
ஏய். ...ஜீவா...!!
(ரகசியமாய் குரல் கேட்க திரும்பி பார்தேன். யுவாஞ்சலி நின்றுகொண்டிருந்தாள்.)
என்னடி யுவா? ...கிளாஸ் முடிஞ்சாச்சு...வீட்டுக்கு போலாமா?
இருடா ....கொஞ்சம் வெயிட் பண்ணு...போலாம்...
ஐயோ யுவா...மழை வரும் போல
இருக்குடி ....இப்பவே லேசா மழை தூறிக்கிட்டு இருக்கு, உன்னை வீட்டில விட்டுட்டு நான் போகணும் டி வீட்டுக்கு..
(கிளாஸ் ல எல்லோரும் போயிட்டாங்க....ஒரே நிசப்தமா இருக்கு)
டேய் ...நீங்க இன்னும் கிளம்பலியா....வாட போலாம்.
(இது சிவா ...என்னை தேடி பார்த்துட்டு...மறுபடியும் கிளாஸ் ரூம் வந்திருக்கான்)
மச்சி ப்ளீஸ் டா...நீ கிளம்பு யுவா எதோ என் கூட பேசணுமாம்....நான் கொஞ்சம் கழிச்சு வரேன் டா.
ம் ம் ..நடக்கட்டும் நடக்கட்டும்....(கன்னடித்துகொண்டே போயிட்டான்)
ஹ்ம்ம் ..நீ சொல்லு யுவா...என்ன மேட்டர்?
ஆமா என்னடா அந்த லவ் லெட்டர் ல ...எழுதியிருந்தே?
என்ன எழுதியிருந்தேன்? (புரிந்தும் புரியாத மாதிரி நடித்தேன்)
"முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்று கேட்பதெப்போ"
"முத்த தமிழ் வித்தகியே இரண்டில் ஒன்று என்னை பார்ப்பதெப்போ"
(சிரித்தேன்) ஹ்ம்ம் ...படிச்சியா? புரிஞ்சுதா?
ஜீவா...எவளோ நாளாடா நாம லவ் பண்றோம்? என்னை நீ புரிஞ்சுகிட்டியோ இல்லையோ ...உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தம்னு எனக்கு நல்லாவே தெரியும் டா.
ஏஏய்...என்ன சொல்றே...தெளிவா சொல் டி (மறுபடியும் நடித்தேன்)
உனக்கு என்னை கிஸ் பண்ணனுமா?
(மனசு படபடனு அடிக்க ஆரம்பிக்குது.....காட்டிக்காம சமாளித்தேன்)
ஜீவா ......(யுவா-வின் சத்தம்...கொஞ்சம் ரகசியமாய் ஒலிக்க ஆரம்பித்தது).
என்னடி யுவா குட்டி...(எனக்கே தெரியாமல் என் சத்தமும் ரகசியம் பேச ஆரம்பித்து)
இங்க யாருமே இல்ல....
அதனால.
அதனால.....என்னை நீ கிஸ் பண்றே
(வெளியே மழை ..கொஞ்சம் வலுத்திருந்தது)
நிஜமா கிஸ் பண்ணிடுவேண்டி ....
ஹ்ம்ம் நானும் நிஜமா தான் சொல்றேன் ஜீவா
ஏய் ..கொஞ்சம் தள்ளி வாடி..மழை சாரல் அடிக்குது இல்ல..
பரவாயில்ல ஜீவா....நீ என்னை என் உடம்பு பூரா தொடுற மாதிரி ...இந்த மழை சாரல் ஒரு சிலிர்ப்பு தருது.....புடிச்சிருக்கு ஜீவா..
(மழை சத்தம்....எங்களின் ரகசிய சிணுங்கலில் கொஞ்சம் வெட்கித்தான் போனது. யுவா-வின் உடம்பு சிலிர்ப்பதை பார்த்துக்கொண்டே...அவளை நெருங்கினேன்..)
ஜீவா (என்று சிணுங்கலாய் சொன்னாள்).....ஒரு விரலால் என் பக்கம் வராதே என்று செல்ல கோபம் காட்டினாள்..
இனி பின்னால் போவதற்கு இடம் இல்லை....சுவரோடு ஒட்டிக்கொண்டு என்னை பார்த்து புன்னகை பூத்தாள்..
(வெளியே அட மழை ...எங்களுக்குள்ளும் அதே மழை ...கொஞ்சம் சூடான மழை)
அவளை நெருங்கி என் கைகளுக்குள் அவளை கொண்டு வந்தேன்...
மூச்சு காற்றும்....என் மேல் சுகமாய் ரீங்காரம் பாட...
கண்களை மூடி தேவதையாய் நின்றாள் என் யுவா..
கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்டேன்...
ஏய்...உன் பெயர் என்னடி?
தெரியாது
நீ எந்த ஊர் டி?
தெரியாது
என்னை தெரியுமா?
தெரியும்
இடுப்புல கை வைக்காதே ஜீவா....கூச்சமா இருக்கு டா
உன்னோட லோ ஹிப் டிரெஸ்ஸிங் ...எனக்கு ரொம்ப புடிக்கும் டி..
அப்படியா?
ஆனா அதுல ஒரு சிக்கல் ....அது என்னான்னு இப்போ கேட்க கூடாது.
இப்போ எனக்கு மழை....நீ....உன் ஸ்பரிசம் மட்டும் தான் ...வேற எதுவும் என் மனசுக்குள்ளே இல்லை ஜீவா..
ஜீவா உன்னை கட்டி புடிக்கணும் போல இருக்கு....ஆனா பண்ண மாட்டேன்..
யுவா-வின் இடுப்பை கட்டிக்கிட்டு....
அவள் உதடுடன்...என் உதடு மெதுவாக சேர்த்து..
மழை இன்னும் பெய்கிறது...
மழை துளிகள் சங்கீதமாய்...
எங்கோ தூரத்தில்..பெயர் தெரியாத ஒரு பறவையின்....மழை பாடல்..
வாழ்க்கை எப்போதுமே அழகு தாண்டி ...யுவா !