கு வந்துது. அத முடிசிட்டு சாப்பிடணும்.

"என்னப்பா டெய்லி மத்தியான சாப்பாட்டை 3 மணிக்கும் 4 மணிக்கும் சாப்பிடுறீங்க. இல்லாட்டி வெறும் டீ குடிசிட்டு சாப்பாட்டை வீட்டுக்கு திரும்பி கொண்டுவந்துடுறீங்க."

"நம்ம வேலை அப்படிப்பா."

"சரி சரி சீக்கிரம் முடிசிட்டு சாப்பிடுங்க. - போனை கட் பண்ணினான்."

"யாருக்கும் எந்த பிராபிளமும் இல்ல. நாம தான் தேவை இல்லாம டென்ஷன் ஆகுறோமோ?"

வீட்டில் மறுபடியும் பூனைகள் பரண்மேல் விளையாட  தொடங்கின. தேங்காய் உரிப்பான் கொஞ்சம் கூட முன்னால் நகர்ந்து வந்தது.

தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதீத ஜாக்கிரதை புலர்த்திக்கொண்டிருந்தான். அடிக்கடி நினைவில் வரும் சாமக்கோடங்கியின் குறிச்சொல் சில நேரம் மனதில் கூட்ஸ் வண்டிபோல் வந்துகொண்டே இருந்தது. சிலநேரம் கிணற்றில் போட்ட கல்லைப்போல் சலனமற்று கிடந்தது. ஆனாலும் தினம் தினம் ஜீவாவின் மனதில் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது.


"அம்மா...ஆட்டோல போகிறப்போ நல்ல புடிச்சுக்கோங்க."

"நான் என்ன சின்ன புள்ளையாடா? திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு."

"டி .....காலேஜ் போறப்போ ரோடு கிராஸ் செய்றப்போ பார்த்து கிராஸ் செய்."

"ஹ்ம்ம்....உன் இம்சை அளவில்லாம போகுது டா."

"அப்பா ...ஒர்க் பண்ற இடத்துல சேப்டி எல்லாம் ஒழுங்கா பார்த்துக்கோங்க. வண்டிக்கு அடியில நின்னு ஒர்க் பண்றப்போ மறக்காம ஹெல்மெட் போடுங்க."

"நான் என்ன இன்டர்நேஷனல் கம்பெனிலையா வேலை பார்க்கிறேன். அப்பா சிரித்தார்"

ஒருநாள் அம்மா வீடு கொல்லைப்பக்கம் மீன் கழுவிக்கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் அம்மாவின் பக்கத்தில் விழுந்து அம்மாவை முகத்தினருகே விருட்டெண்டு பறந்து சென்றது.

ஜீவா அதை பார்த்து பதறிவிட்டான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டைக்கு போய்விட்டான்.

"மரத்துல தேங்காய் பழுத்திருந்தா ஆள் விட்டு பறிங்க. அடுத்தவங்க தலையில விழுறவரை வெயிட் பண்ணுவீங்களா?  இனி ஒருவாட்டி தேங்காயோ மட்டையோ எங்க வீட்டுப்பக்கம் விழுந்துது நடக்கிறதே வேற!!!!"

அம்மா தான் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்தாள்.

"டேய் ....தென்னை சதிக்காது டா. இந்த உலகத்துல தேங்காய் விழுந்து எத்தனைபேரு செத்திருக்காங்க சொல்லு?"

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா."

ஜீவாவிற்கு மண்டைக்குள் அந்த உடுக்கை சத்தம் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. "போம்மா ....நீ போய்  கிச்சன்ல வேலைய பாரு. தங்கச்சி எங்க? உனக்கு ஹெல்ப் பண்ணாம என்ன பண்றா அவ..." சீறினான் ஜீவா 

"டேய் அவ அடுப்படியில தாண்டா நிக்கிறா. அவளை பார்த்துக்க சொல்லிட்டு தான் நான் மீன் கழுவ போனேன்."

பூனைகள் பரணின் மேல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. தேங்காய் உரிப்பான் முன்னைவிட இன்னும் நீளமாக தன்னுடைய கூரிய நாக்கினை தலைக்குமேல் நீட்டிக்கொண்டிருந்தது.

நாட்கள் ஓடிவிட்டது. ஜீவாவிற்கு சாமகோடங்கியின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மனதை விட்டு மறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் வீட்டில் எதாவது அசாதாரணமாக ஏதும் நடந்தாலோ, வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் திரும்பிவர கொஞ்சம் தாமதம் ஆனாலோ சாமக்கோடங்கி மனதிற்குள் உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடுவான்.

"மிஸ்டர் ஜீவா...உங்களுக்கு ஒரு கால்." -   ரிஷப்சனிஸ்ட்டின்  குரலை தொடர்ந்து இன்டெர்காமை எடுத்து வெளியிலிருந்து  வரும் அழைப்பை  தொடர்புகொண்டான்.

அம்மா தான் பதட்டத்துடன் பேசினாள்.

"ஜீவா ..அப்பாவிற்கு திடீர்னு உடம்புக்கு முடியலடா."

ஜீவாவிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது..

"என்னம்மா....என்ன ஆச்சு?"

"தெரியலடா ..அம்மாவின் குரல் உடைய தொடங்கியது. வேலை செய்யுற இடத்துல திடீர்னு 2-3 தடவ வாந்தி எடுத்தாராம். அப்புறம் கீழ விழுந்துட்டாராம். கூட வேலை பார்க்கிறவங்கதான் பக்கத்தில இருக்கிற CSI ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்கங்களாம். விஷயம் கேள்விப்பட்டதும் ஆட்டோ புடிச்சி நான் ஹாஸ்பிடல் வந்துட்டேன். டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்கடா."

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. "சாமக்கோடங்கியின் சத்தம் மெலிதாக கேட்க ஆரம்பித்ததுபோல் இருந்தது ஜீவாவிற்கு. 

"சே.....அழாதம்மா. ஒன்னும் ஆகாது."

"எனக்கென்னமோ பயமா இருக்குடா."

"ஐயோ ...அம்மா பயப்படாதே. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. சாப்பிடாம வேலை பார்த்திருப்பாரு. அதனால தான் இப்படி ஆகியிருக்கும்."

"நான் இதோ பெர்மிஷன் போட்டுட்டு ஹொஸ்பிடலுக்கு வர்ரேன்மா".

"ஜீவா....நான் வீட்டில போட்டது போட்டபடி வந்துட்டேன். நீ வீட்டுக்கு போய் அப்பாவுக்கு ஒரு ட்ரெஸ்ஸும் எடுத்துட்டு ஒரு பிளாஸ்கும் எடுத்துட்டு வா. காஸ் எல்லாம் ஆப் பண்ணேனான்னு கூட தெரியல. "

"சரி நீ பதட்டப்படாதே. நான் வீட்டுக்கு போய்ட்டு பக்கத்துக்கு வீட்டில தங்கச்சி வந்தா விஷயத்தை சொல்ல சொல்லிட்டு நீ கேட்டதை எடுத்துட்டு வாரேன்."

போனை கட் செய்துவிட்டு ஆபீசில் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. மனதிற்குள் ஆயிரம் தடவை சொல்லிக்கொண்டாலும், சாமக்கோடங்கி சொன்னதும் அவ்வப்போது வந்து மனதில் பயம் காட்டியது.

வீட்டை அடைந்து கதவை திறந்து அடுப்படி பக்கம் ஓடினான். அடுப்படியில் தேங்காய் உரிப்பான் தலை குப்புற விழுந்து கிடந்தது. அதன் கூரிய நாக்கு குத்தியதில் தரை ஓடுகள் நான்கைந்து உடைந்து சிதறி கிடந்தன. 

