ஞாயிறு, டிசம்பர் 08, 2013

அழகு பொண்ணுங்களும் கியூட்டான பொய்களும்!




அழகான பொண்ணுங்க சொல்ற பொய் கூட அழகுதாங்க.. அந்த பொய் கியூட்டா இருந்தா அது இன்னும் அழகு..

அந்த மாதிரி ஜீவா ரசிச்ச பல அழகு பொய்களின் கியுட்டான கலெக்சன் இதோ...

பொண்ணுகளால மட்டும் தான்  ஒரே நேரத்துல பிரெண்டுகிட்ட போன்ல பேசிகிட்டு,ஒரு  கைல மொபைல்ல மெசேஜ் அனுப்பிகிட்டு ,இன்னொரு கைல காலுக்கு நெயில் பாலிஸ் போட்டுகிட்டே டிவில ஓடற மெகா சீரியல பார்த்து அழுதுகிட்டே தோசைய திருப்பி போட முடியும்...ஆனா பசங்க பாடு பாவம்க.. ஒரு பையன்கிட்ட அவன்  டீ குடிக்கிறப்ப , மணி என்னடா மச்சான்னு கேட்டு பாருங்களேன்....கன்னாபின்னான்னு கன்பியுஸ் ஆய்டுவான்.. ஆம்பளைங்களால ஒரு நேரத்துல ஒரு வேலையத்தான் செய்ய முடியும்....மனுஷன் உடம்போட இன்ஜினியரிங் அப்டி...

ஆனா இவ்ளோ வேலைய ஒரே நேரத்துல செய்ற பொண்ணுங்க ஒரே ஒரு எடத்துல மட்டும்தான் ஒரே ஒரு வேலைய மட்டும் செய்வாங்க... எப்போ தெரியுமா அவங்க தான் பாய் பிரெண்டோட இருக்கும்போது இன்னொரு அழகான பொண்ணு வந்துட்டா...

அந்த பொண்ணு மேல இவங்க பார்வை நிலைகுத்தி ஒரு வெறி கலந்த பொறாமை தெரியும்.. அய்யோயோ நம்பள விட அழகா இருக்காளேன்னு... மூஞ்சிக்கு ஏன் இவ்ளோ பவுடர் போட்ருக்கா..ச்சே கேரக்டர் சரியில்லாத பொண்ண இருக்கும்னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு கொஞ்சம் கீழ பார்ப்பாங்க...ஒரு செகண்ட் "அத" உத்து பார்த்துட்டு (நம்ம கூட "அத" அப்டி பார்த்துருக்க மாட்டோம்..) . ஒரு வேளை  பொய்யா இருக்குமோன்னு மனசுக்குள்ளயே கணக்கு போடுவாங்க...    நல்லா கவனிசீங்கன்னா உங்க காதுக்கு கேக்கும் அவங்க மனசுக்குள்ள கணக்கு போடறது...இதேப்டி இங்க. அது இப்டி இருக்கு..அப்டியில்ல இருக்கணும்னு ஏதேதோ செக் பண்ணிட்டு ரொம்ப நேரம் கழிச்சு ச்சே இவளுக்கும் பொய்தான்னு மனசுக்குள்ள ஒரு திருப்தி வந்த உடனே பார்வை இன்னும் கொஞ்சம் கீழ இறங்கும்...உதடு மைல்டா சிரிக்கும்..ச்சே...நம்ப அளவுக்கெல்லாம் இல்லைன்னு..நம்ப பையன் நம்பள விட்டு போகமாட்டான்னு ஒரு முடிவுக்கு வந்த பிறகு தான் அவங்க சுயநினைவுக்கே வருவாங்க...அப்போ அவங்ககிட்ட ஏண்டி அந்த பொண்ண இப்டி பார்க்கரன்னு கேட்டீங்கன்னா வரும் பாருங்க அந்த சூப்பர் பொய்..

"ச்சி....நான் எங்க பார்த்தேன்...?"

ப்ளூ பிலிம் பார்த்துருகியாடின்னு பாய் பிரெண்ட் கேக்கற கேள்விக்கு ஜாதி மதம் இனம் பேதம் இல்லாம எல்லா ஊரு குட்டிகளும் பட்டுன்னு சொல்ற ஒரே பொய் இதாதாங்க இருக்கும்.."சீ சீ அசிங்கம் அதெல்லாம் நான் பார்த்ததில்லப்பா...ஆனா என் பிரெண்ட்செல்லாம் பார்ப்பாளுக..எனக்கு புடிக்காதுப்பா ..குமட்டிகிட்டு வரும்"னு ஆன்சர் வரும்.ஏண்டி நீ பார்க்கலேன்னு கேட்டீங்கன்னா ..."ச்சே ச்சே நான் அது எல்லாத்தையும் என் புருசன்கிட்டதான் கத்துப்பேன்"னு கன்னமெல்லாம் கூசி போய் கூசாம போய் சொல்லுவாளுக... கொஞ்சம் பேச விட்டு கேட்டீங்கன்னா உண்மை குடம் குடமா கொட்டும்...பீசு விடிய விடிய பிரெண்ட்சோட  சேர்ந்து கண்ணுகிழிய  ப்ளூ பிலிம் பார்த்துட்டு குளிர்ஜுரம் வந்து கெடந்த கதை...இந்த லட்சணத்துல அவுக புருஷன் சார்ட்டதான் எல்லாத்தையும் கத்துபான்களாம்...எதோ நம்மல்லாம் நயன்தாராகிட்டையும் த்ரிஷாகிட்டயும் போய் ஒன் வீக் கோர்ஸ் கட்டிப்புடிக்கறது எப்டின்னு கத்துகிட்டு வர்ற மாதிரி...

