வியாழன், அக்டோபர் 12, 2017

Casanova (The man who need love more)




நேற்றும் மழை பெய்திருந்தது
நேற்றும் காலையும் மாலையும் வந்து போனது
நேற்றும் பூக்களின் ஜனனமும் மரணமும் நிகழ்ந்தது

அனால் அது எல்லாம் எனக்கானதாக இருக்கவில்லை
எனக்காகவும் இல்லை
காரணம் நேற்றுவரை நான் காதலை காதலிக்கவில்லை
அவள் என் முன்னால் வந்திருக்கவில்லை


அவள் முகம் பார்த்த அடுத்த நொடி
இன்றைக்கு எப்போதோ எனக்குள் வந்திருந்த காதல்
எனக்கு சொல்லியது
மழைக்கு அவளின் மணம்
சூரியனும் சந்திரனும் அவள் பார்வையில்
அசுரனையும் கனவு காண சொல்லும் அவள் காதல்
காதல் பாஷையில் கண்கள் பேசியபோது
ஒவ்வொரு நாளும் விடியலுக்காக ஏங்கியது
ஒவ்வொரு பகலும் நீளமாக வேண்டியது மனது

எந்த உயிருக்கும் புரியும் மொழி
எந்த உயிரும் வேண்டி நிற்கும் வரம்
ஐ லவ் யூ ...


வியாழன், ஏப்ரல் 13, 2017

கலவரம்





ஒரு கலவரம் எப்படி எல்லாம் ஆரம்பிக்கும் அல்லது ஒரு கலவரம் நடக்க என்ன எல்லாம் காரணிகள் தேவைன்னு யோசிச்சு பார்த்தா...

முக்கியமா ஜாதி அல்லது மதம் ரீதியான கலவரங்கள் தான் அதிகம்.  ஜாதி விட்டு ஜாதி அல்லது மதம் விட்டு மதம் காதல் / கல்யாணம் பண்றது அதனால வரும் பின் விளைவுகள் நிறைய தடவை கலவரங்களில் முடிந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஒரு ஜாதிக்காரனை / மதத்தவரை இன்னொரு ஜாதி / மதம் சேர்ந்தவன் எதோ பேசிவிட்டான் என்று கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அடுத்ததாக வாய்க்கால், வரப்பு, நடந்து செல்லும் பாதை இன்ன பிற காரணங்களுக்காக கலவரங்கள் நடந்து பார்த்திருக்கிறோம். தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு, மாநிலத்துக்கு மாநிலம் கலவரம் ஏதோ சில பல காரணங்களால அடிக்கடி நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு வியப்பான விஷயம் என் அறிவுக்கு எட்டியவரை மாவட்டத்துக்கு மாவட்டம் பெரிய கலவரங்கள் நடந்ததாக தெரியவில்லை. சில நேரங்களில் தொழில் ரீதியான கலவரங்கள் கூட நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு மீனவ குப்பத்திற்கு இடையே நடக்கும் கலவரம்.

இப்படி ஒரு சிறு தீப்பொறி மள மளவென பற்றி எரிவதை போல கலவரங்கள் "இப்படிங்கிறதுக்குள்ள" ஜஸ்ட் லைக் தட் ஆக நிகழ்ந்து விடுகிறது.

சரி எப்படியோ போய் தொலையட்டும். ஆனால் நான் இங்கே சொல்ல வரது என்னன்னா மேலே சொல்லப்பட்ட காரணங்கள் ஏதுமில்லாமல் ஒரு கலவரம் நிகழ்வது சாத்தியமா? சாத்தியமே! எப்படி என்று பார்க்கலாம்.

அந்த இழவு வீடு நிசப்தமாக இருந்தது.

பிணத்தை தூக்கி கொண்டு போய் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் பார்த்தாச்சு. பெண்கள் ஒப்பாரி வைத்து சோர்வாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டும் ஆளுக்கொரு பக்கமாக வீட்டிற்குள் முடங்கியிருந்தார்கள். வெளியே வந்த வேலை முடிந்தது என்று ஆண்கள் அவரவர் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். சிலர் அவசரமில்லை என்று இன்னும் அந்த சாவை பத்தி பேசிக்கொண்டு அங்கிருந்த சிவப்பு கலர் பிளாஸ்டிக் நாற்காலிகளை தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரமேஷும் கணேஷும் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த காலியான நாற்காலிகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவ்வப்போது அந்த ஊரின் கவுன்சிலர் முஸ்தபா கவுன்சிலர் என்கிற தோரணையில் சின்ன சின்ன கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

வேலையினூடே ரமேஷ் கணேஷை பார்த்து அந்த கேள்வியை கேட்டான்..

"ஏண்டா... நேத்தைக்கு தோட்டத்திலிருந்த பலா மரத்தில் பலாக்காயை நீ வெட்டிக்கிட்டு போயிட்டியோ?"

கணேஷ் கொஞ்சம் கடுகடுப்பாக "ஆமா ..அதுக்கு என்ன இப்போ?"

"என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு வெட்டிருக்கலாமே?"

உன்கிட்ட எதுக்கு சொல்லணும்? என்னோட மச்சானோட தோட்டம். அதுல எனக்கு உரிமை இல்லையா?

ரமேஷுக்கு லேசாக கோபம் தலைக்கேறியது.

"என்கிட்டே ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேன்னு தானே கேட்டேன். அதுக்கு ஏன் இப்போ இப்பிடி வாள் வாள்னு கத்துறே?" "உனக்கு மச்சான்னா எனக்கு அவன் அண்ணன். உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணதால நீ கூட வந்து ஓட்டிகிட்டே. அதுக்காக என் அண்ணன் என்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு போன தோட்டத்துல உனக்கு பெரிய உரிமை மயிரு எல்லாம் கிடையாது."

"என்ன ரமேஷ் மயிரு கியிரு னு வார்த்தை நீளுது" - கணேஷ் உஷ்ணமானான், கையை நீட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக ரமேஷை நோக்கி போனான்.

"என்ன பண்ணுவே ...புடுங்கிருவியோ?" ரமேஷும் தன் பங்குக்கு கையை நீட்டிக்கொண்டு நாக்கை துருத்திக்கொண்டு கணேஷை நோக்கி போனான்.

இதை எல்லாம் ஓரமாக கவனித்துக்கொண்டிருந்த முஸ்தபா நிலைமை சண்டை நிலைக்கு வந்தததும், அவர்களுக்கு இடையில் பாய்ந்தார்.

"அட விடுங்கப்பா மச்சானும் மச்சினனும் எழவு வீட்டுல வந்து சண்டை போட்டுக்கிட்டு" - கவுன்சிலர் நடுவில் புகுந்து இரண்டு பேரையும் விலக்கி விட்டார்.

விலகினாலும் இரண்டு பேரின் கண்களிலும் வன்மம் தெறித்தது. இதை இப்படியே விட்டால் சரி ஆகாது என்று எண்ணிய முஸ்தபா இரண்டு பேரையும் பக்கத்தில் கூப்பிட்டு..

இங்க பாருங்கடே, பேசாம ராஜேஷுக்கு போன் போட்டு கேட்டுருவோம். தோட்டத்தை பார்த்துகிற உரிமை யாருக்கு இருக்குனு. அவன் சொல்றவங்க தோட்டத்தை பார்த்துக்கணும். மத்தவங்க அமைதியா போயிரணும் சரியா?

இரண்டு பெரும் அரை மனதுடன் தலையாட்டினார்கள்.

முஸ்தபா கர்ம சிரத்தையுடன் ரமேஷிடம் இருந்து அவன் அண்ணன் ராஜேஷின் நம்பர் வாங்கி மொபைலில் டயல் செய்தான். மறுமுனையில் ரிங் போனது..

அமெரிக்கா (நள்ளிரவு)

போனின் சிணுங்கல் சத்தம் கேட்டு ராஜேஷ் கண்களை கசக்கிகொண்டே தன் மார்பில் கட்டி பிடித்திருந்த தன்னுடைய தர்ம பத்தினியின் கைகளை விடுவித்து கொண்டு போனை தடவி எடுத்தான். கண்களை நன்றாக குவித்து போனை பார்த்தான்..

"ஹ்ம்ம்....ஊர்ல இருந்து. இந்த டயம் போன். யாரா இருக்கும்?" முணுமுணுத்துக்கொண்டே இணைப்பை கொடுத்தான்.

ராஜேஷின் மனைவிக்கும் தூக்கம் கலைந்து ஒருவித குழப்பமாக அவன் பேசுவதை கேட்க்க ஆரம்பித்தாள்.

"ஹலோ ..யார் பேசுறது ?"

"ராஜேஷ் தானே இது?"

"ஆமா ...நீங்க?"

"ராஜேஷ் நான் தான் நம்ம ஊரு கவுன்சிலர் முஸ்தபா பேசுறேன்"

"ஓ...கவுன்சிலரா? என்ன இந்த நேரத்துல போன்?"

"ஒண்ணுமில்ல இங்க ஒரு சின்ன பிரச்சனை, நீ போன தடவை ஊருக்கு வந்திருத்தப்போ ஒரு தோட்டம் வாங்குனியே, அதை யாரு பார்த்துகிறதுனு உன் தம்பிக்கும் உன் மச்சானுக்கும்  வாக்குவாதம். அதை யார் கிட்ட பார்த்துக்க சொன்னே? ஸ்பீக்கர் ல போடறேன். நீயே உன் முடிவை சொல்லிரு. பிரச்சனை முடியும்." சொல்லிக்கொண்டே ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

"அது வந்து..ஹ்ம்ம் ..நான் ரமேஷை தானே பார்த்துக்க சொல்லிருந்தேன்"

"ஓகே ராஜேஷ் இது போதும், நான் லைன் கட் பண்றேன்" சொல்லிக்கொண்டு லைனை கட் செய்தார்.

"இங்க பாருங்கப்பா ராஜேஷே சொல்லிட்டான். அவன் தம்பி ரமேஷை தான் அந்த தோட்டத்தை பார்த்துக்க சொல்லிருக்கான்னு. அதனால கணேஷ் நீ இனி அந்த தோட்டத்துல எது பண்றதா இருந்தாலும் மொதல்ல ரமேஷ்கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ. அவ்ளோதான் நான் சொல்லுவேன்?. என்று முடித்துக்கொண்டார்


கணேஷிற்கு இதை கேட்டதும் கடுப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவனால் எதுவுமே செய்ய முடியாத நிலை. அதே நேரம் ரமேஷ் அவனை ஓரக்கண்ணால் பார்த்து நையாண்டியாக சிரித்துக்கொண்டிருந்தான். அது கணேஷிற்கு இன்னும் எரிச்சலை மூட்டியது.