இப்போது அதை பார்க்க டயம் இல்லை. "அப்பாவுக்கு என்னாச்சோ !"

கிச்சனில் பரபரவென்று எல்லாவற்றையும் சரி பார்த்தான், அம்மா எடுத்துவர சொன்னவற்றை எடுத்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டான். வீட்டைப்பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு தங்கை வந்தவுடன் விபரத்தை சொல்ல சொன்னான். ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.

அப்பா பெட்டில் ஒருக்களித்து படுத்திருக்க கலங்கிய கண்களுடன் அம்மா தாடையில் கையை வைத்துக்கொண்டு அப்பாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் அருகில் சென்று தோளைதொட்டான்.

"அம்மா...டாக்டர் என்ன சொன்னாங்க?"

"எனக்கொன்னும் புரியலடா. என்னமோ குடல்ல ஓட்டை விழுந்திருக்காம் ஆபரேஷன் பண்ணனும் சொல்றாங்க."

இருங்க...நான் போய் டாக்டர் கிட்ட விபரத்தை கேட்டுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே டாக்டர் இருக்கும் அறையை நோக்கி ஓடினான். விபரத்தை கேட்டுக்கொண்டு அம்மாவிடம் வந்தான்.

"டாக்டர் என்னடா சொல்றாரு?"

"அப்பா டயத்துக்கு சாப்பிடாதது தான் பிரச்சினை. சும்மா டீ குடிச்சே சமாளிச்சா இப்படித்தான். அல்சர் வந்து குடல்ல புண் ஆகி ஓட்டை விழுந்திருக்காம். ரெண்டு இடத்துல. அதனால குடல்ல உள்ள கழிவெல்லாம் ப்ளட்ல மிக்ஸ் ஆகுதாம். நாளைக்கு ஈவினிங் ஆபரேஷன் பண்ணியாகணுமாம்."

"ஆபரேஷன் பண்ணா சரி ஆகிடுமா?"

"ஹ்ம்....சரி ஆகிடும்மா. டாக்டர் பயப்படவேண்டாம்னு சொல்லிட்டாரு."

கட்டிலின் ஒரு ஓரத்தில் உட்காந்து அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்கள் மூடிக்கொண்டு அப்பா இன்னும் ஒருக்களித்து படுத்திருந்தார். அப்பாவின் கையை அம்மா தன் கையிலெடுத்து லேசாக தடவிக்கொண்டிருந்தாள். ஒரு கையில் ட்ரிப் ஏறிக்கொண்டிருந்தது.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம்.....

"ச்சே ...என்ன இது இந்த நேரத்தில அதை போய் நினைச்சுகிட்டு" ஜீவா டக்கென்று சிந்தனையை கலைத்துவிட்டு..

"அம்மா  .....தங்கச்சி வீட்டில தனியா இருப்பா. காலேஜ் முடிஞ்சு வந்திருப்பா. நைட் கூட யாராச்சும் இருக்கணும்."

"நீ போ ஜீவா. நான் பார்த்துகிறேன் இங்க."

"இல்லம்மா ...நீங்க தனியா..."

"அதுதான் பக்கத்து பெட்ல எல்லாம் நிறையபேர் இருக்காங்களே."

"உங்களுக்கும் அப்பாவுக்கும் நைட் சாப்பாடு?"

"அதெல்லாம் வேண்டாம்டா. உங்கப்பா குணமாகி எழும்புனாலே போதும். நாளைக்கு ஆபரேஷன் இருக்கிறதால அப்பாவுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவேண்டாம் வெறும் நீராகாரம் மட்டும் குடுத்தா போதும்னு டாக்டர் சொல்லிருக்காங்க."

"அம்மா...கவலை படாதீங்க. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காருல்ல."

"ஹ்ம்ம்.."

"நீங்களும் பட்டினி கிடந்தது ஏதும் ஆகிற போகுது. நான் பொய் ஹோட்டல்ல ஏதும் சாப்பிட வாங்கி குடுத்துட்டு போறேன் என்று சொல்லிக்கொண்டே ஜீவா கிளம்பினான்."

"அம்மாவுக்கு இரவுக்கு இட்லி வாங்கி குடுத்துவிட்டு...அப்பாவை ஒருகணம் பார்த்தான்.கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது."

"அம்மா பார்த்துக்கோங்க ...நான் போய்ட்டு காலையில வந்துடுறேன்" என்று கிளம்பினான்.

வீட்டில் தங்கை அழுது அழுது கண்கள் வீங்கிப்போய் உட்காந்திருந்தாள். எங்கே அவளை பார்த்தால் தானும் அழுதுவிடுவோம் என்று அவளை தவிர்த்துவிட்டு கிச்சன் பக்கம் போய் பார்த்தான். உடைந்த தரை ஓடுகள் எல்லாம் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு தேங்காய் உரிப்பான் ஒரு மூலையில் பத்திரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தங்கை தான் சுத்தம் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது.

தங்கையிடம் வந்து நிலைமையை எடுத்து சொல்லி அவளை சமாதானம் பண்ணினான்.

இரவு....நீண்டு கொண்டே போனது...எப்போதுடா விடியும் என்று தோன்றியது.

காலையில் தங்கை செய்து குடுத்த காலை உணவும், அம்மாவுக்கு தேவையான பேஸ்ட் பிரஸ் எலாம் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போக ரெடி ஆனான் ....போன் அடித்தது...

போனை எடுத்தான்.....

அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டே 

"ஜீவாவாவா......அப்பா நம்மை எல்லாம் விட்டு போயிட்டாருடாஆஆஆ....."

ஜீவாவிற்கு ஒரு கணம்.....எதுமே புரியவில்லை.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. 

உடுக்கை சத்தம் மட்டும் சம்மட்டி அடியாக தலைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கையிலிருந்த கூடை கீழே தடாலென கீழே விழுந்து சாப்பாட்டை சிதறடித்துவிட்டு பாத்திரம் உருண்டோடியது. கண்களில் மொத்த கண்ணீரும் அன்றே பாய்ந்துவிடும் நோக்கில் பீறிட்டுக்கொண்டு வந்தது.

சத்தம் கேட்டு...ஓடி வந்த தங்கை ஜீவா நிற்கும் நிலையை பார்த்து டக்கென்று போனை பிடுங்கி காதில் வைத்து....ஓ என்று அலற ஆரம்பித்தாள்.

ஆயிற்று...3 வருடங்கள். அப்பா என்னும் ஆணிவேர் அறுந்து காலங்கள் ஓடிவிட்டது. இப்போதெல்லாம் ஜீவாவிற்கு சாமக்கோடங்கியின் குறிசொல்லும் உடுக்கை சத்தமும் மனதிற்குள் கேட்பதே இல்லை.


இரவு 2.00 மணி.

நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது" ....எங்கோ கனவில் கேட்பது போல் இருந்தது ஜீவாவிற்கு. டக்கென்று முழித்து பார்த்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது....."

சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த குரல் கேட்டது. . கண் விழித்தபிறகும் கேட்கிறது. இது காணவில்லை.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது"

குரல் அருகாமையில் கேட்டது.

ஜீவா அனிச்சையாக சோபாவில் கழற்றிப்போட்ட சட்டையின் பையை துளாவினான். எவ்வளவு என்று தெரியாது கொஞ்சம் கரன்சி நோட்டுகள். கையை இறுக்கமாக மூடியபடியே வெளிக்கதவை திறந்தான். ஸ்விட்சை தட்டி விளக்கை உயிர்ப்பித்தான். சாமக்கோடங்கி ஜீவாவின் வீட்டை நோக்கி நகர்ந்து வந்து உடுக்கை அடிக்க கையை தூக்கியதும்.

"ஷ்... ஷ்... ஷ்... ஷ்" என்று உதட்டின் குறுக்கே விரலை வைத்து சைகையால் அவனை மௌனமாக்கினான். கையில் இருந்த கரன்சி நோட்டுகளை அவனிடம் நீட்டினான். சாமக்கோடங்கியும் எதுவும் பேசாமல் அமைதியாக அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது......ஜக்கம்மா சொல்றா நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது."

விளக்கை அணைத்துவிட்டு கதவை மூடிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். 

அடுத்த நொடி வாழ்க்கையில் நல்லதா கெட்டதா என்பது தேவை இல்லை!. இந்த நொடி...இது தான் வாழ்க்கை.  இந்த நொடி என்ன நடக்கிறதோ அதை இருக்கைகள் நீட்டி ஏற்றுக்கொள்வதே போதும். 

போர்வையை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

ஆமா ....இன்னைக்கு சாமக்கோடங்கி சொல்லவந்தது நல்ல காலம் பொறக்குதுன்னா? கெட்டகாலம் பொறக்குதுன்னா?

ஜீவாவின் சாமக்கோடங்கி மீண்டும் உடுக்கை அடிக்க ஆயத்தமானான்.


இப்படிக்கு
ர.சி.க.ன் 

வியாழன், நவம்பர் 03, 2016

பச்சையாய் ஒரு கொலை (Part 2)





ரெஜினா ஆறாவது மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து கான்கிரீட் தரையில் மோதி சிதறியதும் ஜீவா பதட்டமில்லாமல் அவளிடம் இருந்து பறித்த சங்கிலியையும் லெட்டரையும் கடிதத்தையும் பிளஸ் அவுட் சிங்கில் போட்டு தண்ணீரை பீச்சி உள்ளே போக செய்துவிட்டு சிட்டவுட் கதவை தாளிட்டு முன்னறைக்கு வந்தான். டிரஸ் மாத்தி சூட்கேஸ் எடுத்துவிட்டு ஒருதடவை அறையை நன்றாக நோட்டமிட்டான். எதுவும் விட்டு போகவில்லை என்று நம்பிக்கை வந்தவுடன் அறையிலிருந்து வெளிப்பட்டு யாருமில்லாத இருட்டான வராண்டாவில் நடந்து காலியாக இருந்த லிஃப்டுக்குள் நுழைந்தான். பட்டனை தட்டி ஜி ப்ளோருக்கு வந்து ரிஷப்சனை அடைந்தான்.

ரிசப்ஷன் கவுண்டரில் லேசான பதட்டம் 

வாட்ச்மேனுக்கு பின்னல் ரெண்டுபேர் ஓடிக்கொண்டிருந்தார்கள். ரிசப்ஷன் பெண்ணின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை.

ஜீவா அவள் முன்னே பொய் நின்றான்.

"பில் பிரிப்பர் பண்ணிடீங்களா?"

"இ ....தோ ..."

"என் பிளைட் டிக்கெட் ?"

"ரெடி சார்.."

"நான் எவ்வளவு பணம் தரணும்."

தொகையை சொன்னாள் அவள். ஜீவா முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பர்ஸிலிருந்து பணத்தை எண்ணி கொடுத்தபோது  - வாச்மேன் பேரர்களோடு ஓடிவந்தான். 

"போலீசுக்கு போன் பண்ணுங்கம்மா?"

"யாருன்னு அடையாளம் தெரிஞ்சுதா ?"


"தெரியலை  - ஆனா கீழ விழுந்து செத்துப்போன பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முந்தி மெயின் கேட் வாசல்ல என்கிட்ட வந்து உள்ள போக பர்மிசன் கேட்டுச்சு. நான் அல்லோவ் பண்ணல. ஆனா எப்டியோ உள்ள வந்திருக்கா."

"அவ யாரை பார்க்கணும் சொன்னா?"

"அவளும் சொல்லல...நானும் அதை பத்தி கேட்கலம்மா. பத்து மணிக்கு மேல அந்நிய பெண்களை உள்ள விடறதில்லைனு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்."

ஜீவா  பணத்தை ரிசப்ஷன் பெண்ணிடம் நீட்டிகொண்டே கேட்டான் - 

"என்ன விஷயம்? யாருக்கு என்ன நடந்தது?

"யாரோ ஒரு பெண் மாடியிலிருந்து விழுந்துவிட்டாள்."

"மை ..குட்னஸ்!" - ஜீவா போலி அதிர்ச்சி காட்டியதை அவள் கவனிக்காமல் அவசரம் அவசரமாக போலீசுக்கு போன் செய்துகொண்டிருந்தாள்.

ஜீவா காத்திருந்தான். அவள் போலீசுக்கு போன் செய்துவிட்டு வியர்த்து போய் திரும்பினாள்.

"நீங்க பணத்தை பே பண்ணிடீங்களா?"

"பண்ணிட்டேன் ..."

"பிளைட் டிக்கெட்?"

"இன்னும் நீங்க தரல .....தந்தா புறப்படுவேன்."

அவள் மேஜை டிராயரை திறந்து டிக்கெட்டை எடுத்துக்கொண்டே சொன்னாள் .."சாரி சார் அந்த பெண் மாடியிலிருந்து விழுந்த சம்பவத்தின் காரணமா  கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டேன்."

"நான் கிளம்பலாமா ?"

அவள் தலையாட்டினாள்

ஜீவா வெளியே வந்தான். போர்டிகோவை கடக்கும்போது ஹோட்டலின் இடதுபக்க கோடியில் கொஞ்சம் பேர் சின்ன கும்பலாய் தெரிந்தார்கள். டார்ச் லைட் ஒன்று அவசரமாய் அலைந்துகொண்டிருந்தது.

குரல்கள் கேட்டது 

"போலீசுக்கு போன் பண்ணியாச்சா?"

"ஆச்சு ..."

"எந்த மாடியிலிருந்து விழுந்திருப்பா?"

"ஹெட்டொட ஸ்மேஷ் கண்டிஷனை பார்த்தா எட்டாவது மாடியிலிருந்து விழுந்திருப்பானு தோணுது"

"எப்பிடி விழுந்தான்னு தெரியலியே"...குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஜீவா ஹோட்டலின் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே வந்து அங்கிருந்த டாக்ஸி ஸ்டாண்டை நெருங்கி ஒரு பிரைவேட் டாக்ஸியை பிடித்தான்.

"ஏர்போர்ட் போகணும்."

"ராத்திரி நேரம் எக்ஸ்ட்ரா ஆகும் சார்."

"ஹ்ம் ....வாங்கிக்க"

மார்ச்சுவரி வேன், போலீஸ் வேன் பக்கம் பக்கமாய் நின்றிருக்க - மண்டை இரண்டாய் உடைந்து கான்கிரீட் தரைக்கு உடம்பு ரத்தம் முழுவதும் தானமாய் கொடுத்திருந்த மிருதுளாவை சுற்றி போலீஸ் தலைகள். பிரகாசமாய் இரண்டு எமர்ஜன்சி விளக்குகள். ஹோட்டலின் பெரும்பாலான அறை ஜன்னல்கள் திறக்கப்பட்டு தலைகள் எட்டி பார்த்துக்கொண்டிருந்தன.