இது எல்லாத்துக்கும் மேல டாப்பான பொய் ஒன்னு இருக்குங்க...பீச் காத்துல, காதுகிட்ட லேசா  மூச்ச விட்டுகிட்டு காலோடகால உரசிகிட்டு "என்னடி ஒரு கிஸ் தாறியா?னு மெதுவா கேட்டுப்பாருங்க... இளஞ்சூடான குரல்ல முனகலாட்டமா சொல்லுவாங்க அந்த பொய்ய....

ச்சீ...அசிங்கம்...எனக்கு கிஸ் குடுக்கறதெல்லாம் புடிக்காதுடா..!

பொண்ணுக நம்மள க்ராஸ் பண்றப்போ அவங்க டிரஸ் சரி பண்ணிகிறத பார்த்தா..எங்கடா தேடிகிட்ருக்க மரமண்ட.."அது" இங்க இருக்குன்னு சொல்லி குடுக்கற மாதிரியே இருக்கும்...அவளுக அத சரி பண்றத பார்க்கும்போதுதான் நமக்கு ஒரு அபிப்ராயமே வரும்...அட இத நம்ம பார்க்கனும்ல அப்டீன்னு!...நீயும் கேனப்பய மாதிரி "அத" உத்து பார்ப்பே...அவளோ தான் நீங்க காலி...கூட நின்னுகிட்டு ஷால சரிபண்ணியும் பசங்களோட அபிப்ராயத்த பெற முடியாத அட்டு டிக்கட்டுகிட்ட போய் கொந்தளிப்பாங்க...

பொறுக்கி பய ..எப்டி பார்க்கறான் பாரு..அக்கா தங்கச்சியோட பொறக்கல்ல போலிருக்கு...! (ஆனா மனசுக்குள்ள இப்டி ஓடிகிட்ருக்கும்..எப்டி பார்க்காம இருப்பான்..கெளம்பும்போது ஒரு மணி நேரம்ல மேக் அப்போட சேர்த்து தேவையான அரெஞ்மண்ட்ஸ்லாம்  பண்ணோம்னு...!) அதுக்கு பக்கத்துல உள்ள அட்டு பிகரும் கொதிச்சு போய் கருத்து சொல்லும்.."அதுவும் கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு, தூக்கி சீவிருக்கற பையன் ரொம்ப மோசம். உன்னையே வெறிச்சு பார்க்கறான்டி ..சரியான பொம்பள பொறுக்கியா இருப்பான் போலன்னு"... ஆனா அதோட பிஞ்சு மனசுல இப்டி ஓடிற்றுக்கும்...(எனக்கும்தான் இருக்கு... ஹ்ம்ம்...எவனாச்சும் பார்கிறானா....என்னமோ போ...!)

கொஞ்ச நாள் பேசி பழகுன பொண்ணுகிட்ட அழகா இருக்கீங்கன்னு சொல்லி பாருங்க...ரொம்ப கேசுவலா "ஓ..அப்டியா" அப்டீன்னு சொல்லிட்டு அடுத்த விசயத்த பத்தி பேச ஆரம்பிச்சுருவாங்க...ஆனா அதே பீசு வீட்டுக்கு போயிட்டு "அழகா இருந்தேன்னு சொன்னானே அவன் எத சொன்னான்-ன்னு விடிய விடிய கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு சுத்தி சுத்தி பார்த்து தனக்குதானே தன்ன ரசிச்சு கொழம்பிகிட்ருப்பாங்க ...கருத்து என்னன்னா.. பொண்ணுங்களுக்கு டீட்டைல்ஸ் ரொம்ப முக்கியம் தலைவரே...அழகா இருக்கீங்கன்னு பொதுவா சொல்லாதீங்க...உங்க மனசுல அந்த புள்ளைகிட்ட எந்த கருமம் அழகா தோணுச்சோ அத அழகா ஒரு பிட்டாக்கி அப்டியே பேசும்போது அங்க அங்க மழைசாரல் மாதிரி  தூவி விடுங்க...!

ஒரு உதாரணத்துக்கு..

"எல்லாரும் சிரிச்சு பார்த்துருக்கேன்...ஆனா நீங்க சிரிக்கும்போது மட்டும் சிரிப்பும் சேர்ந்து சிரிக்குது...! கியூட் டு ஸீ...!.."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டா வந்ததுக்கு உதட்ட சுளிச்சு என்னமோ செஞ்சீங்கள்ள..ப்ச்..அப்போ உங்க லிப்ஸ் ஐயோ ...செம கியூட் ..அப்டித்தாங்க இருந்துச்சு.."