அமெரிக்கா (அதே நள்ளிரவு)

என்னங்க போன்ல யாருங்க, எதோ ரமேஷ் னு எல்லாம் பேச்சு அடிபட்டது? என்ன விஷயம்.

ராஜேஷ் விவரத்தை சொன்னான். அதை கேட்ட மறு நிமிடமே ராஜேஷின் தர்ம பத்தினி உக்கிர தாண்டவம் ஆட தொடங்கினாள்.

"போயும் போயும் உங்க தம்பி கிட்ட பொறுப்பை குடுத்திருக்கீங்க? உங்களுக்கு சுயபுத்தி கொஞ்சமாவது இருக்கா?"

"என்னடி நீ ..அவன் வேலை வெட்டி இல்லாம இருக்கானே, சரி அந்த தோட்டத்துல வர வருமானத்தை வச்சி ஏதும் செய்யட்டுமேனு தான் அவனை பார்த்துக்க சொன்னேன். அதுல என்ன தப்பு?"

ஹ்ம்ம் போன தடவை ஊருக்கு போனப்போ தான் உங்க  அருமை தம்பியோட லட்சணத்தை கேள்வி பட்டோமே. குடிச்சிட்டு ஊர சுத்திகிட்டு நடக்கிறான். அவன்கிட்ட பொய் இந்த பொறுப்பை குடுத்திருக்கீங்க. ஏன் என்னோட தம்பிக்கு என்ன கொறைச்சலாம்? அவன் பார்த்துக்க மாட்டானோ?

சரி சரி...ஏண்டி இப்பிடி கத்துறே? ச்சே ..சனியன் ராத்திரி நிம்மதியா தூங்க கூட விடமாடீங்க போல.

"ஆமாங்க ஆமா நான் சனியன் தான். என்ன கல்யாணம் பண்ண பிறகு தானே நீங்க அமெரிக்கா வந்தீங்க ஊர்ல தோட்டம் வாங்குனீங்க. அப்போ நான் உங்களுக்கு சனியனா தெரியலியோ?"

ராஜேஷ் மனைவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியது.

"சரி சரி கத்தாதே" என்று சொல்லிக்கொண்டே ராஜேஷ் போனை எடுத்து கவுசிலர் நம்பரை தொடர்பு கொண்டான்.

கவுன்சிலர் கொஞ்சம் சத்தமாக "என்ன ராஜேஷ் எனக்கு கால் பன்றான்?" என்று சந்தேகத்துடன் சொல்லிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தார்.

அதை கேட்டதும் ரமேஷும் கணேஷும் மறுபடியும் ஆர்வமாகி கவுன்சிலர் பக்கத்தில் வந்து நின்றார்கள்.

"என்ன ரமேஷ்" - கவுன்சிலர் சந்தேகத்துடன் கேட்டார்.

"ஒண்ணுமில்ல கவுன்சிலர்....வீட்டில வொய்ப் அந்த தோட்டத்தை பார்த்துகிறதை கணேஷிடம் கொடுக்கணும்னு பிரியப்படறா. எனக்கும் என்னமோ அவ சொன்ன பிறகு கணேஷ் கிட்ட கொடுக்கிறது தான் சரின்னு படுது. நீங்க கணேஷ்கிட்டையே தோட்டத்தை பார்த்துக்க சொல்லுங்க" சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

கவுன்சிலர் மோவாயை தடவிக்கொண்டே விவரத்தை இருவரிடமும் சொன்னார். காட்சிகள் அப்படியே மாறியது. ரமேஷ் எரிச்சலடைய, கணேஷ் இப்போது அவனை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தான்.

அமெரிக்கா (அதே நள்ளிரவு)

போனை வைத்துவிட்டு, ராஜேஷ் மனைவியை பார்த்தான். "என்னடி இப்ப உனக்கு சந்தோஷம்தானே? உன் தம்பிகிட்டையே தோட்டத்தை பார்த்துக்கிற பொறுப்பை கொடுத்துட்டேன்"

ம்ம் ...கிழிச்சீங்க. நல்லது பன்றேன்னு வசமா என்னை மாட்டிவிட்டுட்டு நீங்க நல்ல புள்ளை பெயர் எடுத்துக்கிட்டிங்க.

"எ...என்னடி சொல்றே?"  - ரமேஷ் ஒன்னும் தெரியாமல் முழித்தான்.

நான் சொல்லித்தான் நீங்க இந்த முடிவு எடுத்தீங்க என்கிற நியூஸ் இப்போ உங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகும். அவங்க அங்க உட்காந்துகிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் நல்லா கிழி கிழின்னு கிழிக்க போறாங்க. உங்களுக்கென்ன நீங்க நல்ல புள்ளை. நான் கெட்டவ. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே?

ராஜேஷின் மனைவி அமெரிக்க மாரியாத்தா ஆட்டம் ஆடினாள்.

"ஐயோ ...ராத்திரி நேரத்துல சாவடிக்காதடி"

ராஜேஷ் தலையை பிய்த்துக்கொண்டு மறுபடியும் போனை எடுத்து முஸ்தபாவிற்கு இணைப்பை கொடுத்தான்.

முஸ்தபா அப்போது தான் ஒரு டீ குடிக்கலாம் என்று டீயை வாயில் வைத்து ஒருவாட்டி உறிஞ்சியிருப்பார். போன் சிணுங்கியது.

யாரா இருக்கும் என்று சந்தேகத்துடன் போனை எடுத்து பார்த்தார்.

ராஜேஷ்!!! மறுபடியும்

இணைப்பை கொடுத்து காதில் வைத்தார். "என்ன ராஜேஷ்.."

"இந்த வீட்டில நான் தான் புருஷன்..நான் தான் முடிவெடுப்பேன். யாரும் என்னக்கு சொல்லித்தரவேண்டிய தேவை இல்லை. நானே சுயமா எடுத்த முடிவு. கவுன்சிலர் நான் நேரமே சொன்னது போல என்னோட தோட்டத்தை என் தம்பி ரமேஷ் பார்த்துக்குவான்." சீறிய சிங்கம் போல் மளமளவென சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் ராஜேஷ்.

முஸ்தபாவிற்கு தலை கிறுகிறு என்று வந்தது. அதை விட ராஜேஷின் மேல் ஆத்திரமாக வந்தது. "ராஜேஷ்" என்று பெயர் அடிபடுவதை கேட்ட ரமேஷும் கணேஷும் ஆர்வமாக ஓடிவந்து..

கவுன்சிலர் கவுன்சிலர் ....இப்ப போன் பண்ணது ராஜேஷ் தானே? என்ன சொன்னாரு" என்று கோரஸாக கேட்டனர்.

ஏற்கனவே செம காண்டுல இருந்த கவுசிலர் "ஹ்ம்ம் ....ராஜேஷ் ஒரு அப்பனுக்கு பொறக்கலியாம் அத போன்ல சொல்லிட்டு கட்  பண்ணிட்டாரு".

இதை கேட்ட ரமேஷ் ஆத்திரத்தில் "எங்க அண்ணனை பத்தி என்னய்யா சொன்னே" என்று கோபத்துடன் கவுன்சிலர் கன்னத்தில் "பளார்" என்று ஓன்று வைக்க, ஏண்டா ..என் மச்சானை பத்தியா தப்பா பேசுனே என்று "பளார்" என்று இன்னொரு கன்னத்தில் ஓன்று வைக்க கவுன்சிலர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

ஒரு கவுன்சிலர் அதுவும் நாலு பேருக்கு முன்னால அடிச்சிட்டாங்க என்ற ஆத்திரத்தில் கவுன்சிலர் சட்டென்று எழுந்து..

"டேய் ...என் மேல கை வச்சிடீங்கல்ல..இருங்கடா உங்களுக்கு நான் யார்னு காட்டுறேன்" என்று வெறியுடன் சொல்லிக்கொண்டே தன்னுடைய சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்க ஆரம்பித்தார்.

"கொம்மாள இன்னைக்கு இவங்கள ஒரு வழி பண்ணாம விட கூடாது" என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே சைக்கிளை ஆக்ரோஷமாக மிதித்தார். முஸ்தபா மனதின் புயல்வேக கோபத்திற்கு ஈடுகொடுத்து சைக்கிள் காற்றாக பறந்தது. ஒரு பள்ளிக்கூடத்தின் குறுகிய ரோட்டில் சைக்கிளை திருப்பும்போது...

எதிரே சைக்கிளில் வந்த ஒருவன் மீது மோதாமல் இருக்க பகீரத பிரயத்தனம் செய்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை சைக்கிளோடு முட்டித்தள்ளிவிட்டு சிட்டாக பறந்தார் முஸ்தபா அதே ஆத்திரத்தோடு. என்ன ஏது என்று நின்று கவனிக்க நேரமில்லை. 

சைக்கிளோடு கீழே விழுந்த அவன் அப்போதுதான் தோட்டத்திலிருந்து நெல்லிக்காய்களை பறித்து கூடையில் தலையில் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்த கோபி மேலே சாய்ந்தான். கோபியும் அந்த சைக்கிள்காரனும் நிலைதடுமாறி பள்ளிக்கூட கருங்கல் சுவரில் பொய் முட்டி விழுந்தார்கள். கோபியின் தலையிலிருந்த கூடை மொத்தமாக சரிந்து நெல்லிக்காய்கள் ரோட்டில் சிதறின. கோபியின் கை மூட்டு சுவரில் உராய்ந்து எரிச்சல் எடுத்தது. டக்கென்று எழுந்தவன் சைக்கிளோடு வந்தவனை அடிக்க பாய்ந்தான்.