ரிசப்ஷனில் இருந்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் சத்யா விசாரித்து கொண்டிருந்தாள். "இறந்த பெண் உங்க ஹோட்டலில் ஸ்டே பண்ணிருந்தாளா?"

"இல்லை மேடம்"

"ஹோட்டலில் தங்கியிருந்த யாரையோ பார்க்க வந்தவ ...ஆனா அவ ரிசப்ஷன் வழியா உள்ள போகல..அப்படித்தானே?"

"ஆமா மேடம்..."

"அப்படின்னா அந்த பொண்ணு யாரையோ பார்க்கிறதுக்காக திருட்டுத்தனமா மேல போயிருக்கா. போன இடத்துல சம்பவம் நடந்திருக்கு. பை த பை இப்போ ஹோட்டல்ல எத்தனை பேர் தங்கிருக்காங்க?"

"அல்மோஸ்ட் ஃபுல் மேடம். ரெண்டு ரூம் மட்டும் காலியா இருக்கு. அதிலும் அரைமணி நேரத்துக்கு முன்னாடி தான் ஒருத்தர் ரூமை காலி பண்ணிட்டு மிட்நைட் பிளைட் பிடிக்க ஏர்போர்ட் போனார்."

"அவர் பேரு ?"

"மிஸ்டர் ஜீவா. ஆனா அவரை இது சம்பந்தமா சந்தேகப்பட முடியாது சார். அவர் சாயந்திரம் ஆறு மணியிலிருந்தே கோயமுத்தூர் போக பிளைட் டிக்கெட்டுக்காக அலைமோதிட்டு இருந்தார். சம்பவம் நடக்கிறதுக்கு பத்து நிமிசத்துக்கு முன்னால தான் டிக்கெட்டே அவருக்கு கன்பார்ம் ஆச்சு. டிக்கெட் கன்பார்ம்ஆனதும் புறப்பட்டு போயிட்டார்.  "

"அவர் எந்த ரூம்ல தங்கியிருந்தார்?"

"சிக்ஸ் நாட் டூ"

"எந்த ஃப்ளோர்?"

"சிக்ஸ்த்  ஃப்ளோர் மேடம்"

பக்கத்தில் இருந்த சப் - இன்ஸ்பெக்டரிடம் திரும்பினாள் இன்ஸ்பெக்ட்டர். "மதன் நீங்க அந்த ரூமை போய் ஒரு க்ளான்ஸ் பாருங்க. ரூம்ல ஸ்டரக்ளிங் சிம்ப்டம்ஸ் இருக்கானு பாத்துருங்க."


சப்-இன்ஸ்பெக்டர் மதன் தலையாட்டிவிட்டு ஒரு கான்ஸ்டபிளோடு லிஃப்டை நோக்கி போனார். அவர் போனதும் போலீஸ் போட்டோகிராபர் பக்கத்தில் வந்து "மேடம்" ...

"எஸ்..."


"இந்த பொண்ணோட முகத்தை பேப்பர்ல போடறதுக்கு வசதியா ஸ்நாப் பண்ண சொன்னாங்க"

"ஆமா.."

"தட் இஸ் இம்பாசிபிள் மேடம்"

"ஏன்?"

"முகம் முழுவதும் தரையில் மோதி சிதைஞ்சு போயிருக்கு மேடம்"

வாட்ச்மேனிடம் திரும்பினார் இன்ஸ்பெக்டர் 

"காம்பவுண்ட் கேட்டுக்கு பக்கத்துல வச்சு அந்த ...பொண்ண பார்த்தது நீ தானே?"

"ஆமா மேடம் "

"செத்துக்கிடக்கிற பொண்ணோட முகம் அடையாளம் தெரியாம சிதைஞ்சு போயிருக்கும்போது, இது அந்த பொண்ணுதான்னு எப்படி சொல்றே?"

வாட்ச்மேன் லேசாக பயத்துடன் எச்சில் விழுங்கிக்கொண்டே சொன்னான். "மேடம் அந்த பொண்ணு கட்டியிருந்த சேலை நிறத்தை வச்சுதான் அப்பிடி சொன்னேன்."

"முகம் அழகா இருந்துதா?"

"ஓரளவுக்கு லட்சணமான பொண்ணு மேடம்."

"ஏதாவது அடையாளம் சொல்லு பார்க்கலாம்."

வாட்ச்மேன் ஷேவிங் செய்யப்படாத தாடையை சொறிந்துகொண்டே "எனக்கு எப்பிடி சொல்றதுன்னு தெரியல மேடம்"

"உன் மனசுல அவ முகத்தை பத்தி என தோணுதோ அதை சொல்லு." 

"ஹ்ம்ம்.....ஓரளவுக்கு நடிகை அஞ்சலி மாதிரி இருப்பாங்க மேடம்."

"ஹோட்டலுக்குள் அவ யாரை பார்க்கணும்னு சொன்னா?"

"யாரையும் குறிப்பிட்டு சொல்லல மேடம். ஒருத்தரை பார்க்கணும்னு பொதுவாத்தான் சொன்னா. ராத்திரி பத்து மணிக்கு மேல அந்நிய பெண்களை உள்ள விட்றதில்லனு சொன்னதும் ...அவ உடனே போயிட்டா மேடம்."

ஜீவா தங்கி இருந்த ரூமுக்கு போன சப்-இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார்.

"மேடம் செக் பண்ணிட்டேன். உள்ள ஸ்டரக்ளிங் சிம்ப்டம்ஸ் ஏதும் இல்லை. ஆல் திங்ஸ் அட் பொசிசன் மேடம்."

"ரூம் சிட்டவுட் ல இருந்து பார்த்தா பொண்ணு விழுந்த இடம் ஸ்ட்ராங்கா இருக்கா?"

"இல்ல மேடம் கொஞ்சம் தள்ளி இருக்கு."

"அப்படின்னா அந்த பொண்ணு மிஸ்டர் ஜீவா தங்கியிருந்த ரூம்ல இருந்து விழுந்திருக்க சான்ஸ் இல்ல...அப்பிடித்தானே?"

"எஸ் மேடம்..."
சத்யா தொப்பியை கழட்டி கையில் வைத்துக்கொண்டு கலைந்த முடியை லேசாக சரி செய்தபடியே..."என்ன மதன் இந்த கேஸ் ரொம்ப கன்பியூஸ் பண்ணும் போல....ஹ்ம்ம். செத்துப்போனவ யார்னும் தெரிய வாய்ப்பில்லை. எப்பிடி செத்தா கொலையா தற்கொலையானும் ஒரு அவுட்லைன்க்கு வர முடியல?"


டக்கென்று தலையில் தொப்பியை மாட்டிவிட்டு ...."சரி நீங்க ஒன்னு பண்ணுங்க ஃபர்தர் ப்ரொசீஜர்ஸ் கொஞ்சம் ஸ்பீடப் பண்ணுங்க. மொதல்ல டாக்டர் ரங்கராஜனை காண்டாக்ட் பண்ணி இன்னைக்கு நைட்டே போஸ்ட்மார்ட்டம் முடிச்சிர சொல்லுங்க. டுமாரோ எர்லி மார்னிங் ரிப்போர்ட் என் கைக்கு வந்தாகணும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல ஏதும் தெரியுதா பார்க்கலாம்."


சப்-இன்ஸ்பெக்டர் விறைப்பை உடம்பில் காட்டிக்கொண்டே - "எஸ் மேடம்"


தூக்கம் தொலைத்த கண்களுடன் இன்ஸ்பெக்டர் சத்யாவும் சப்-இன்ஸ்பெக்டர் மதனும் காலையிலே மார்ச்சுவரி டாக்டர் அறையில் உட்காந்திருந்தார்கள். காலைநேரம் மார்ச்சுவரி கும்பல் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிப்போயிருந்தது.


டாக்டர் ரங்கராஜன் காலையிலே நெற்றியில் தீட்டிய பட்டையுமாக தனது ரூமுக்குள் நுழைந்தார். "சாரி மேடம் ரொம்ப காக்க வச்சுட்டேனோ?"

"ஓ...இட்ஸ் ஓகே டாக்டர். வி ஜஸ்ட் அரைவ்ட்"


 டாக்டர் மேஜை டிராயரை திறந்து ஒரு பையிலை எடுத்து சத்யாவிடம் நீட்டினார் - "இந்தாங்க மேடம் நீங்க கேட்ட ரிப்போர்ட்...கிளியர் ஹெட் ஸ்மாஷ் ஆன் த புளோர் அண்ட் சடன் டெத். வேற எதுவும் பெருசா அப்நார்மல் ஃபைண்டிங்ஸ் இல்ல."

ஓகே ...டாக்டர். பாடிய பார்க்கலாமா?

எஸ்..ஷுர்


சத்யாவும் மதனும் மருந்து நெடி அடிக்கும் காரிடோரில் ரங்கநாதனை பின்தொடர்ந்து பிணவறையை அடைந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக தகர டேபிளில் பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன. ரெஜினாவின் பாடியை நெருங்கி அதன்மேல் போர்த்தியிருந்த காடாத்துணியை டாக்டர் உருவினார்.பார்மலின் திரவத்தின் வாசனை நாசியில் ஏற இருவரும் கர்சீப்பினால் மூக்கை பொத்திக்கொண்டார்கள். உள்ளாடைகளோடு விறைத்த ரெஜினாவின் உடல் பார்வைக்கு வந்தது. முகம் சுத்தமாய் நாசம்.


சத்யா நிமிஷ நேரம் அந்த உடம்பை பார்த்தாள். உடம்பின் ஒவ்வொரு அங்குலமாய் பார்வையை நகர்த்திக்கொண்டே வந்தாள்.
குங்குமம் அப்பிய மாதிரி ரத்த முகம். அதில் ஒட்டியிருந்த தலை முடிகள். வளையல்கள் நசுங்கியிருந்த கைகள், தொடை முறிந்து சிம்பு சிம்பாய் நீட்டி இருக்கும் எலும்புகள். குதிகால்களில் கொலுசுகள்.


"உடம்பை மூடிடலாம்.." என்று டாக்டருக்கு சைகை காட்டிய சத்யா நகர முயன்று சட்டென்று நின்றாள்.


"ஒரு நிமிஷம் டாக்டர்" என்று ரங்கராஜனை கையமர்த்திவிட்டு ரெஜினாவின் கால்களுக்கு பக்கத்தில் வந்து நின்றாள்.


அந்த இரண்டு கொலுசுகளையும் சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு மதனிடம் திரும்பி - "இந்த இரண்டையும் கழற்றுங்கள்" என்றாள்.

மதன் கழற்றினான்


அதை கொஞ்சம் நேரம் கையில் வைத்து புரட்டி பார்த்துக்கொண்டே....ஒரு சிறு புன்னகையுடன் மூச்சு விட்டாள் சத்யா. கொலுசுகளை கர்சீப்பில் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டே மதனை ஏறிட்டாள்.


"ஹ்ம்ம் சரி....வண்டி எடுங்க...நாம மறுபடியும் அந்த ஹோட்டலுக்கு போறோம்"

சத்யாவும் மதனும் மறுபடியும் அந்த ஹோட்டலுக்கு போனபோது ராத்திரி நடந்த மோசமான சம்பவத்தின் சுவடே தெரியாமல் ஹோட்டல் கலகலப்பாக இருந்தது.கஸ்டமர்கள் அறைக்காக சோபாவில் காத்திருக்க - ரிஷப்சனிஸ்ட் பெண்கள் இரண்டுபேரும் - ஒருத்தி லெட்ஜரிலும் ஒருத்தி டெலிபோனிலும் கவனமாய் இருந்தார்கள்.ஹோட்டலின் மேனேஜர் இன்ஸ்பெக்டரை அடையாளம் கண்டுகொண்டு எழுந்து வந்தார்.

"எஸ் மேடம்."

"நேத்து ராத்திரி மாடியிலிருந்து விழுந்து இறந்துபோன பொண்ணை பற்றி ஃபர்தர் என்கொயரிக்கு வந்திருக்கோம். "

"வெல்கம் மேடம்."

"ஆமா ..நேத்தைக்கு அந்த பொண்ணு மாடியிலிருந்து விழுந்து இறந்துபோன பத்தாவது நிமிடத்தில் ஜீவா என்கிற நபர் ரூமை காலி செய்துவிட்டு போனார் இல்லையா?"

"ஆமாம்"

"அவர் தங்கியிருந்த அறையை வேற நபர் யாருக்காவது குடுத்துடீங்களா?"

"இன்னும் இல்லை மேடம்."

"சரி ...அந்த அறையை ஒருதடவை பார்க்கணும்."

"ஒரு நிமிஷம்" ...சொன்னவர் கீபோர்டுக்கு போய் சாவியை எடுத்துக்கொண்டு வந்தார்..."வாங்க"

மூன்று பெரும் லிப்டில் மேலே போய் அறை எண் "602"குள் நுழைந்தார்கள். சத்யா அறையை ஒருதரம் பார்வையால் அலசிவிட்டு சிட்-அவுட் கதவை திறந்து கொண்டு அந்த கிரில் வைத்த குட்டை சுவருக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். குனிந்து கீழே பார்த்தாள்.

அறுபது அடிக்கு கீழே கான்கிரீட் தளம் சதுரம் சதுரமாய் தெரிந்தது.

"பிறகு மதனை நோக்கி....மிஸ்டர் மதன் இங்கேயிருந்து அந்த பெண் கீழே தள்ளப்பட்டிருந்தால் நேத்தைக்கு பாடி கிடந்த இடத்தில அவள் விழுந்திருக்க சான்ஸ் இருக்கே. நீங்க நேத்தைக்கு சான்ஸ் இல்லைனு சொன்ன மாதிரி எனக்கு நியாபகம்."

"மே ...மேடம் ...வாய்ப்பு இருக்கு ஆனா அதே வாய்ப்பு இதே வெர்டிகிள் லைனில் இருக்கிற மற்ற அறைகளின் சிட் - அவுட்டுக்கு உண்டே மேடம்."

"யு...ஆர்...கரெக்ட். அவ விழுந்தது எந்த சிட் - அவுட் என்கிறதைத்தான் நாம கண்டுபிடிக்க இங்க வந்திருக்கோம்."

"சரி ...நீங்க ஒன்னு பண்ணுங்க. கீழ ரிசப்ஷன் போயி அந்த ஜீவாவோட வீட்டு அட்ரெஸ்ஸ கலெக்ட் பண்ணுங்க.... அண்ட் மேக் ஷ்யூர் அது அவரோட ப்ராப்பர் அட்ரஸ்தான்னு.  எனக்கு இங்க ஃபர்தரா கொஞ்சம் செக்கிங் இருக்கு. நீங்க நான் சொன்னதை முடிச்சிட்டு கால் பண்ணுங்க. "

மதன் ஒரு சல்யூட்டை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சத்யா அந்த குட்டை  அங்குலம் அங்குலமாக கண்களை மேயவிட்டுக்கொண்டே ...

"மேனேஜர் ..."

"எஸ் மேடம் ..."

"இந்த ஜீவா உங்க ஹோட்டல் ரெகுலர் கஸ்டமரா?"

"எஸ் மேடம். அடிக்கடி இங்க வந்து தங்குவாரு?"

"ஆள் எப்பிடி? ஐ ..மீன் ....ஸ்டே வித் எனி கேர்ள்ஸ்?"

"நோ...நோ மேடம். ஸ்டே ஆல்வெய்ஸ் அலோன்."

"ஹ்ம்ம்...."

சத்யாவின் செல்போன் சிணுங்கியது.

"எஸ்.. மதன் சொல்லுங்க."

"மேடம் நீங்க சொன்ன மாதிரி அட்ரஸ் கலெக்ட் பண்ணி செக் பண்ணிட்டேன். இட்ஸ் ஜெனூன்."

"எந்த லொகேஷன்?"

"கோயமுத்தூர் மேடம்."

"குட்....நீங்க உடனே ஹோட்டல் ரிசப்ஷன்ல சொல்லி உங்களுக்கு எனக்கும் நெஸ்ட் எதாவது ஒரு பிளைட்ல டிக்கெட் புக் பண்ண சொல்லுங்க."

"மேடம்..."

எஸ்...நாம உடனே கோயமுத்தூர் போறோம். அப்பிடியே அந்த அட்ட்ரஸ்ல இருக்கிற ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு தகவல் சொல்லுங்க.

"ஓகே ...மேடம் "

"போனை அணைத்துவிட்டு...மேனேஜரிடம் திரும்பி...ஓகே மிஸ்டர்ர் ர் ......"

"ராகவன்...."

"ஓகே.. மிஸ்டர் ராகவன். தேங்க்ஸ் பார் யுவர் கைன்ட் கோவாப்பரேஷன்." சொல்லிவிட்டு ரூமைவிட்டு வெளியேறி லிஃப்டை நோக்கி நடந்தாள் சத்யா.

தொடரும் ..

பச்சையாய் ஒரு கொலை (Part 1)





ஜீவா இன்டெர்காமில் ஹோட்டல் ரிஷப்சனிஸ்ட்டிடம் சற்று பதட்டமாக பேசிக்கொண்டிருந்தான். இரவு மணி 10:12.

"நோ..நோ..நான் நாளைக்கு கோயமுத்தூரில் இருந்தே ஆகணும். ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மை வேர்ட்ஸ். நாளைக்கு எனக்கு பெர்த்டே. வீட்டில எல்லாரும் க்ராண்டா கொண்டாடணும்னு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. எப்படியாவது பிளைட் டிக்கெட்க்கு ஏற்பாடு பண்ணுங்க."

"மிட்நைட் பிளைட்ல உங்களுக்காக  ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்."

"அட் எனி காஸ்ட் டிக்கெட் வாங்கிருங்க."


"இன்னும் பத்து நிமிசத்துல தகவல் சொல்றோம் சார் ....அப்பிடி மிட்நைட் பிளைட் கிடைக்கலைனா நாளைக்கு மார்னிங் வாயுதூட் பிளைட்ல போறீங்களா சார் ?"

"நோ...நோ....அந்த மாவுமில்லில் என்னால ட்ராவல் பண்ண முடியாது. மிட்நைட் பிளைட்டுக்கே ட்ரை பண்ணுங்க.."

"எஸ்...சார்"

ஜீவா ரிஸீவரை சாத்திவிட்டு....கிளாசில் மீதி இருந்த விஸ்கியை வாயில் கவிழ்த்தான் .நரம்பு மண்டலத்தில் விஸ்கி தீ மூட்டி உடம்பெல்லாம் வெப்பம் பரவி இருந்தது.சிகரெட் ஓன்று பத்தவைக்கலாமா என்று யோசிக்கும்போதே டேபிளில் இருந்த செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்..."அப்பா." போனை காதுக்கு குடுத்தான்

"எஸ் ..டாட் "

எடுத்த எடுப்பிலேயே கோபமாக கேட்டார்

"என்னடா ...இன்னுமா சென்னைல உட்காந்துட்டு இருக்கிறே?"

"சாரி டாட்......கொச்சி பிளைட்ல டிக்கெட் கிடைக்கல..மிட்நைட் பிளைட்டுக்கு ட்ரை பன்னிட்டு இருக்கிறேன். ஏர்லி மார்னிங் மூணு நாலு மணிக்கெல்லாம் நான் வீட்டுக்கு வந்துருவேன்."

"வராம இருந்துடாதே...நிறையபேரை உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிருக்கேன். மார்னிங் எட்டு மணிக்கு நீ கேக் வெட்டியாகணும். உங்க அம்மா வேற பர்த்டேனு தெரிஞ்சும் உன்னை நான் சென்னைக்கு பிசினஸ் விஷயமா அனுப்பிட்டேன்னு என்னை கரிச்சு கொட்டிட்டு இருக்கிறா."

"நான் எப்படியும் மார்னிங் மூணு நாலு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துருவேன்னு அம்மாகிட்ட சொல்லுங்க டாட்."

"நான் ஏதாவது சொல்லி சமாளிசிக்கிறேன்...ஆமா ஏர்போர்ட்க்கு கார் அனுப்பவாடா?"

"வேண்டாம்.....டாட்....நானே ஏதும்  டாக்ஸி பிடிச்சி வந்துடுறேன்."

"ஜீவா .."

என்ன டாட்

"நாளைக்கு உன்னோட பிறந்தநாள் மட்டுமில்ல .."

"தெரியும் டாட்...நாளைக்கு பிரபல தொழிலதிபர் கிருஷ்ணா தன்னோட ஒரே பொண்ணு மாளவிகாவை எனக்கு மேரேஜ் பண்ணி தர போறதா அத்தனை பேர் முன்னாலையும் அனவுன்ஸ் பண்ணப்போறாரு இல்லையா?"

"எஸ் மை டியர் சன் ...இது ஏறக்குறைய ஒரு நிச்சயதார்த்தம் மாதிரி. ஒரே பொண்ணு நிறைய சொத்து. ஐ ஹோப் யு வில் அண்டர்ஸ்டாண்ட்?"

"எஸ் டாட்,,,,,அதனால தானே நீங்க பொண்ணு யார்னு டிசைட் பண்ணதும் நானும் ஓகே சொன்னேன். டோன்ட் ஒர்ரி டாட். நாளைக்கு சொன்ன மாதிரி உங்க முன்னாடி டான்னு வந்து நிப்பேன்."

போனை துண்டித்துவிட்டு தலையை தேய்த்துக்கொண்டே பக்கத்திலிருந்த சோபாவில் தொப்பென்று உட்காந்தான்..சே ...பத்துமணி பிளைட் டிக்கெட் கிடைக்காதுனு மொதல்லையே தெரிஞ்சிருந்தா ட்ரைன்லயாவது போயிருக்கலாம்.

இப்போ கோயமுத்தூர் போய் சேர ஒரே வழி? மிட்நைட் பிளைட் தான்...அதில் எப்பிடியாவது டிக்கெட் வாங்கியாகணும்.

இதில் டிக்கெட் கிடைக்கலைனா .....வேற வழியே இல்ல அந்த மாவுமில் வாயுதூட் தான். அந்த மாவுமில்லுக்குள் இரண்டு மணிநேரம் உட்காந்து இருக்கணும். கோயமுத்தூர் போயி சேரத்துக்குள்ள உடம்பு ஒருவழி ஆகிரும்.

அப்போதுதான்....ஜீவாவின் யோசனையை அறுத்துக்கொண்டு வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

பொய் கதவை திறந்தான்.

வெளியே அவள் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் கலைந்த தலை முடி....லேசாக சொருகிய கண்கள்...வறண்டு போன ...மொத்தத்தில் தூசி படிந்த ஆயில் பெயிண்டிங்க் போல.

"ரெ ...ரெஜினா ...நீயா..."

ஜீவை தலையை அங்குமிங்கும் சாய்த்து யாராவது காரிடாரில் நிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே அவளை உள்ளே இழுத்தான்...


கதவை தாழிட்டுக்கொண்டே ..."ரெஜினா....நீ...."

நானே தான் ஜீவா ....உதடுகளில் ஒரு விரக்தி சிரிப்பை காட்டினாள்..."என்னை இங்க நீங்க எதிர்பார்க்கல இல்ல?

"ரெஜினா....நீ ஹாஸ்பிடல்லருந்து?"

"போன மாசமே டிஸ்சார்ஜ் ஆகிட்டேன்...லெட்டர் போட்டிருந்தேன் கிடைக்கலையா?"

"கி.....கிடைக்கல.."

"ஏன் பொய் பேசுறீங்க.....கவர் மேல என்னோட கையெழுத்தை பார்த்ததுமே கிழிச்சு குப்பையிலே போட்டிருப்பீங்க."

"ரெஜினா....நா....வந்து.....வந்து..."

"வாங்க.....அப்படி உட்காந்து பேசலாமா?"

"நான் அவசரமா ஊருக்கு கிளம்பிகிட்டு இருக்கேன்..."

"நானும் அவசரமாத்தான் உங்கள பார்க்க வந்தேன்...பத்து மணிக்குமேல ஹோட்டலுக்குள்ள விடமாட்டேன் சொல்லிட்டாங்க. நான் பின்பக்கமா கேட்டரிங் செக்சன் ஸ்டோரும் வழிய யாருக்கும் தெரியாம உள்ள வந்துட்டேன்."

"நான் இங்க ஸ்டே பண்ணிருக்கிறது உனக்கெப்படி தெரியும்?"

"நீங்க ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது சனிக்கிழமை ஷேர் மார்க்கெட் நிலவரம் தெரிஞ்சுகிறதுக்காக இங்க வர்றது ஏற்க்கனவே எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே. ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால தான் இன்னைக்கு இந்த மாசம் ரெண்டாவது சனிக்கிழமைன்னு ஞாபகம் வந்துச்சு.டெலிபோன் பூத்துக்கு பொய் உங்க பெயரை சொல்லி நீங்க இங்க ஸ்டே பண்ணிருக்கிறீங்களானு கேட்டேன். சிஸ் நாட் டு வில் நீங்க தங்கிருக்கிறதா சொன்னாங்க.உடனே புறப்பட்டு வந்தேன். கேட்ல வாட்ச்மன் பத்து மணிக்குமேல லேடீஸ் விசிட்டர்ஸ் உள்ள அலோ பண்றதில்லன்னு சொன்னான். உங்கள பார்த்தே ஆகணும் என்கிற பிடிவாதத்துல ஹோட்டல் பின் பக்கம் ஸ்டோர் ரூம் வழிய உள்ள வந்தேன்."

ஜீவா லேசாக வியர்த்தபடி அவளை ஏறிட்டான்.

"சரி ...இப்போ எதுக்காக இங்க வந்தே?"

"ஆறு மாசம் முன்னாடி நாம சந்திச்சோம்....காதலிச்சோம்....கிடைத்த சந்தர்ப்பத்துல எல்லை மீறியும் பழகிட்டோம். உங்க பேச்சை கேட்டு இரண்டு தடவ அபார்சன் பண்ணி...அதன் விளைவா ...உடம்பு கேட்டு பொய் ஹாஸ்பிடல்ல ஒரு மாசம் அட்மிட் ஆகி - இதனால வேலை பார்த்த இடத்துல விஷயம் தெரிஞ்சு பெயர் கெட்டு டெர்மினேஷன் லெட்டர் கையில வாங்கி நடு தெருவுக்கு வந்துட்டேன். உங்களுக்கே தெரியும் எனக்கு சொந்தபந்தம் யாருமில்லை. எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீங்க தான். சோ...உங்க கிட்ட வராம வேற யாரு கிட்ட போக?"

ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ஜீவா ....முகத்தில் இருக்கும் வியர்வையை தன்னை அறியாமல் கர்சீப்பால் ஒற்றிக்கொண்டான்..."இதோ பார் ரெஜினா...நான் இப்போ அவசரமா கோயமுத்தூர் போயிட்டிருக்கேன். அடுத்த வாரம் நான் சென்னைக்கு வரப்போ உன்னை வந்து பார்க்கிறேன்."

"இனி நீங்க அடுத்த மாசம் தானே வருவீங்க?"

"இல்லை...உனக்காக நான் அடுத்த வாரம் வரேன்."

"எனக்கு நம்பிக்கையிலீங்க....இன்னைக்கே எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்."

"எ ...என்ன மு...முடிவு?"

"உங்களுக்கும் எனக்கும் எப்ப கல்யாணம்  என்கிற முடிவு."

"க.....கல்யாணம்??"

ஜீவாவின் அடி வயிற்றில் ஒரு பனிப்புயல் உருவாவதை உணர்ந்தான்.

"பின்னே ....எதுக்காக என்னை விரட்டி விரட்டி காதலிச்சீங்க ?"

"ரெஜினா.....நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க தான் காதலிச்சோம்.. இல்லைனு நான் மறுக்கலை. ஆனா ...என்னோட வீட்டில அப்பாவும் சரி அம்மாவும் சரி என்னோட கல்யாண பேச்சை இன்னும் எடுக்கவே இல்லை."

"நீங்க பேச்சை எடுக்க வேண்டியது தானே?"

"உடனே எடுக்க முடியுமா? அப்பாவும் அம்மாவும் என்னோட கல்யாணத்தை பற்றி பேசும்போதுதான் உன்னை பற்றி நான் சொல்ல முடியும்."

"என்னை பத்தி நீங்க உங்க வீட்டில சொல்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லீங்க...அதனால நானே ஒரு முடிவோட தான் வந்திருக்கேன்."

ஜீவா சற்று எரிச்சலானான்.

"என்ன முடிவு?"

"நாளைக்கே உங்களுக்கும் எனக்கும் கல்யாணம். கன்னிகா பரமேஸ்வரி கோயில்ல பொய் சிம்பிளா முடிச்சுக்கலாம். கல்யாணம் முடிஞ்சதும் நேர உங்க வீட்டுக்கு போறோம் உங்க அப்பா அம்மா கால்ல விழுறோம்."

ஜீவா திடுக்கிட்டு பின் சிரித்தான்.

"கல்யாணம்?...நாளைக்கேவா??"

"ஆமா...ஆமா"

"உனக்கொண்ணும் பைத்தியம் இல்லையே?"

"நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி....நாளைக்கே நம்ம கல்யாணம் நடந்தாகணும்."

இன்டெர்காம் கிணுகிணுத்தது

ஜீவா ரெஜினாவிடம் அமைதியாய் இருக்கும்படி சைகை காமித்துவிட்டு ரிசீவரை கையிலெடுத்தான்.

ரெஜினா மௌனமாகிக்கொள்ள.....ஜீவா பேசினான் 

"எஸ்..."

ரிசெப்ஷனிலிருந்து பேசினார்கள்.

"சார்....உங்க பிளைட் டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சு. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க ஏர்போர்ட் கிளம்பணும்."

"தாங்க் யூ ....பில்லை ப்ரிபேர் பண்ணி வைங்க ...வர்றேன். ரிசீவரை வைத்துவிட்டு ரெஜினாவை ஏறிட்டான். எனக்கு பிளைட்  டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சு. பிளைட் பனிரெண்டு மணிக்கு. நான் இன்னும் அரை மணி நேரத்துல இங்க இருந்து கிளம்பணும்."

ரெஜினா மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு மெலிதாக புன்னகைத்தாள்.

"நீங்க இன்னைக்கு புறப்பட முடியாது?"

"ரெஜினா....அடம் புடிக்காதே. நாளைக்கு எனக்கு பிறந்த  நாள்."

"ஓ ...உதட்டை குவித்தாள் ரெஜினா. நாளைக்கு உங்கள் பிறந்த நாளா? மெனி ....மெனி...ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப்.. த.. டே!.....உங்களுக்கு உண்மையிலே அதிர்ஷ்டம் இருக்கு ஜீவா. இல்லேன்னா பிறந்த நாளும் கல்யாண நாளும் ஒரே தேதியில அமையுமா?"

"விளையாடாதே.....ரெஜினா" -  ஜீவாவின் கோபம் தெர்மோமீட்டர் அளவை போல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளித்தான்.

"நான் விளையாடலை ...சீரியஸா தான் சொல்றேன். நாளைக்கு பிறந்த நாள் அதுவுமா என் கழுத்துல தாலி காட்டுறீங்க."

ஜீவா முகம் சிவந்தான்.

"கட்டலைனா?"

"இன்னைக்கு என்னோட இறந்த நாளாகிடும்."

"எ ....என்ன....சொ ...ல்றே  நீ .."

ரெஜினா புன்னகைத்து, தனது மார்பு சேலையை விலக்கி - கழுத்திலிருந்த இமிடேஷன் சங்கிலியை எடுத்து காட்டினாள். சங்கிலியில் மடித்து வைத்த நிலையில ஒரு காகிதம் கட்டப்பட்டிருந்தது.

"எ ....என்ன இது?"

"போலீசுக்கு நான் எழுதி வைத்திருக்கிற லெட்டர். என் மரணத்துக்கு நீங்க தான் காரணம் என்று விலாவரியாக எழுதி வைத்திருக்கிற லெட்டர். நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் தர்லைன்னா இந்த நிமிஷமே இந்த ஆறாவது மாடியிலிருந்து கீழே குதிச்சுட  போறேன்."

"நோ...ஓ ...ஓ... ஓ" - முகம் வியர்த்து வீறிட்டான் ஜீவா.

நோ ...ஓ ....ஓ  என்று வீறிட்ட ஜீவாவை புன்னகையோடு பார்த்தாள் ரெஜினா. கழுத்து செயினில் கோர்த்திருந்த கடிதத்தை காட்டிக்கொண்டே சொன்னாள். "இது வெறும் மிரட்டல் இல்லை. எனக்கு நீங்க தரப்போறது வாழ்வா -சாவாங்கிறதை முடிவு பண்ணிக்கிற துணிச்சலோடு தான் நான் வந்திருக்கேன்".

"ரெ.....ரெஜினா."

"ம்ம் .."

"நா...உன்னை ஏமாத்திருவேன்னு பயப்படுறியா? அந்த பயமே உனக்கு வேண்டாம். எனக்கு ஒரு மூணு மாசம் டயம் குடு. என் அப்பா அம்மாகிட்ட உன்னை கூட்டிகிட்டு போய் அறிமுகப்படுத்தி...."

"எனக்கு நம்பிக்கை இல்லை...உங்க முடிவான பதில் எனக்கு இங்க இப்பவே வேணும்.."

"ரெஜினா! இது அடம் பிடிக்கிற நேரமில்லை. நாளைக்கு நான் கோயமுத்தூரில் இருந்தாகணும். என்னோட பிறந்த நாள்."

"ரெண்டு நாள் கழிச்சுக்கூட உங்க பிறந்த நாளை கொண்டாடிக்கலாம்."

"ரெஜினா.....நான் சொல்றதைக் ..."

"கேட்கமாட்டேன்...இந்த ரூமை விட்டு நீங்க வெளிய போன நான் குதிச்சிருவேன்."

சொன்னவள் வேக வேகமாக பொய் அறையின் சிட்டவுட் கதவை திறந்துகொண்டு கிரில் வைத்த குட்டை சுவருக்கும் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள்.

ஜீவாவின் மனதில் ஆத்திரப்புயல் அடித்தாலும் அதை வெளிக்காட்ட இது நேரமில்லை என்று புரிந்துகொண்டு நிதானமாக பேசினான்.

"ரெஜினா!....அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போயிராதே. எனக்கு கொஞ்சம் அவகாசம் குடு."

மெதுவாக நகரத்து அவள் பக்கத்தில் வந்து அவளை சமாதான படுத்த முயன்றான்.

"அவகாசம்...ஐந்து நிமிடம் தாரேன்...மணிக்கணக்கு நாள்கணக்கா எல்லாம் அவகாசம் தர முடியாது. எனக்கு வேண்டியது உடனடி பதில்."

"சரி...நான் இப்ப என்ன பண்ணனும்?"

"அப்படி வாங்க வழிக்கு" - தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே சொன்னாள்  ரெஜினா.

"ரிசப்ஷனுக்கு போன் பண்ணி பிளைட் டிக்கெட் உடனே கேன்சல் பண்ண சொல்லுங்க."

"ம்ம்.....சரி" - அவளின் அருகில் நெருக்கமாக வந்தான். கையை அவள் கழுத்து செயின் மேல் வைத்து  மெதுவாக விரல்களால் கோடிட்டுக்கொண்டே... 

"அப்புறம் இன்னைக்கு ராத்திரி நான் உங்க கூடவே ஸ்டே பண்ண போறேன். இன்னைக்கு ராத்திரி நான் தூங்க போறதில்லை."

ம்ம்...கொட்டிக்கொண்டே கீழே எட்டி பார்த்தான். ஹோட்டலின் கான்கிரீட் தளம் தூரமாக தெரிந்தது.

"விடியற்காலை நாலுமணிக்கெல்லாம் நாம குளிச்சிட்டு கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு போய் கல்யாணத்தை முடிசிட்டு ஹோட்டலுக்கு வர்றோம்....வந்து.... " பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று எதற்காகவோ வெளிப்பக்கம் திரும்பி பார்த்த வினாடி - ஜீவா அந்த வினாடியை பயன்படுத்திக்கொண்டு...அவள் கழுத்தில் தொங்கிய செயினை ஒரு விரலால் கோர்த்து பிடித்துக்கொண்டு அவளின் மார்பு பகுதியில மிதமாக தள்ளிவிடவும்....ரெஜினா நிலை குலைந்து குட்டை சுவரை தாண்டி வெளிப்பக்கமாக விழ ஆரம்பித்தாள்.

அவள் உடம்பு கீழே இறங்கிக் கொண்டிருக்கும்போதே ஜீவா ரெஜினாவின் கழுத்திலிருந்த லெட்டர் கோர்த்த செயினை பற்றி இழுத்தான்...செயினும் லெட்டருடன் கைக்கு வந்துவிட - ரெஜினா ஆறாவது மாடியிலிருந்து தலைகுப்புற ஹோட்டலின் கான்கிரீட் தரை பரப்பை நோக்கி போனாள்.

தொடரும் ...