"நீங்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கும்போது உங்க முகத்த பார்த்தா ஒரு ஸ்ட்ராபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கற மாதிரி இருக்கு... "

இப்டி மனச கல்லாக்கிட்டு பிட்டு பிட்டா போட்டு பாருங்க...! அந்த ஒரு வரில அவுக மனசு சந்தோசத்துல குதிச்சு கொந்தளிச்சு , செத்துப்போன அவுக தாத்தாவோட ஆத்மா ஆந்தி அடைஞ்சிரும்னா பார்த்துக்கங்க...! ஆனா அவுககிட்டேர்ந்து, அய்யனார் சத்தியமா இப்டி ஒரு ரியாக்சன்தான் வெளில வரும்.அழகா சிரிச்சுகிட்டே, லேசா தலைய சாய்ச்சுகிட்டே கியூட்டா சொல்லுவாங்க...

"போடா ஜொள்ளு..ஓவரா வழியாத...!"

கடைசியா சொன்னாலும் ரொம்ப முக்கியமான பாய்ண்ட் தம்பி...கவனமா கேட்டுக்கோ...உஷார் பண்ணிகிட்ட்ருக்கற பிகரோ..இல்ல லவ்விக்கிட்ருக்கற பிகரோ...இல்ல கல்யாணம் கட்டிகிட்ட பிகரோ..எல்லா பிகருங்களும் ஈகோங்கற ஒரே குட்டைல ஊறுன , வேற வேற கட்டைங்கதாங்க்ரத மனசுல வெச்சுக்க.! வாழ்க்கைல எதாச்சும் பிரச்சன வர்றப்போ நான் கீழ சொல்லிருக்க்கிற வார்த்தை மட்டும் அவகிட்ட இருந்து வந்தா, மச்சி ...அடுத்த செகென்ட் உஷார் ஆகிடு...

ஏம்ப்பா டல்லா இருக்க..? ஏதும் பிரச்சனையா...? இது நீ.

ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும் இல்ல...! இது அவுக...

மச்சான் சத்தியமா சொல்றேன்.எழுதி வெச்சுக்கோ..பீசு மனசுக்குள்ள பெருசா எதையோ போட்டு கொழப்பிகினு செம காண்டுல இருக்குன்னு அர்த்தம்...நீ அத புரிஞ்சுக்காம "அதான் அவளே ஒன்னும் இல்லைன்னு" சொல்லிட்டாளேன்னு நெனைச்சுகிட்டு, முட்டிய மடக்கிகினு, குஷி மூட்ல, ஜீவான்னு ஒரு பிக்காளிபய ஒருத்தன் ப்ளாக் எழுதுராண்டி..... அப்டீன்னு மொக்கைய ஆரம்பிச்சிராத...! தேவை இல்லாம அந்த புள்ள மனசுக்குள்ள என்ன திட்டும்..நாசமா போறவன்..ஜீவா கம்னாட்டின்னு...! (தேவை இல்லாம எனக்கு ஏச்சு  வாங்கி தராதே...வெட்டிருவேன்!)

அந்த மாதிரி சூழ்நிலையில ஆம்பள சிங்கங்களாகிய நாம, நம்ம உசுரையும் வாழ்க்கையையும் காப்பாதிக்கறக்கு நடிச்சே ஆக வேண்டிய அபாக்ய கட்டாயத்துல இருக்கொம்ங்க்ரத மனசுல வெய்ச்சுக்க.. நேரா பாத்ரூமுக்கு போ..மூக்க நல்லா சிந்து...உன் பிகரோட அப்பாவையோ...உன் லவ்வுக்கு வில்லனா இருக்கிற அவ அண்ணன் தம்பிகளையோ மனசுல நெனைச்சு நல்லா காரி வாஷ் பேசின்ல துப்பு..மூஞ்ச கழுவு..பிரெஷ் ஆகிக்க..வக்காளி தோக்கடிக்கரண்டா சிவாஜி கணேசனன்னு மனசுல நெனைச்சுகிட்டு நேரா போ அந்த பிகருகிட்ட...மூஞ்ச அப்பாவிய மாத்து..கீழ உள்ள டயலாக செண்டிமெண்டா அடி...!

"என்னடா பிரச்சன என் கண்ணுகுட்டிக்கு...? ஏன் டல்லா இருக்க...? சொல்லு அம்மு..என்ட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லபோற..! சொல்லு குட்டி...!"

பீசு குடம் குடமா கொட்டும்..மொக்கயாதான் இருக்கும்..இருந்தாலும் கேட்டுக்க....உன் பிரச்சனை ஓவர்...நீ அன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்...!

வக்காளி அஞ்சு தடவ பொறுமையா கேட்டும் பதில் சொல்லாத ஆங்காரம் பிடித்த அடங்காபிடாரி பிகர்  வாய்க்கபெற்ற   அன்பர்கள், கீழே உள்ள வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுகொள்ளபடுகிறார்கள்...!

“திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி  ..!”

இப்படிக்கு
ர.சி.க.ன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக