சனி, பிப்ரவரி 26, 2011

காதலும் கத்திரிக்காய் கொழம்பும்...


சில வாரங்களுக்கு முன்னால்...

ஏய் ...என்னடி உன் மச்சான் ரொம்ப நாள் கழிச்சு ஊர்ல இருந்து வந்திருக்கேன். ஒன்னும் கண்டுக்க மாட்டேன்கிறியே. ஊர்ல உள்ள பொண்டாடிங்க எல்லாம் புருஷன் வீட்டுக்கு வந்த வகை வகையா வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு அசத்துவாங்க. நீ என்னடான்னா எப்போ பார்த்தாலும் இட்லி, தோசை, ரசம், சாதம், பொடலங்காய்-னு போட்டு கொல்றியே டி. என் மேல உனக்கு இம்புட்டு தான் அன்பா?

ஏனுங்க மச்சான் இப்படி சொல்றீங்க. போங்க உங்க கூட நான் இனிமேல் பேசல. இப்படி சொல்லிடீங்க இல்ல.. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க இன்னைக்கே சமைச்சு தாரேன்.

என் பொண்டாட்டி கண்ணா கசக்குனதும் எனக்கு மனசு தாங்கல...

அட சீ அசடு...நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி. நீ எனக்கு கத்திரிக்கா கொழம்பு வச்சு குடுப்பியாம். நான் அதை ஆசை ஆசையா சாப்புடுவேனாம்.




ஐயோ மச்சான் எனக்கு கத்திரிக்கா கொழம்பு வைக்க தெரியும்...ஆனா உங்க அம்மா வைக்கிறமாதிரி எனக்கு பண்ண தெரியாது. ஹ்ம்ம் எப்படியாச்சும் உங்களுக்கு வச்சு குடுக்கிறேன்.

அடி போடி....ஆக மொத்ததுல ஒன்னே ஒன்னு கேட்டேன் அதுக்கும் இந்த இழுவையா...விளங்கிடும் போ..

போன வாரம்...காலையில


வீட்டில சும்மா....பெட்-ல படுத்து கிடந்தேன். லீவ் வேற. ஒரே சோம்பல்! எங்கயும் போகணும்-னு தோனல. அப்போ என் பொண்டாட்டி குளிச்சிட்டு வந்தா. நீல கலர்-ல சாரி கட்டிக்கிட்டு சும்மா தேவதை மாதிரி கொஞ்சம் காய்ந்தும் காயாத ஈர தலையுடன். வந்தவ நேரா பெட்ரூம் ல வந்து அங்க இருந்த பெரிய கண்ணாடி முன்னால நின்னுகிட்டு தலைய துவட்ட ஆரம்பிச்சா. என்னோட ஆறாவது அறிவு விழித்துகொண்டது. வள்ளுவனின் காமத்துபாலில் கரைய ஆரம்பித்தேன்.

ஏய் ...சும்மா சூப்பரா இருக்கே டி.

என்னங்க மச்சான். இன்னைக்கு தான் புதுசா பாக்குற மாதிரி. (செல்லமாய் கோபித்துகொண்டாள்).


ஒன்னுமில்லடி இந்த சாரி உனக்கு சூப்பரா இருக்கு. அப்படியே உன்னை கட்டிக்கலாம் போல இருக்கு. இப்படி பெட்ல வந்தது கொஞ்சம் உட்காரேன்..


ஒருமாதிரி மோகமாய் கைய புடிச்சு இழுத்தேன்..



ஐயோ போங்க மச்சான்...சீ ...என்ன இது பட்டப்பகலிலே....



இதுக்கெல்லாம் என்னடி நேரம் காலம்....




ஹ்ம்ம்....என்று செல்லமாய் முனகிக்கொண்டே பக்கத்தில் வந்தாள்.


அஹா ஷாம்பூ சோப்பு வாசனை அப்படியே சும்மா தூக்குது ...ஹ்ம்ம்....இன்னைக்கு மார்னிங் ஷோ பாத்துர வேண்டியது தான்....

இப்படியே சிணுங்கலும் கொஞ்சலுமாக கொஞ்சம் கொஞ்சம் என்னை இழந்து ...அவளை கட்டி அணைக்க போகும் நேரத்தில்....

டொக்...டொக்....டொக்...

என்னங்க யாரு கதவை தட்டுறாங்க....போய் பார்த்துட்டு வாறேன்...

அட சும்மா இருடி..கொஞ்சம் நேரம் தட்டிகிட்டு அவங்களே யாரும் இல்லைன்னு போயிடுவாங்க..

போங்க மச்சான், நான் போய் பார்த்துட்டு வாறேன்...

கலைந்திருந்த சாரியை சரி பண்ணிக்கிட்டே போய் என் பொண்டாட்டி கதவை திறக்க....அங்க என்னோட மாமியாரு ஒரு கூடை நிறைய கத்திரிக்காயுடன்.

ஐயோ அம்மா....வாங்கம்மா உள்ள....என்ன காலையிலே....

ஒன்னுமில்லடி...அன்னைக்கு நீ உன் புருசனுக்கு கத்திரிக்காய் கொழம்பு புடிக்கும்னு போன்ல சொன்னியே...அதான் மார்க்கெட் போயிருந்தப்ப நல்ல நாட்டு கத்திரிக்கா பார்தேன் அப்படியே வாங்கி குடுத்துட்டு உன்னையும் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.

என் பொண்டாட்டி அவ அம்மாவை ஹால்ல உட்கார வச்சுட்டு என்கிட்டே வந்து...

என்னங்க என்னோட அம்மா வந்திருக்காங்க...

ஹ்ம்ம் கேட்டேன்....உங்கம்மா சொன்னது எல்லாம் கேட்டேன் டி....ஆனா ஒன்னு மட்டும் நல்ல புரியுதுடி..இன்னைக்கு எனக்கு வில்லன் "கத்திரிக்கா" அப்படின்னு தலைய கைய வச்சுக்கிட்டு சோகமா....ஏக்கமா என் பொண்டாட்டிய பார்க்க...

அவ....அட சீ....குறும்புக்கார மச்சான்னு என் கன்னத்துல ஒரு கிள்ளு கிள்ளிகிட்டு அவங்க அம்மாவை கவனிக்க போயிட்டா..

பேசாம ரூம் போட்டு அழலாமா-னு யோசனை பண்ணேன்....ஹ்ம்ம் வேண்டாம்....!!!

ரொம்ப நாளா...."காதலாவது கத்திரிக்காயாவது" அப்படின்னா என்னனு விளக்கம் தேடிகிட்டு இருந்தேன்....இன்னைக்கு விளக்கமா விளக்கிட்டாங்க!!!!!!!

சரிதான் போடிடிடிடி!


ம்ம்....யாராவது friendship break ஆகுறதுக்கு ஒரு மூணு காரணம் சொல்ல முடியுமா?

என்னால மூணு காரணம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனா ஒரே ஒரு காரணதுக்காக என்னோட friendship உடைஞ்சு போச்சு! அதுக்காக வருத்தப்பட்டு இந்த பதிவை நான் எழுதல. நாளைக்கே உங்க லைப்-ல இதுமாதிரி ஒரு காரணம் வரலாம். அதனால எப்போதுமே நிலைக்காத ஒண்ணுக்காக மாங்கு மாங்கு-னு அலையுற விட்டு பொய் பொழப்ப பாருங்க இல்லாட்டி புள்ளைகளை போய் படிக்க வையுங்க. அவங்க எதிர்காலமாவது நல்லாருக்கும்.

மேட்டர் ஒன்னும் பெருசா இல்லீங்க. ஒரு பொண்ணு அவளுக்கு அழகான இரண்டு......(ஹி ஹி ஹி....தப்பா ஒன்னும் நினைக்க வேண்டாம்) கண்ணு. வழக்கமான நலம் விசாரிப்புகளுடன் ஆரம்பித்த எங்க வலைப்பூ நட்பு நாளாக நாளாக நாடு, மொழி, மதம், லொட்டு, லொசுக்கு எல்லாம் கடந்து வேகமா வளர்ந்துச்சு. நேரம் காலம் தெரியாம பேசுனோம்..பேசிகிட்டே இருந்தோம். என்னோட கடியெல்லாம் (நான் ஜோக்ஸ் பத்தி சொல்றேன்) அவ தாங்கிகிட்டா..அவளோட கடியெல்லாம் (இதுவும் ஜோக்ஸ் தாங்க) நானும் தாங்கிகிட்டேன். பின்னே சும்மாவா நட்பாச்சே. அவளோ சீக்கிரத்தில விட்டுற முடியுமா. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு சாட்டிங்-மா வளர்ந்த எங்க நட்பு ஒரு காலத்துல community chat - ல எல்லாம் கொடிகட்டி பறந்துச்சு. பாக்குறவங்க என்னடா love - ஆனு கேட்கிற அளவுக்கு இருந்துச்சு. யாரு கண்ணு பட்டுச்சோ இப்புடி அந்து அவுலா போச்சு எங்க நட்பு. அஆங்...நட்பு புட்டுகிட்டதுக்கு காரணம் என்னா-னு இன்னும் சொல்லியே..

எனக்கு ஒரு கேட்ட பழக்கமுங்க...யாராவது என் கூட கொஞ்சம் close - ஆ பழகுனா அவங்க ஆம்பளையா இருந்த வாட போடா னு பேசிக்குவேன். பொம்பளையா இருந்த வாடி போடி னு பேசிக்குவேன். அப்ப தான் ஒரு அன்னோன்யம் வரும் னு நானா போட்டுகிட்ட ஒரு தியரி. இப்படி பேசுறதால அவங்களை irrespective -ஆ treat பண்ணனும்னோ அவங்க மனசை நோகடிக்கனும்னோ எண்ணம் எல்லாம் கிடையாது. அப்படியே பழகி போச்சு. ஆனா இந்த கான்செப்ட் எல்லாருக்கும் புடிக்கும்-னு சொல்ல முடியாது. இருந்தாலும் என்னால இதை மாத்திக்க முடியல. எனக்கு நாக்குல சனி-னு தெரியாம போச்சு. அவளையும் ஒருநாள் "டி" போட்டு பேசினேன். அவளோ தான்...வெறி வந்து சாமியாடிட்டா!

அவளை "டி" போட்டு பேசுற உரிமை அவளோட காதலன் அல்லது அவளோட என்னைக்கோ வரபோற புருசனுக்கு மட்டும் தான். வேற யாரு "டி" சொன்னாலும் அவளுக்கு புடிக்காது. உடம்பு புள்ள கம்பளி பூச்சி ஊர்கிற மாதிரி ஒரு பீலிங்- ஆ இருக்குதாம். நமக்கு தான் நம்ம கொள்கைய விட்டு குடுக்க மனசு வராதே. நானும் உன்னை அந்த மாதிரி எல்லாம் நினைச்சு நான் "டி" போடல. ஜஸ்ட் ஒரு பொண்ணுகிட்ட ஆண் சொல்ற மாதிரி சாதரணமா சொன்னேன் அப்படின்னு எல்லாம் தத்துவம் பேசி பார்த்தேன். எனக்கு இது மாதிரி பேசி தான் பழக்கம். ஒரு ஆள் கிட்ட நெருங்கி பழகுற பீலிங் அப்ப தான் கிடைக்குது அப்படி இப்படி-னு என்னா எல்லாமோ கெக்கே பிக்கே னு உளறி பார்தேன். ஹ்ம்ம் முடியாதுனா முடியாது. அப்படி நீ கூப்பிட்டா என்னை நீ contact பண்ணவே வேண்டாம் என் கூட பேசவே வேண்டாம்-னு முகத்துல அடிச்சா மாதிரி சொல்லிட்டா. பாரடா...இந்த பயபுள்ளைக்கு இம்புட்டு பிடிவாதம் இருந்த நாம என்னா கேட்டுகிட்டு அவ சொல்ற மாதிரி அடங்கி நடக்க சொம்பையா. நானும் முடிவா சொல்லிட்டேன், யாருக்காகவும் என்னோட லைப் ஸ்டைல் நான் மாத்திக்கிறதா இல்லை. நான் "டி" போட்டு தான் பேசுவேன். சரிதான் போடிடிடிடிடி அப்படின்னு நச்சு னு நாலு வார்த்தை சொல்லி பல நாளா பழகுன எங்க நட்புக்கு பால் ஊதிக்கிட்டு வந்து நிக்கிறேன்.

முடிவா சொல்றேன் பய பக்கிகளா கேட்டுகோங்க......ஒழுங்கா பொட்ட புள்ளைங்க கிட்ட நல்ல புள்ளையா நடந்துக்கணும். முக்கியமா அவிங்க சொல்றதுக்கெல்லாம் மாங்கு மாங்கு தலைய ஆட்டனும். அப்போ தாண்டா உங்களுக்கு லைப் ல பொம்புள பிகர்ஸ் செட் ஆகும். இல்லாட்டி என்னைய மாதிரி கொக்கரகோ குமாங்கோ தான்! புரியுதா!

பின்குறிப்பு: எனக்கு புடிச்ச சாங் "வாடி வாடி நாட்டுகட்ட"...100௦௦ தடவ பாடுவேன்டி!!

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

நடுநிசி நாய்கள் - ஒரு நேர்வினை!


ஒரு படைப்பாளி எதை சொல்ல வேண்டும் என்பதை இந்த சமூகம் தான் தீர்மானிக்கிறது. சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டினால் அதை இந்த சமூகம் எப்போதும் மறுத்து தான் வந்திருக்கிறது. அதற்காக போராட்டம் ஒரு பக்கம், கொடும்பாவி எரிப்பு ஒரு பக்கம், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எதிர் விமர்சங்கள் ஒரு பக்கம், போதாதற்கு இப்போது ப்ளாக்! எதையாவது எழுதி ஓட்டு வாங்கி விட வேண்டும், அதற்கு பின்னூட்டமாக நாலு பேர் போடக்கூடிய அச்சு பிச்சு கமெண்ட்ஸ் இதை பார்த்து பூரித்து போகும் கூட்டம் இருக்கும் வரை ஒரு நேர்மையான விமர்சனம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு ஆயிரம் பேர் வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் ஒருவன் மட்டும் வேண்டும் என்று குரல் கொடுத்தால் அவன் பைத்தியக்காரன். நான் அப்படியே இருந்துவிட்டு போகிறேன். அதற்காக சொல்ல வந்ததை சொல்லாமல் போகும் கோழை அல்ல நான். சமூகம் சொல்கிறது என்பதற்காக வால்ஆட்டிக்கொண்டு பின்னே செல்லாமல் மனசாட்சி படி உள்ளதை ஒத்துகொள்ளும் பாங்கு வேண்டும்.
நடுநிசி நாய்கள்....இது தான் இன்றைய ப்ளாக் உலகின் தாரக மந்திரம். ரேட்டிங் ஏறணுமா உடனே நடுநிசி நாய்கள் படத்தை பற்றி கேவலமா எழுது. கண்டிப்பா முதல் பத்து ரேட்டிங்-க்குள் உன் பிளாக் வந்துவிடும். படத்தோட டைரக்டர் எதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திவிட்டாரம். ஊருல உலகத்துல நடக்காததை சொல்லிட்டாராம். இந்திய கலாசாரத்தையே குறை சொல்லிவிடாரம். எது எதுக்கோ மல்லுகட்டும் பல சங்கங்கள் மௌனம் காக்கும் வேளையிலும் இந்த பிளாக் பிக்காளி பசங்களின் தொல்லை தாங்க முடியலப்பா. இந்தியன் சினிமா உலகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல இவங்க கிட்ட தான் எதோ ஐடியா கேட்கணும் போல வரவன் போறவன் எல்லாம் ப்ளாக்-ல எழுதி கிழிக்கிறான் இந்த படத்தை பத்தி. ஒரு காலத்துல கமல்ஹாசனின் 2 - ம் தர படத்துக்கும் ரஜினியின் கற்பனையிலும் நடக்காத ஸ்டைல்-க்கும் முன் வரிசையில் உட்காந்து விசில் அடிச்சு படம் பார்த்தவனுக எல்லாரும் இன்னைக்கு எதோ இன்டர்நெட்-ல் நாலு படத்தை பார்த்துவிட்டு உலக சினிமா பத்தி சிலாகிக்கிறார்கள். இவர்களின் மேதாவித்தனத்தை காமிக்க ஒரு படம் கிடைத்தால் போதும் பக்கம் பக்கமா எழுதி கிழிக்கிறாங்க.

ஓ...கண்னியவான்களே கடந்த 5 மாதம் தினமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்திகளை எடுத்து குத்த வச்சு படித்து பாருங்கள். அப்போது புரியும். கெளதம் மேனன் இந்த படம் எடுக்கிறதுக்கு முன்னாலே எவளோ கலாசார சீரழிவு இந்த தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருந்தது என்று. எத்தனை கள்ள காதல், அப்பா மகளை கர்ப்பிணி ஆக்கிய கதைகள், மகன் அம்மா உறவுகள், பொருந்தாத காதல் களியாட்டங்கள் என்று எத்தனையோ செய்திகள். இதை எல்லாம் செய்தவர்கள் கெளதம் வாசுதேவ் மேனனிடம் ஐடியா கேட்டா செய்தார்கள்? தமிழ் நாட்டில் பெரும்பாலும் வருகின்ற முன்னணி நடிகர்களின் மசாலா படங்களில் நடிகைகளின் தொப்புளையும், அவர்களின் மார்பையும், பின் பக்கத்தையும், ஹீரோ கை வைக்கும் மற்றும் பல இடங்களையும் close-up ல் காமித்தால் அது கலாசார சீரழிவு இல்லையா? அதை பார்த்து எல்லாரும் முக்தி நிலை அடைவார்களா? அதை பார்க்கும் ஒருத்தனுக்கு அது போல செய்யணும் என்று எண்ணம் வராதா? நடுநிசி நாய்கள் படத்தில் இந்த கலாசார சீரழிவு எதுவுமே இல்லையே. தந்தை - மகன் பாலியல் உறவாகட்டும், மகன் - வளர்ப்பு தாய் உறவாகட்டும் எதுவுமே அப்பட்டமாக காமிக்க படவில்லை. சில சினிமா நுணுக்கங்கள் அறிந்தவர்களால் மட்டுமே அனுமானிக்க கூடியவகையில் தான் காட்சி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் அதை ஊருக்கு ஊரு மேடை போட்டு ஐயோ அம்மா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு பரப்பி வருகிறீர்கள்.

இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழும் உங்களை போன்ற ப்ளாக் மேதாவிகள் தான் மிஸ்கின்-ன் யுத்தம் செய் படத்தை அஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதினீர்கள். அந்த படத்தின் ஒருவரி கதையை சின்ன புள்ளைங்க கூட புரிஞ்சுகிட்டு சொல்லுமே. வயதான கிழடுகள் பெண்களை மற்றவர்கள் வன்கலவி செய்வதை பார்த்து இன்பம் அடைபவர்கள் என்று. இந்த கதையை படமா எடுத்ததற்கு ஏன் யாருமே வாய்கிழிய கத்தவில்லை? இந்த படத்தை பார்த்து கிழவர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையா?

இதை நான் எழுதுவதற்காக நான் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பல்லாக்கு தூக்குவதாகவோ, மேலே சொன்ன உறவுகளுக்கு நான் சம்மதம் சொல்வதாகவோ அர்த்தம் கொள்ளுபவர்கள் அப்படியே நினைத்து கொள்ளுங்கள். எனக்கு கவலை இல்லை. நடப்பதை நடக்கிறது என்று உண்மை பேசி நாலு பேரிடம் கேட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை எதுவுமே நடக்காதது போல முகமூடி போட்டு சாக்கடை பன்றிகளாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படிக்கு
ரசிகன்