"டேய் ....கேன பு ...... கண்ணு என்ன பொடலீலையா வச்சிருக்கே? "

"அண்ணே ...நான் இல்லண்ணே அந்த ஆளுதான் கண்ணு தெரியாம வந்து என்னை இடிச்சு தள்ளிட்டான்" சைக்கிள்காரன் கெஞ்சும் பாவனையில் அவனிடம் இருந்து விலகப்பார்த்தான். ஆனாலும் கோபி விடுவதாகயில்லை. பாய்ந்து அவன் சட்டையை கொத்தாக பற்றிய நேரம்...

"ஜன கண  மன அதிநாயக ஜெய ஹே ...
பாரத பாக்ய வி தா தா...."

பள்ளிக்கூடம் விடும் நேரம் தேசியகீதம் ஒலித்தது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சைக்கிள்க்காரன் அட்டென்ஷன் பொசிசனில் நின்றான். தேசியகீதத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற விதிப்படியும் எதிரி அதற்க்கு மதிப்புக்கொடுத்து அட்டென்ஷன் பொசிசனில் நிற்பதாலும் கோபியும் அவன் சட்டையை விட்டுவிட்டு அட்டென்ஷன் பொசிஷனுக்கு வந்தான். ஆனாலும் தேசியகீதம் முடிந்ததும் அவனை நாலு அறை விடவேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவனை நோட்டம் விட்டுக்கொண்டே நின்றான்.

சைக்கிள்காரனோ தேசியகீதம் முடிந்ததும் கோபியிடமிருந்து எப்பிடியும் தப்பித்து ஓடிவிடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே தேசியகீதம் முடியும் தருணத்திற்கு காத்து நின்றான். 


....ஜெய கே ஜெய கே
ஜெய கே...
ஜெய ஜெய..
ஜெய கே ...

கண்ணை மூடித்திறப்பதற்குள் சைக்கிள்காரன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினான்.

"டேய் ....பரதேசி நாயே ...எங்க ஓடுறே...நில்லுடா ..."

சத்தம் போட்டுக்கொண்டே கோபி அவனை பின்தொடர்ந்து விரட்டினான்.

அந்தநேரம் பள்ளிக்கூடம் முடிந்து "ஹோவென" இரைச்சலோடு வெளியே ஓடிவந்த பிள்ளைகள் ரோட்டில் நெல்லிக்காய் சிதறிக்கிடப்பதை பார்த்து ஆவலுடன் போட்டிபோட்டு அத்தனையும் ஒன்றுவிடாமல் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள்.

சைக்கிள்காரனை விரட்டிச்சென்ற கோபி அவனை பிடிக்க முடியாத விரக்தியில் கையை தடவிக்கொண்டே வந்து பார்த்தபோது கூடை மட்டும் ரோட்டில் கிடந்தது. கோபிக்கு தலைமுதல் கால்வரை ரத்தம் சூடாகியது. கோபமும், ஆத்திரமும் ஒன்றே சேர்ந்து வெறும் கூடையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு வந்து திண்ணையில் உட்காந்தவன்...

"எடியே ...பானு ....ஒரு சொம்பு தண்ணி குடுடி" என்று தன்னுடைய அருமை மனைவிக்கு கட்டளையிட்டான். சிறிதுநேரம் பொறுத்திருந்துவிட்டு மீண்டும் கோபமாக

"என்னடி காது கேட்கலியா...தண்ணி எங்கடி" என்று உறுமினான். மனதிற்குள் கோபத்தீ அணையாமல் பற்றிக்கொண்டே இருந்தது.

கொஞ்சம் நேரம்கூட பொறுத்திருந்தவன் ஆவேசமாக வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே அவனுடைய மனைவி பானு பக்கத்து வீட்டம்மையார்களுடன் டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தாள். சீரியல் பார்ப்பதில் இருந்த ஆர்வத்தில் கோபி அழைத்ததையோ தண்ணீர் கேட்டதையோ அவள் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. அந்தக்கட்சியை பார்த்ததும் கோபியின் கோபம் இருமடங்காக எகிறியது. கண்கள் ரத்த சிவப்பாகியது. 

"சிறுக்கி முண்ட ...உன்னை கூப்பிட்டது கேட்கலியா?" என்று கத்திகொண்டே தலைக்கு மேலே கூரையில் சொருகி வைத்திருந்த அருவாளை கையிலெடுத்தான்.

கையில் அருவாளை வைத்துக்கொண்டே பக்கத்துக்கு வீட்டம்மையார்களை பார்த்து...கோபமாக "ஒழுங்கா ரெண்டுபேரும் வெளிய போயிருங்க, இல்ல இருக்கிற கோபத்துக்கு உங்களையும் வெட்டிருவேன்" என்று கத்திக்கொண்டே டிவி வயர் மற்றும் கேபிள் வயர் எல்லாவற்றையும் ஆவேசமாக புடுங்கி எறிந்துவிட்டு டிவியையும் காலால் ஒரு எத்து எத்தினான். அம்மா கொடுத்த இலவச டிவி கீழே விழுந்து உயிரைவிட்டது. பானு என்ன நடக்கிறது என்று புரியாமல் கையால் காதுகளை பொத்திக்கொண்டு நடுங்கி நின்றாள். நிலைமையை உணர்ந்த பக்கத்துக்கு வீட்டம்மாக்கள் இருவரும் சட்டென்று வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து என்ன நடக்கிறது என்று லேசாக எட்டிப்பார்த்தார்கள் திறந்திருந்த வாயில் வழியாக.

ஏண்டி சிறுக்கி முண்ட ...ஒரு மனுஷன் வெளிய உட்காந்து காட்டு கத்தல் கத்துறேன் உனக்கு டிவி சீரியல் கேட்க்குதோ ?" என்று கோபமாக கத்திகொண்டே பானுவின் தலைமுடியை இழுத்து அவள் முதுகில் பளார் பளார் என்று அறைந்தான்.

"ஐயோ ..அடிக்காதீங்க ..உங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு இன்னைக்கு" என்று அடியும் வாங்கிக்கொண்டு பானுவும் கத்தினாள். வீட்டில் மேஜை மேலிருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து போர்க்களம் போல ஆனது. 

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டம்மாவில் ஒருத்தி நிலமை விபரீதமாவதை உணர்ந்து இடுப்பில் வைத்திருந்த மொபைலை எடுத்து பானுவின் அண்ணன் சுந்தர் நம்பருக்கு டயல் செய்தாள்.

மறுமுனையில் ரிங் போனது..

"ஹலோ..யார் இது" சுந்தர் பேசினான்

"நான்தான் சுந்தரண்ணே ..கோமதி பேசுறேன்"

அஹ் ...கோமதியா என்ன விஷயம் திடீர்னு:

என்னன்னு தெரியல்லேண்ணே உங்க மச்சான் வெறிபுடிச்சவன் போல உங்க தங்கச்சிய போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான். சீக்கிரம் வாங்கண்ணே" பதட்டமாக சொல்லிவிட்டு லைனை கட் செய்தாள்.

சுந்தருக்கு என்னவென்று புரியவில்லை ஆனால் தங்கச்சி வீட்டில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. உடனே சுந்தர் மொபைலில் பானுவின் நம்பருக்கு டயல் செய்தான். ரிங் போனது ஆனால் போன் எடுக்கவில்லை. "தங்கச்சி வீடு இங்கிருந்து ஐந்து மைல் தொலைவிலிருக்கிறது, முதலில் என்னவென்று தெரிந்துகொள்வோம்" என்று நினைத்தவாறே மீண்டும் மீண்டும் பானுவின் நம்பருக்கு டயல் செய்தான். கடைசியில் பானு போனை எடுத்தாள்.

"ஹலோ...பானு அங்க என்ன பிரச்சினை:

"அண்ணா" என்று பானுவின் சத்தமும் அதை தொடர்ந்து மச்சானின் வசவு வார்த்தைகளும், "இடையிடையே "ஐயோ அடிக்காதீங்க" என்ற பானுவின் சத்தமும் ஏதேதோ பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டது.

பானு ....என்ன விஷயம்னு சொல்லு"

"உங்களுடைய அக்கவுண்டில் போதிய பணம் இல்லாததால் இந்த இணைப்பு இத்துடன் துண்டிக்கப்படுகிறது" - இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுந்தருக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது.

"சைக் ...இந்த எழவு சனியன் இப்பவா பணம் இல்லைனு கட் ஆகணும்'  எரிச்சல் பட்டுக்கொண்டே அவசரமாக பக்கத்திலிருந்த கடையில் சென்று 

"யோவ் குமாரு இந்தா இருபது ரூபா அர்ஜென்ட்டா என்னோட நம்பருக்கு டாப் அப் பண்ணு"

குமாரு "சரி சுந்தர்" என்று சொல்லிக்கொண்டு பணத்தை வாங்கவும், அங்கே ஏற்கனவே கடையில நின்றவன் 

"யோவ் ...என்னை மொதல்ல கவனிச்சிட்டு அப்புறம் டாப் அப் பண்ணு"

"குமாரு நீ மொதல்ல டாப் அப் பண்ணு, அப்புறம் சாருக்கு என்ன தேவையோ குடு"

இங்க பாரு ...நான் தான் மொதல்ல வந்தேன். நான் கேட்டதை மொதல்ல குடுத்துட்டு அப்புறம் நீ அடுத்தவங்களை கவனிச்சா போதும்" குரலில் கடுமை தெரிந்தது.

சுந்தர் ஏற்கனவே இருந்த பதட்டத்தில்.. "நீ என்ன பெரிய மயிரா...போவியா அங்கிட்டு" என்று அவனை பார்த்து சீறினான்.

"என்னடா ங்கோத்தா..யாரை பார்த்து மயிருனு சொல்றே" குரலை உயர்த்திக்கொண்டு சுந்தரை பிடித்து தள்ளிவிவிட்டான். சுந்தர் ஒருகணம் நிலை தடுமாறி விழ போனவன் சுதாரித்துக்கொண்டு கோபமாக அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

இதை பார்த்துக்கொண்டு சிறிது தூரத்தில் ஆட்டோவில் நின்றிருந்த அவனுடைய கூட்டாளிகள் திபுதிபுவென ஓடிவந்து சுந்தரை சூழ்ந்துகொண்டது சரமாரியாக அடித்தனர். கடையின் முன்பக்கத்தில் சாக்கெலட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜாடிகள் அந்த களேபரத்தில் கீழே விழுந்து நொறுங்கின. இதை பார்த்துக்கொண்டிருந்த ஊர்க்காரர்கள் ஓடிவந்து சுந்தருக்கு ஆதரவாக ஆட்டோவில் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் ஊரார்களின் எண்ணிக்கை கூடவே ஆட்டோவில் வந்தவர்கள் தப்பித்தால் போதுமென்று கூட்டத்திலிருந்து விடுபட்டு கிழிந்த ஆடைகளுடன் ஆட்டோவில் ஏறி 

தேவடியா நாய்களா ...எங்க மேலையே கை வச்சுடீங்கள்ல. இருங்கடா உங்களுக்கு நாங்க யாருனு காட்டுறோம் என்று சபதமிட்டுக்கொண்டே ஆட்டோவில் ஏறி பறந்தனர்.

பிறகு விசாரித்த பிறகுதான் தெரிந்தது, அவர்கள் பக்கத்து ஊர்க்காரங்க என்று..

போனவர்கள் சிறிது நேரம் சென்று மேலும் சில ஆட்டோக்களில் ஆட்களும், கைகளில் அரிவாளும் உருட்டுக்கட்டையுமாக வந்து சில நிமிடங்களில் சுந்தரின் ஊரை சேர்ந்த கண்ணில் பட்ட நாலைந்து பேரை சரமாரியாக வெட்டிவிட்டும், கடைகளை சூறையாடிவிட்டும் சென்றனர்.

அதற்க்கு பழிவாங்கும் படலமாக சுந்தரின் ஊரை சேர்ந்தவர்கள் ஒரு டெம்போ நிறைய ஆட்களுடன் சென்று அந்த ஊரில் வெறியாட்டம் ஆட..

சில மணி நேரங்களிலேயே ....இரண்டு ஊருக்கும் இடையே கட்டுக்கடங்காத கலவரம் வெடித்தது. போலீஸ் படை வந்தும் சமாளிக்க முடியாமல் கலவர தடுப்பு பிரிவு அதிகாரிகளும் களத்தில் இறங்கினர். சிறப்பு அதிரடி படைக்கும் உத்தரவு பறந்தது. எல்லா நியூஸ் சானல்களிலும் அந்த இரண்டு ஊரின் கலவர நியூஸ் பிரேக்கிங் நியூஸாகவும் பிளாஷ் நியூஸாகவும் ஓடியது.

நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு ஊருக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.


இப்படியாக ஒரு கலவரம் அரங்கேறி காலாகாலத்துக்கும் இரண்டு ஊருக்கும் பகை ஆனது !!!


இப்படிக்கு 
ரசிகன் 

சனி, டிசம்பர் 24, 2016

ஆசை...






Behold her, single in the field,
Yon solitary Highland Lass! 
Reaping and singing by herself;
Stop here, or gently pass!



வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் "The Solitary Reaper" கவிதை வரிகள் அந்தோணி வாத்தியாரின் கணீர் குரலில் அந்த பனிரெண்டாம் வகுப்பு "B" பிரிவு வகுப்பறையிலிருந்து சத்தமாக கேட்டது.

மூன்றாவது பெஞ்சின் வரிசையில் இருந்த ஜீவாவிற்கு அது ஒன்றும் காதில் ஏறுவதாக இல்லை இப்போது.

பசி....பசிக்குது....மெதுவாக வாட்சை திருப்பி பார்த்தான் இன்னும் முழுசாக இருபது நிமிடங்கள் இருக்கின்றன லன்ச் பெல் அடிப்பதற்கு. அப்படியே சட்டை பாக்கட்டின் மேல் கைவைத்து காலையில அம்மா தந்த இருபது ரூபாய் பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்தான். 

"ஹ்ம்...இருக்கிறது."

அம்மா எதோ உறவினர் வீட்டிற்கு போகிற காரணத்தால் மத்திய சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட கிடைத்த இருபது ரூபாய். காலையில் அவசரம் அவசரமாக பழைய சோறும் ஊறுகாயும் வாரி போட்டுகொண்டு வந்தது. அது எப்போதோ செரிமானம் ஆகிவிட்டிருந்தது. வயிற்றிக்குள் வெறும் ஆட்டுரல் சுற்றுவது போலிருந்தது. 


"இந்த இருபது ரூபாயை வைத்து இன்னைக்கு என்ன சாப்பிடலாம்?" ஜீவா அடுத்த கட்ட சிந்தனைக்கு தாவினான்.


"பிரியாணி சாப்பிடவேண்டுமென்றால் இருபது ஐந்து ரூபாய் வேணும்."

"கௌரிசங்கர் ஹோட்டலில் வெஜிடபிள் சாப்பாட்டிற்கு முழுதாக இந்த இருபது ரூபாயை மொய் வைக்கவேண்டும். எக்ஸ்ட்ரா சாதம் கேட்டால் அதற்க்கு தனி காசு கேட்பான்."

"ஹ்ம்ம்....பேசாமல் காமாட்சி மெஸ்ஸில் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட வேண்டியதுதான். பதினைந்து ரூபாய் தான். மீதி இருக்கும் ஐந்து ரூபாய்க்கு எதாவது சாக்லேட் வாங்கி சாப்பிடலாம்."

ஒருவழியாக யோசித்து இந்த பிளானை மனதில் ஒட்டிக்கொண்டான்.


ஜீவாவின் சிந்தனையை கலைக்கும் விதமாக லன்ச் பெல் அடித்தது. அந்தோணி வாத்தியார் வகுப்பறையின் கதவை தாண்டியிருக்க மாட்டார். அதற்குள் ஜீவா சிட்டாக பறந்தான் காமாட்சி மெஸ் நோக்கி.

ஓட்டமும் நடையுமாக ரோட்டில் நடந்துகொண்டிருந்த ஜீவாவை அந்த குரல் இழுத்து நிறுத்தியது.

"தம்பீ ...."

ஜீவா ஒருகணம் சுற்றும் முற்றும் பார்த்தான். நம்மளை இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அடியெடுத்து வைத்தவனை மீண்டும் அந்த குரல் நிறுத்தியது.

"தம்பீ... உன்னைத்தான் "

குரல் வந்த திசை நோக்கினான்.

பாதி அழுக்கும் பாதி வெள்ளையாக சட்டையும் ...காவி வேட்டியுமாக அவன்...(இல்லை இல்லை அவர்) அங்கு உக்காந்திருந்தார். நெத்தியில் பட்டையும் கழுத்தில் நீளமாக ருத்ராட்ச மாலையுமாக, கொஞ்சம் கலைந்த முடி..நிறைய தாடியுமாக பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரு சாமியார் மாதிரி.

"இங்க வாங்க தம்பீ"

ஜீவா ஒருகணம் அவரிடம் போகலாமா வேண்டாமா என்று யோசித்து..அவரிடமே போனான்.

அப்போதுதான் அதை கவனித்தான்.

அவர் முன்னாள் நிறைய பலவிதமான சாமி படங்கள் ஒட்டிய அட்டை ஓன்று வைத்திருந்தார். சரஸ்வதி, முருகன், பிள்ளையார், காளி, அல்லா, இயேசு இத்யாதி இத்யாதி. அந்த அட்டையின் மேல் கொஞ்சம் சோழிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு சின்ன ஆமை குஞ்சுகள் படுத்திருப்பதை போல் இருந்தது.

ஜீவாவிற்கு மனதிற்குள் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

"புள்ளை பிடிக்கிறவனாக இருப்பானோ?" அம்மா அடிக்கடி புள்ளை பிடிக்கிறவங்கள் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கிறாள். 

"ஒருவேளை பில்லி சூனியம் வைக்கிறவனாக இருப்பானோ?" ச்சே ... தெரியாம வந்துவிட்டோமோ?

"தம்பீ ....என்ன படிக்கிறீங்க?" 

ஆங்.....என்ன கேட்டிங்க? ஜீவாவின் திகில் சிந்தனை கொஞ்சம் அறுந்தது.

"தம்பீ ...என்ன படிக்கிறீங்கன்னு கேட்டேன்" குரல் கொஞ்சம் கனிவாகத்தான் இருந்தது.

"பன்னெண்டாம் வகுப்பு"

"தம்பிய பார்த்தா நல்ல படிக்கிற புள்ள மாதிரிதான் இருக்கு."

"யாரு நானா?" (மூணாவது  பெஞ்சில கழிசடைங்க கூட உட்கார வச்சிருக்காங்க...நான் நல்ல படிக்கிற பையனா?)

"ஆமா தம்பி...முகத்தை பார்த்தாலே தெரியுதே."

"சரிதான்"...(இவரு என்னதான் சொல்ல வராரு இப்ப?)

"அநேகமா ...தம்பிக்கு  இப்ப நேரம் நல்லாருக்கு. "

"ஆங்...."(பசி கொல்லுது....நேரம் நல்லாருக்காம்). "சரி சாமி ஸ்கூலுக்கு நேரமாகும் நான் கிளம்புறேன்" சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஜீவா நகர முயன்றபோது....

அந்த பொடியன் ஓடி வந்தான். எப்படியும் வயது ஒரு பத்து பனிரெண்டுக்குள்  தான் இருக்கும். வந்தவன் சாமியாரிடம் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினான். சாமியார் அதை வாங்கி தான் பக்கத்தில் இருந்த சிறிய தகர பெட்டிக்குள் வைத்துக்கொண்டே அவனை பார்த்தார்.

"சரி எத்தனை?" என்று அவனிடம் கேட்டார்.

"நாலு"  - பையன் சொன்னான் 

"ஹ்ம்ம் ...சரி குலுக்கி போடு"

பையன் அங்கிருந்த சோழிகளை கையில் அள்ளி இரண்டு கைகளால் நன்றாக குலுக்கி எதோ ஒரு சாமியை கண்மூடி வேண்டிக்கொண்டு சோழிகளை உருட்டினான். அட்டை படங்களின் மேல் சோழிகள் உருண்டு ஓடி நிலைகுத்தி நின்றன.

சாமியார் அதில் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார். 

"நாலு!"

சாமியார் மறுபடியும் அந்த தகர டப்பாவை திறந்து இருபது ரூபாயை அவனிடம் நீட்டினார். பொடியன் அதை வாங்கிக்கொண்டு விர்ர்ர்...என்று பைக் ஸ்டார்ட் செய்வதுபோல் சத்தம் எழுப்பியவாறே அங்கிருந்து மின்னலென மறைந்தான்.

ஜீவாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் தலை தூக்கியது.

சாமியார் லேசாக ஜீவாவை நோக்கி புன்னகைத்தார்.

"என்ன தம்பி....என்ன பார்க்கிறீங்க?"

"ஒண்ணுமில்ல....அவனுக்கு நீங்க ஏன் இருபது ருபாய் குடுத்தீங்க?" ஜீவா என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டுவிட்டான்.

சாமியார் இப்போது காலை மடக்கி நன்றாக உட்காந்து கொண்டார்.

"அதாவது தம்பி...இதுல பார்த்தீங்களா...பத்து சோழிகள் இருக்கு. இந்த பத்து சோழிகளை இந்த அட்டையில  உங்களுக்கு மனசுக்கு புடிச்ச சாமியை வேண்டிக்கிட்டு உருட்டனும். உருட்டுறதுக்கு முன்னால நீங்க ஒரு நம்பர் சொல்லணும். நீங்க சோழிய போட்டதும் நீங்க ஏற்கனவே சொன்ன நம்பர் சோழிங்க மல்லாக்க விழுந்தா நீங்க எவ்வளவு பணம் காட்டுறீங்களோ, அதுக்கு டபுள் மடங்கு பணம் நான் உங்களுக்கு தருவேன். அதாவது ஐந்து ருபாய் வைத்தால் பத்து ருபாய், பத்து ருபாய் வைத்தால் இருபது ருபாய். இப்போது வந்துவிட்டு போனானே அந்த பையனுக்கு இன்றைக்கு சுக்கிர திசை. என்னிடமிருந்து இதுவரை இருபத்துஐந்து ரூபாய் ஜெயித்துவிட்டான்."

ஜீவா கொஞ்சம் ஆர்வமானான்.

சாமியார் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே அதே பையன் மீண்டும் வந்தான். இந்தமுறை ஐந்து ரூபாயை நீட்டினான்.

"ஏழு" என்று சொல்லிக்கொண்டே கடகடவென சோழிகளை எடுத்து உருட்டினான். சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார்.

"ஏழு!!"

பையனின் கையில் பத்து ரூபாயை திணித்தவாறே...

"டேய் ...பையா ....உனக்கு ஏது இவ்வளவு பணம்?"

"எங்க அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்"...சொல்லிக்கொண்டே மறுபடியும் ஓடிவிட்டான்.

"தம்பீ ....இந்தாங்க....நீங்களும் ஒருவாட்டி சோழிய உருட்டிப்பாருங்க" சாமியார் சோழிகளை அள்ளி ஜீவாவிடம் நீட்டினார் 

"ஐயோ...நான் இல்லீங்க..."

"அட ...சும்மா உருட்டுங்க தம்பி. நீங்க காசு பணம் எல்லாம் தரவேண்டாம். உங்களுக்கு யோகம் எப்படியிருக்குனு பார்க்கலாம்."

ஜீவாவிற்கு ஒருதடவை யோகம் இருக்கிறதா என்று பார்க்க ஆசை தோன்றியது.

சோழிகளை கையில் வாங்கி...அட்டையில் இருந்த படங்களை கண்ணை மூடி ஒருவாட்டி கும்பிட்டுவிட்டு. 

"ஆறு" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். 

சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை கவனமாக எண்ண ஆரம்பித்தார்.

"சபாஷ் ...ஆறு!" சாமியார் கொஞ்சம் சத்தமாக சொன்னார்.

ஜீவாவிற்கு தன் கண்களையே ஒருவாட்டி நம்ப முடியவில்லை. 

"பார்த்திங்களா தம்பீ ...நான்தான் அப்போவே சொன்னேன்ல. தம்பிக்கு இப்ப நேரம் நல்லாருக்குனு."

ஜீவாவிற்கு மனதினுள் உற்சாகம் பிறந்தது. மனது பரபரவென கணக்கு போட ஆரம்பித்தது.

"ஒருவேளை நான் விளையாடி ஒரு இருபது ருபாய் ஜெயித்தால், மொத்தம் நாற்பது ரூபாய் கையில் வரும். காமாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, மத்தியானம் ஒரு படமும் பார்க்கலாம். ஜீவாவின் மனக்கண் முன்னாள்...காலையில பார்த்த "அடல்ட்ஸ்  ஒன்லி" போஸ்டர் மின்னி மறைந்தது. அந்த படம் நாளைக்கு தியேட்டரிலிருந்து தூக்கிருவான். அதற்குள் பார்க்க ஒரு சான்ஸ்!!."

"இருந்தாலும் ஏதாவது தப்பாகி சோழிகள் நாம நினைச்ச மாதிரி விழலைனா?" எல்லாமே பாழாகிடும். அதனால முதலில் சிறிய அமவுண்ட் வச்சி பார்க்கலாம் என்று கணித மேதை ராமானுஜர் தோற்று விடும் அளவிற்கு பக்காவாக கணக்கு போட்டு, சோழிகளை கையில் எடுத்தான் மறுபடியும்.

"சாமி...நான் ஐந்து ருபாய் காட்டுறேன்" சொல்லிக்கொண்டே இருபது ருபாய் தாளை சாமியாரிடம் நீட்டினான். அவரும் அதை வாங்கி தகர பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மீதி பதினைந்து ரூபாயை அவனிடம் கொடுத்தார்.

ஜீவா கண்ணை மூடி சாமியை வேண்டிக்கொண்டு ...சோழிகளை குலுக்கி உருட்டிவிட்டுக்கொண்டே...

"எட்டு"

சோழிகள் அட்டையின் மேல் உருண்டோடின. 

சாமியார் என்ன ஆரம்பித்தார்.

"எட்டு" தீர்க்கமாக சொன்னார்.

ஜீவாவிற்கு மனது குதியாட்டம் போட ஆரம்பித்தது. சாமியார் பத்து ரூபாயை அவனிடம் நீட்டினார்.

"தம்பிக்கும் இன்னைக்கும் சுக்கிர திசை தான் போல" சாமியார் கலகலவென சிரித்தார்.

பாக்கெட்டில் இப்போது இருபது ஐந்து ருபாய் இருக்கிறது" ஜீவா சாமியார் சொன்னதை காதில் வாங்கியும் வாங்காமலும் கணக்கில் குறியாயிருந்தான்.

அதற்குள் மீண்டும் அந்த பொடியன் வந்து ஒருதடவை விளையாடி....இருபது ருபாய் கட்டி முழுசாக நாற்பது ரூபாய் ஜெயித்து விட்டு போய்விட்டான்.

"ஒரு பொடியன் நம்மளை விட அதிகமா ஜெயிக்கிறான்...நம்ம நேரமும் நல்லாத்தான் இருக்கு. நம்மால ஜெயிக்க முடியாதா என்ன?" ஜீவாவிற்கு ஆசை என்னும் போதை தலைக்கேறியது.

"சாப்பிடணும், அப்புறம் படத்துக்கு போகணும். லேட் ஆனா படம் போட்டிருவான். பலான சீன் ஏதும் இருந்தா மிஸ் ஆகிரும். இப்போது சிறிய அமௌண்ட் வச்சி விளையாட நேரமில்லை. மொத்தமா ஒருவாட்டி ஜெயித்துவிட்டு போயிற வேண்டியது தான்."

"சாமி...இருபது ருபாய் கட்டுறேன்"  - ஜீவா ஒரு முடிவுடன் இருந்தான்.

"சரி..தம்பீ. கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க" இருபது ரூபாயை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.

ஜீவா சோழிகளை கையில் அள்ளி...."பெரிய நம்பர் சொல்லி ஒருவேளை விழாமல் போய்விட சான்ஸ் உண்டு. அதனால சின்ன நம்பர் சொன்னா பத்து சோழிகளில் எப்படியும் அந்த நம்பர் விழும்" என்று நினைத்துக்கொண்டே

"ஐந்து" என்று கொஞ்சம் பதட்டத்துடன் சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். சோழிகள் உருண்டு சிலது கொஞ்சம் ஆட்டம் காட்டிவிட்டு ஒரு நிலைக்கு வந்தன.

சாமியார் சோழிகளை எண்ணினார்.

ஓன்று..
.
.
.
இரண்டு...
.
.
.
.

மூன்று.
.
.
.
.
.

நான்கு.

நான்கு.....நான்கு..!!!!!!

ஜீவா பரபரக்கும் கண்களுடன் ஐந்தாவது சோழியை தேடினான். இல்லை...எங்கேயுமே இல்லை!

நான்கு தான்!

"நான்கு"......சத்தமாக சொன்னார் சாமியார்!

ஜீவாவிற்கு ஒருகணம் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருந்தது.

"ஐயோ....இருபது ருபாய் போச்சே"...தலைக்குள் எதோ சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

வாழ்க்கையில் ஒருதடவை நினைத்து பார்க்காத ஏமாற்றம் வந்தால்....மூளை அடுத்த செயலை உடனே செய்து அந்த ஏமாற்றத்தை தடுத்து நிறுத்த பார்க்கும். அந்த நேரத்தில் நிதானமில்லாமல் எடுக்கும் முடிவுகள் மீண்டும் தப்பாகும் என்பது நியதி.

ஜீவாவும் அந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.

விட்டதை பிடிக்க வேண்டும்...சாப்பிடவாவது காசு வேண்டும் என்று நிதானமில்லாமல் அந்த முடிவை எடுத்தான்.

"சாமி...ஐந்து ரூபாய் கட்டுறேன்."

"உங்க விருப்பம் தம்பீ....இந்த தடவை கண்டிப்பா நீ கும்புடற சாமி கைவிடாது"

ஜீவா அவசரம் அவசரமாக பாக்கெட்டில் மீதமிருந்த ஐந்து ரூபாயை அவர் கையில் திணித்துவிட்டு சோழிகளை கையிலெடுத்தான்.

பாரபட்சம் பார்க்காமல் எல்லா சாமியும் கும்பிட்டுவிட்டு...

"ஒன்று" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை அட்டையின் மேல் உருட்டினான். 

சோழிகள் சரசரவென உருண்டோடின..

ஜீவாவின் கண்கள்...அகல விரிந்து இதுவா...அதுவா...எந்த சோழி மல்லாக்க விழப்போகிறது என்று தவிப்பாய் தேடினான்.

சோழிகள் உருண்டு....உருண்டு....

கடைசியில்...எல்லாமே ஆமை குஞ்சுகள் போல் கவுந்து படுத்துக்கொண்டன.

ஜீவாவிற்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. பத்து சோழிகளில் ஓன்று கூடவா மல்லாக்க விழவில்லை. கண்களில் லேசாக கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிற மாதிரி இருந்தது.

சாமியாரை பார்த்தான்...அவரும் கன்னத்தில் கைவைத்து அவனை பரிதாபமாக பார்த்தார்..(இல்லை இல்லை ஏளனமாக பார்த்தார்)

"தம்பீ ...உங்களுக்கு இப்போது நேரம் சரி இல்லை போல... சரி தம்பி வேற காசு இருந்தா எடுத்து வாங்க..." சாமியார் சோலியை முடித்துவிட்டு அவனை விரட்டுவது போன்ற தொனியில் பேசினார்.

அவர் (இனி என்ன அவர் ....அதான் ஆட்டைய போட்டானே) அவன் ... அவன்..துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிடைத்தவரை லாபம் என்று அட்டையை மடித்து அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். 

மனசு மாறி காசை திரும்ப கொடுத்துவிடுவான் என்கிற ஒரு சிறிய நப்பாசையுடன் ..ஜீவா கடைசியாக ஒருதடவை அவனை பரிதாபமாக பார்த்தான்.

"போங்க தம்பி ....போங்க....ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல"

ஜீவா அங்கிருந்து கண்கள் பசி மயக்கத்தில் சொருக நகர்ந்தான். அவனும் எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு வேறுபக்கமாக நடையை கட்டினான்.

பசி...பசிக்குது....மோதலில் சாப்பிட எதாவது வழி கண்டு பிடிக்கணும். ஆங்...கொஞ்சம் தூரத்தில்தான் அவன் மாமாவின் செருப்பு கடை ஓன்று இருக்கிறது. மாமா என்றால் தூரத்து சொந்தம் தான். ஆனாலும் அம்மா சிலநேரம் கையில் காசு இல்லாமலிருந்தால் "ஜீவா...மாமா கடையில் போய்  மத்தியானம் லஞ்சுக்கு இருபது ரூபாய் வாங்கிக்கோ" என்று சொல்வதுண்டு. அப்போதெல்லாம் ஜீவாவும் அவரிடம் சென்று அம்மா சொன்னாங்க என்று காசு வாங்கியிருக்கிறான். அனால் அம்மா சொல்லாமல் ஒருநாளும் அவரிடம் காசு வாங்கியதில்லை. இருபது ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வாங்கியதுமில்லை. அந்த நம்பிக்கையில் ஜீவா எப்போதாவது காசு கேட்டு போனால் அவன் மாமாவும் இல்லை என்று சொல்லாமல் காசு குடுப்பது வழக்கம். இன்று தான் முதன்முறையாக அம்மா சொல்லாமல் காசு வாங்கலாம் என்று தீர்மானித்து மாமா கடையை நோக்கி வேகமாக நடந்தான்.

கடையில் வேலைபார்க்கும் ஆள்கள்  சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். 

இவனை பார்த்ததும் ஒருவன். "தம்பி ...என்ன இந்த பக்கம்?"

"ஒண்ணுமிலீங்க....மாமாவை பார்க்கணும்"

"ஓ ...மாமாவா? அவரு கொஞ்சம் முன்னாடி தானே கடைக்கு புதுசா சரக்கு எடுக்கணும்னு எதோ பார்ட்டியை பார்க்க போனாரு. எப்போ வருவார்னு கூட தெரியாதே. ஆனா எப்பிடியும் சாயங்காலம் ஆகிரும் தம்பி."

அவர் சொல்லி முடிக்க ஜீவாவிற்கு கடைசியாக இருந்த ஒரு வாய்ப்பும் நழுவி போகிறது நன்றாக புரிந்தது.

"சரிண்ணே....நான் கிளம்புறேன்"

"என்ன தம்பி? ஏதாச்சும் சொல்லனுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே"...சொல்லிக்கொண்டே ஜீவா அங்கிருந்து அகன்றான்.

"இனி ஒரு வழியுமில்லை.....பேசாமல் ஸ்கூலுக்கு போயிர வேண்டியது தான்...கிளாஸ் ஆரம்பிசிருக்கும்" நினைத்தவாறே ஓட்டமும் நடையுமாக ஸ்கூலை நோக்கி போனான்.

வரும் வழியில்....அந்த காட்சியை பார்த்தான். அந்த பிராடு சாமியாரும்...அடிக்கடி வந்து போன பொடியனும் ஜோடியாக பேசி சிரித்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள். அப்படின்னா அந்த பொடியானும் இவன் ஆளா? ஐயோ கடவுளே...என்னைய நல்ல வச்சு செஞ்சிருக்காங்க. நாசமா போறவங்களா...!

கால்கள் லேசாக தளர ஆரம்பித்தது போலிருந்தது. நாக்கு வேறு வறண்டு வறண்டு போனது. பசி தன் ஆக்டோபஸ் கரங்களால் குடலை பிடித்து பிழிந்து கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்கூலை அடைந்து...தன்னுடைய வகுப்பை நெருங்கும்போதே பத்மா டீச்சர் பாடம் நடத்தும் சத்தம் கேட்டது.

கண்கள் இருட்டாக...நாக்கு வறண்டு நடை தளர்ந்து....வகுப்பின் வாயிலில் வந்து நின்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ ....மேம்" என்று சொல்ல வாயெடுத்தான்....வார்த்தை சிதறடித்து. 

எதோ சத்தம் கேட்டு பத்மா டீச்சர் திரும்பி பார்த்தார்கள். "ஏன்டா லேட்?"

"சா ...சாப்பிட வீ..வீட்டுக்கு போனேன் அதான் லே ...லேட்" வார்த்தைகள் பயத்திலும் பசியிலும் தந்தியடித்தன.

"ஹ்ம்ம்..போ...உள்ளபோய் உட்காரு"

ஜீவா பொய்  தன்னுடைய பெஞ்சில்  பொய் தொப்பென்று உட்காந்தான்.

"ஸ்டுடென்ட்ஸ்....லெட்ஸ் கன்டினியூ......பத்மா டீச்சர் பாடத்தை தொடர்ந்தார்கள் 

புத்தர் தன்னுடைய போதனைகளில் என்ன சொன்னார்?" ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்"   -  என்ன சொன்னார்?

ஸ்டுடென்ட்ஸ் கோரஸாக சத்தமிட்டார்கள் "ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்".

ஜீவா...மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

"புத்தர் ....கரெக்ட்டா தான்...சொல்லிருக்காரு!"



பின்குறிப்பு: இதுவரை அவர்கள் அந்த சோழியை உருட்டி எப்படி ஏமாத்தினார்கள் என்று ஜீவாவிற்கு புரியவில்லை. ஜீவா இன்றும் அதை யோசித்து விடை காண முயன்று கொண்டிருக்கிறான். 


இப்படிக்கு
"கொலை பசியுடன்" ரசிகன் 

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

ஆதலால்.....காதல் செய்யாதீர்!





விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் அந்த தனியார் ஹாஸ்பிடல் நிசப்தமாக இருந்தது. ஆனாலும் ஐசியு வார்டு மட்டும் பரபரப்பில் டாக்டரும் நர்ஸ்களும் ஷூ கால்கள் தேய அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியே ஜீவாவின் அம்மாவும் தங்கையும் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி ரெஜினாவும் படபடக்கும் இதயத்துடன் அமர்ந்திருந்தாள்.

ஐசியு என்று எழுதப்பட்ட பெரிய கதவை திறந்துகொண்டு டாக்டர் கங்காதரன் சோர்வாக வெளியே வந்தார். கூடவே வந்த நர்ஸிடம் எதோ கேட்டுவிட்டு, நேராக ஜீவாவின் அம்மாவிடம் வந்தார். லேசாக தொண்டையை சொருமிக்கொண்டு..

"வி ஆர் சோ சாரி மேடம் ...வி ட்ரைட் அவர் பெஸ்ட்..... பட்...."

"என்னாச்சு டாக்டர்? சொல்லுங்க" - ஜீவாவின் அம்மா அழுகை கலந்த குரலுடன் டாக்டரின் கையை பற்றிக்கொண்டார்.

"மனச தேத்திக்குங்க....உங்க மகனை எங்களால காப்பாத்த முடியல."

"ஜீவா..ஆ ஆ ஆ ...."

ஜீவாவின் அம்மாவின் அழுகை குரல் ஹாஸ்பிடல் முதல் தளம் முழுதும் எதிரொலித்தது.

ரெஜினா நடந்தது யூகித்துக்கொண்டு தலையில் கைவைத்து லேசாக விம்மியபடியே தரையில் அமர்ந்தாள்.


****************


ஜீவா வாட்சை திருப்பி பார்த்தான். மணி 8:45 என்று காட்டியது.

எப்படியும் போய் தான் ஆகணும். நம்முடைய தேவைக்கு நேரம் காலம் எல்லாம் பார்த்தால்  சரி ஆகாது. அனால் இரவு நேர டிரைவிங் தான் கொஞ்சம் கஷ்டம். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய கைப்பேசியை உயிர்ப்பித்து ரெஜினாவின் நம்பரை  அழுத்தினான். மறுமுனையில் ரிங் போனது.

"ஹேய் ஜீவா என்ன இந்த நேரத்தில்?"

"ஒண்ணுமில்ல ரெஜினா, நீ ஃப்ரீயா இருக்கியா? உன்னை கொஞ்சம் பார்க்கணும்."

"என்னாச்சு ஜீவா? எனி ப்ராப்ளம்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல டியர், உன்னை பார்க்க வரலாமா?"

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ..."ம்ம்" என்றாள்.

"தாங்க்ஸ் ...இதோ கிளம்பி ட்வண்டி மினிட்ஸ்ல வரேன்."

ஜீவா டிரஸ் மாத்திக்கொண்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

ஜீவாவும் ரெஜினாவும் காதலிக்க தொடங்கி முழுசாக 8 மாதமும்  12 நாட்கள் ஆகிறது. முதலில் இருவரும் சாட்டில் தான் சந்தித்துக்கொண்டார்கள். ஹாய்-ல் தொடங்கி படிப்படியாக நேரம் காலம் தெரியாமல் சாட்டில் பேச ஆரம்பித்து பின்பு இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொண்டு நேரடியாக சந்தித்து காதலை சொல்லி இப்போது இரண்டு வருடத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற கண்டிஷனில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரது வீட்டிலும் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. ஆனாலும் ரெஜினாவுக்கும் ஜீவாவிற்கும் அடிக்கடி நடக்கும் ஊடல்களுக்கு காரணமும் இந்த சாட் தான். ரெஜினாவிற்கு சாட் தான் கதி. அவளுடைய கைப்பேசி எப்போதும் மெஸேஜ்களால் அலறிக்கொண்டும் IMO, வாட்ஸப் கால்களால் கதறிக்கொண்டும் இருக்கும். ஜீவா எப்போதாவது போன் பேசினாலும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு "ஜீவா அப்புறம் பேசுறேன் எனக்கொரு பிரண்ட்டோட கால் வருது" என்று இணைப்பை துண்டித்து விடுவாள். ஜீவாவிற்கு இது எரிச்சலாக இருந்தாலும் அவளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட கூடாது என்கிற விதிப்படி ஜீவா அமைதி காத்தான். சில நேரம் பொறுக்க முடியாமல் அவளை நேரடியாக சந்திக்கும் போது கேட்டுவிட்டான்.

"ஹேய் ....என்னடி நீ கால் பண்ண அட்டண்ட் பண்ணவும் மாட்டேங்கிறே அப்படியே அட்டென்ட் பண்ணினாலும் பிரண்ட் கால் வருது சொல்லிவிட்டு கட்  பண்ணிடுறே. நீ இன்னும் சாட் பைத்தியமாவே ஏன் இருக்கே? உனக்கு நம்ம லவ் முக்கியமில்லையா?"

ஜீவா கொஞ்சம் கடுமையான குரலில் கேட்டான்.

"லிசன் ஜீவா ...எனக்கு நம்ம லவ் எவ்வளவு முக்கியமோ அது மாதிரி என்னோட சாட் ப்ரண்ட்ஸ் ஆல்ஸோ முக்கியம். நான் ஜஸ்ட் டைம் பாஸுக்கு தானே அவங்க கூட பேசுறேன்? நீ என்னை சந்தேகப்படுறியா ஜீவா?"

"சந்தேகமெல்லாம் இல்லடி ...பட் நீ கொஞ்சம் சாட் பண்றத கம்மி பண்ணு ப்ளீஸ்."

"ஜீவா நாமளே சாட்ல தானே மீட் பண்ணோம். அதை நீ மறந்துட்டியா?"

"எஸ் ...ஒத்துக்கிறேன் நாம சாட்ல தான் மீட் பண்ணோம். நாமக்குளே ஒரு தேடல் இருந்துது. எனக்கான தேடலில் நீயும் உனக்கான தேடலில் நானும் ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்ணிக்கிட்டோம். நீ தான் என் வாழ்க்கைன்னு முடிவான பிறகு நான் இப்போல்லாம் சாட் பக்கம் போறதே இல்லை. எனக்கு தான் நீ கிடைத்துவிட்டாயே. இனி சாட் எதுக்குன்னு தூக்கி போட்டுட்டேன்ல."

"என்னால உன்ன மாதிரி எல்லாம் இருக்க முடியாது ஜீவா. எனக்கு எப்போது சாட் போதும்னு தோணுதோ அப்போ நானும் உன்னை மாதிரி எல்லாத்தையும் விட்ருவேன். ப்ளீஸ் இப்போதைக்கு என்னை என் வழியில் விடு ஜீவா."

"சரி ரெஜினா...நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாவது நீ சாட் விடுவியா?"

"ஹ்ம்ம்...பார்க்கலாம் பார்க்கலாம்."

ஜீவா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பமாட்டான். இதற்க்கு மேல் பேசினால் கையிலிருக்கும் போன் தரைக்கு சிதறு தேங்காய் ஆகிவிடும் என்று நன்றாகவே தெரியும் அவனுக்கு. இப்படி தான் ஏற்கனவே ஒருதடவை இதே விஷயத்திற்க்காக போனை எறிந்து உடைத்துவிட்டு நான்கு நாள் பிடித்து பிடித்தவளை போலிருந்தாள். அப்புறம் ஜீவா புது போன் ஓன்று வாங்கி குடுத்து உன் ப்ரண்ட்ஸ் கூட "எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசு செல்லம்" என்று கிரீன் சிக்னல் குடுத்த பின்புதான் அவள் முகத்தில் சிரிப்பே வந்தது.

கார் ரெஜினாவின் காம்பவுண்ட் கேட்டை நெருங்கும்போதே ரெஜினா வீட்டின் முன்வாசலில் நிற்பது தெரிந்தது. ஜீவா காரை பார்க் செய்துவிட்டு இறங்கி ரெஜினாவிடம் வந்தான்.

"டியர் ....ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீவா. என்ன திடீர்னு பார்க்கணும் சொன்னே?"

"சரி உள்ள போய் உட்காந்து பேசலாமா?"

"ஹ்ம்ம்"

வீட்டின் உள்ளே காலியாக இருந்த சோபாவில் இரண்டு பேரும் அமர்ந்துகொண்டாள்.

"அப்பா, அம்மா தம்பி யாரையும் காணோம்?"

"சாப்பிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போயிட்டாங்க"

ரெஜினாவின் மொபைலில் மெசேஜ்கள் அடிக்கடி வந்து ஒளிர்ந்து கொண்டிருந்தன.

"என்ன மேடம் ரொம்ப பிசியோ? மொபைலை பார்த்தபடியே கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல....வழக்கம்போல பிரண்ட்ஸ் தான். சரி ...நீ வந்த விஷயம் என்ன?"

"பெருசா ஒண்ணுமில்ல ரெஜினா. நான் ஒரு நியூ பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு பிரெண்ட் கிட்ட அவசரமா பணம் கேட்டிருந்தேன். ஜஸ்ட் த்ரீ லாக்ஸ் தான். அவன் இன்னைக்கு தான் கொஞ்சம் முன்னால போன் பண்ணி அவசரமா மும்பைக்கு நைட் பிளைட்ல போகிறேன். முடிஞ்சா இன்னைக்கு நைட் வந்து பணம் வாங்கிக்கோ. மும்பை போயிட்டு ரிட்டர்ன் வர எப்பிடியும் டூ வீக்ஸ் ஆகும்னு சொல்றான்."

"ஹ்ம்ம் ....சோ?" ரெஜினா தாடைக்கு கையை முட்டுக்கொடுத்துக்கொண்டு ஜீவா சொல்வதையும் மொபைலில் அடிக்கடி மெசேஜ் வருவதையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.

"சோ....நான் இன்னைக்கு நைட்டே போயி பணத்தை வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்."

"எந்த ஊரு உன் பிரென்ட்?"

"திருவனந்தபுரம்.."

"யூ ..மீன் ...கேரளா?"

"எஸ்"

"உனக்கென்ன பைத்தியமா? நைட் இங்க இருந்து அங்க வரை கார் டிரைவ் பண்ணி போக? பேசாம அவன்கிட்ட பேங்க்ல ட்ரான்ஸ்பர்  பண்ண சொல்லிர வேண்டியது தானே?"

"நோ ....அது முடியாது ரெஜினா? இட்ஸ் பிளாக் மணி. டாக்ஸ் இஸ்ஸுஸ் வரும்னு தான் கேஸ்ஸா தரேன்னு சொல்றான்."

"பட் ...ஜீவா ...அம்பாசமுத்திரம் டு திருவனந்தபுரம் எப்படியும் சிக்ஸ் ஹவர்ஸ்க்கு மேல ஆகுமே. போறதுக்கு சீஸ் அவர்ஸ் வர்றதுக்கு சிக்ஸ் ஹவர்ஸ்னு பாத்தாலும் நீ வீடு வந்து சேர நாளை காத்தால ஆயிடுமே.?"

"அதுக்கு தான் ரெஜினா உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க வந்திருக்கேன்?"

ரெஜினா புருவத்தை உயர்த்தி "என்ன?" என்பது போல் பார்த்தாள்.

"இங்க பாரு எனக்கு நைட் டிரைவிங் அவ்வளவா பழக்கமில்லைனு உனக்கே தெரியும்?"

"பட் ....நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நான் நைட் ட்ரைவ் பண்றப்போ அப்போ அப்போ கொஞ்சம் போன்ல பேசிகிட்டு இருந்தா நானும் முழிச்சிருந்து ட்ரைவ் பண்ணி போய் சேர்ந்திடுவேன். பணம் கையில கிடைச்ச பிறகு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வேணும்னா நாளைக்கு காத்தால அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணா பொறுமையா வீடு வந்து சேர்ந்துருவேன். இத நான் போன்ல சொல்லிருக்கலாம். ஆனா அதுக்குள்ள உனக்கு பிரண்ட்ஸ் கால்ஸ் வரும் மெசேஜ் வரும். நீயும் பொறுமையா கேட்கமாட்டே. அதனால தான் உன்னை நேர்ல பார்த்து உன்கிட்ட விபரத்தை சொல்லலாம்னு அவசரமா உன்னை பார்க்கணும் சொன்னேன்."

ஜீவா இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் ரெஜினாவின் போன் மெசேஜ் மற்றும் IMO கால்ஸ்களால் நிரம்பி வழிந்தது.

ரெஜினாவின் பார்வையிலும் இவன் எப்போதுடா சொல்லி முடிப்பான் என்று இருந்தது.

"ஒன் செகண்ட் ஜீவா"...என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்து கடகட என்று யாருக்கோ மெசேஜ் டைப் பண்ணினாள்.

ஜீவா பொறுமையாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

மெசேஜ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள். "ஓகே ஜீவா ...நான் உனக்கு போன் பண்றேன். ஆனா நான் தூங்கணுமே?"

ஜீவா கொஞ்சம் நெருக்கமாக அவள் பக்கம் வந்தான். அவன் இரு கன்னத்தையும் கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டு "என் செல்லக்குட்டி.....நீ எப்பிடியும் உன் பிரெண்ட்ஸ் எல்லாரையும் தூங்க வச்சிட்டு நைட் ரெண்டு மணிக்குத்தான் படுக்க போவேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு அதே ஜாப் தான்....பட் கொஞ்சம் ஆப்போசிட் ஜாப். என்னை தூங்காம வச்சுக்கிறது என் ரெஜினாவோட பொறுப்பு. சரியா? நீ சரியாய் ரெண்டு மணிக்கெல்லாம் வழக்கம்போல தூங்க போலாம்."

ரெஜினா லேசாக புன்னகைத்தாள்.

"நீ இருக்கியே ஜீவா...பேசி பேசியே கவுத்துருவே டா."

ஜீவா சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"சரி மா ....நான் கிளம்புறேன். இப்போ கிளம்புனா தடவை சரியா இருக்கும். நானே உனக்கு போன் பண்றேன். அப்போ நீ பேசினால் போதும்."

"ஹ்ம்ம் சரி ஜீவா. பார்த்து பத்திரமா போயிட்டு வா.."

"மிஸ் யூ செல்லம்"...இரண்டு விரல்களை உதட்டில் பதித்து முத்தத்தை அவளை நோக்கி காற்றில் பறக்க விட்டுக்கொண்டே காரை நோக்கி போனான்.

கார் சீரான வேகத்தில் ரோட்டில் வழுக்கிக்கொண்டு சென்றிருந்தது. ஜீவா பாட்டு கேட்டவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

பணம் மட்டும் கிடைத்துவிட்டால் எப்பிடியும் பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணிரலாம். ரெஜினாவையும் ஆபீஸ் விஷயங்கள் பார்த்துக்க சொல்லலாம். அவளும் வீட்டில் சும்மா இருப்பதால் தான் எப்போதும் சாட், பிரண்ட்ஸ் என்று நேரம் போக்கிக்கொண்டு இருக்கிறாள். 

இப்படி பலவிதமாக யோசித்தவாறே மணியை பார்த்தான். மணி 11: 45 என்று காட்டியது. ஜீவாவிற்கு லேசாக தூக்கம் கண்ணை சுழற்றுவது போலிருந்தது. உடனே போனை எடுத்தான் ரெஜினாவுக்கு டயல் செய்தான். ரெஜினா லைனில் வந்தால்.

"ஹாய்...ஸ்வீட்டி ...என்னடி பண்ணிட்டு இருக்கே?"

"ஒண்ணுமில்ல டா"

"ஏய் ...ஏய் ...என்கிட்ட மறைக்காதே. சாட் தானே?"

"ஹ்ம்ம்..."

"இது என்ன உன்னோட நைட் பிரண்ட்ஸ் குரூப்பா?"

"ஆமா ஜீவா....நைட் கொஞ்சம் ரெகுலர் பிரண்ட்ஸ் சாட்ல வருவாங்க. அவங்க கூட பேசிகிட்டு இருக்கேன்."

"எனி நியூ பிரெண்ட்ஸ்?"

"ஆமா ஜீவா. ராகேஷ்ன்னு ஒருத்தன் நம்பர் கொடுன்னு உயிரை வாங்குறான்."

"எப்படியும் நீ நம்பர் கொடுக்க தான் போறே...அதுக்கு  ஏண்டி இவளவு பிகு பண்ணிக்கிறே."

"போ....ஜீவா. அது எப்பிடி உடனே நம்பர் கொடுக்க முடியும். நான் அவன் ஆள் எப்பிடி, பிரெண்ட்லியா பழகுவானா இல்ல ஜொள்ளு கேஸா தெரிஞ்சுக்காம நான் நம்பர் கொடுக்கிறதில்ல."

"அடேங்கப்பா... ஆமா ஆமா ...உங்கிட்ட ஆரம்பத்துல நம்பர் வாங்க நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டேன்னு எனக்கு இப்ப ஞாபகம் வருது."

"ஏய் ....இரு ஒரு கால் வருது."

"சரி சரி....சீக்கிரம் பேசி முடி. தூக்கம் வந்துது. அது தான் உடனே உனக்கு போன் பண்ணேன்."

இணைப்பை துண்டித்தாள்.

"ஏன் இவள் இப்பிடி ரொம்ப சாட் அடிக்ட்டா இருக்கிறாள். இவளை கலியாணத்துக்கு முன்னமே இதுல இருந்து விடுவிக்கணும். என்ன பண்ணலாம்?"....ஜீவா யோசித்தான்.

மறுபடியும் தூக்கம் வருவது போலிருந்தது.

கண்களால் ரோட்டின் இரண்டு பக்கமும் துழாவி ஒரு இரவு டீ கடை முன்பு காரை நிறுத்தினான் கடையின் போர்டை பார்த்தான். இடம் : மீனாட்சிபுரம் என்று போட்டிருந்தது. 

"அண்ணே ...ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுண்ணே". சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான், லேசாக மழை தூறல் விழுகிற மாதிரி இருந்தது. கையை கடைக்கு வெளியே நீட்டி ஒருதடவை செக் பண்ணினான்.

தூவானம் தூறல் போட ஆரம்பித்திருந்தது.

"அண்ணே இங்கிருந்து திருவனந்தபுரம் எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?"

"ஒரு 85 கிலோமீட்டர் இருக்கும் தம்பி"

கடிகாரத்தை திருப்பி பார்த்தான். மணி 12: 20 என்று காட்டியது. 

டீயை வாயில் வைத்து உறிஞ்சியவாறே....எப்படியும் இன்னும் ஒரு டூ  ஹவர்ஸ்ல பொய் சேர்ந்திடலாம் என்று மனதினுள் கணக்கு போட்டான்.

டீக்கு காசு கொடுத்துவிட்டு, லேசான தூறலில் நனைந்துகொண்டே காரில் ஏறி கிளப்பினான். காரின் கண்ணாடியில் நீர்த்திவலைகள் கோர்த்து பார்வையை மறைத்தது. வைப்பர் ஆன் செய்து நீர்த்திவலைகளை வழிக்க செய்தான். மனது வெறுமையாக இருந்தது. மனது வெறுமையாக இருந்தாலே மூளை தூங்க ஆரம்பித்துவிடும். ஜீவாவிற்கு கண்கள் லேசாக சொருகிக்கொண்டு வந்தது. தலையை ஒருவாட்டி சிலுப்பிக்கொண்டு தூக்கத்தை விரட்டிவிட முயன்று தோற்றான். போனை கையில் எடுத்து ரெஜினாவிற்கு கால் செய்தான்.

"ஹேய்....என்னடா ...எந்த லொகேஷன் இப்போ?"

"எதோ மீனாட்சிபுரம்னு போர்டு பார்த்தேன். இன்னும் 85 கிலோமீட்டர் போகணுமாம். டீ கடையில சொன்னாங்க."

"ஹ்ம்ம் பார்த்து டிரைவ் பண்ணுடா...."

"ஹ்ம்ம்... ...ஏதாவது பேசு டி."

"சும்மா பேச சொன்ன...என்னடா பேச ஜீவா?"

"ஏன் உன் பிரண்ட்ஸ் கிட்ட மட்டும் நாள் பூரா கதை விடறே. என்கிட்ட பேச ஒண்ணுமே இல்லையா?"

"ஜீவா ...மறுபடியும் மறுபடியும் ஏன் என்னோட பிரைவசி சப்ஜெக்ட் பத்தியே பேசுறே. நீ இப்பிடி பேசுறத இருந்தா நான் போனை வச்சிடுறேன்."

"ஏய் ...ப்ளீஸ் ...ப்ளீஸ் வச்சிராதே டி."

"ஹ்ம்ம்"

"சரி....நான் ஒரு விடுகதை சொல்லவா? அதுக்கு நீ பதில் சொல்லுவியா?"

"சரி...சொல்லு...ட்ரை பண்றேன். ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் ஹோல்ட் பண்ணேன். ஒரு மெஸேஜுக்கு ரிப்ளை மட்டும் போட்டுக்கிறேன்."

"ஹ்ம்ம்...ஓகே டி." ஜீவாவிற்கு சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.

"ஓகே...ஜீவா இப்போ விடுகதை சொல்லு"...  ரெஜினா மீண்டும் லைனில் வந்தாள்.

"சரி ...நல்லா கேட்டுக்கோ...ஆயிரம் உப்புமா பொடிக்கு அரை மூடி தேங்காய். அது என்ன?"

"ஹ்ம்ம்...ஒரு பைவ் மினிட்ஸ் டயம் குடுக்கிறியா? யோசிச்சு சொல்றேன்."

"ஏய் ..யாரை ஏமாத்த பார்க்கிறே. உனக்கு பதில் தெரியாது. உன் பிரண்ட்ஸ் குரூப் கிட்ட போய் கேட்க போறே. அதானே?"

சிரித்தாள்..."கண்டுபிடிச்சிட்டியா? உனக்கு பதில் தானே வேணும் இதோ வரேன்..."

இணைப்பை துண்டித்தாள்..

ஜீவா அடிக்கடி போனை பார்த்துக்கொண்டே யோசித்தபடி காரின் ஆக்சிலேட்டரை மிதித்துக்கொண்டிருந்தான். வெளியில் மழை அடித்து பெய்ய ஆரம்பித்திருந்தது.

கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, பொறுமையிழந்தவனாக IMO வில் அவளை அழைக்க முயலும்போது போன் தவறி கீழே விழுந்தது. ஒரு கையால் டிரைவ் செய்துவிட்டே ரோட்டில் ஒரு கண்ணுமாக லேசாக உடலை வளைத்து போனை எடுக்க முயன்றான்.

டமால்.....கிரீஈஈஈஈஈச் 

எதிரில் வந்த லாரியின் பக்கவாட்டில் ஜீவாவின் கார் இடித்து ஏறக்குறைய அப்பளம் போல் லாரியின் அடியில் இழுத்து ....

ஜீவா ...என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. 

எங்கோ டெலிபோனின் ரிங் ஒலித்தது.....ஜீவா தலையை தூக்கி தேட முயன்று தோற்றான். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க ஆரம்பித்தான். பின்னந்தலையில் சிறு கீறலாய் புறப்பட்ட இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து மழை தண்ணீரில் கரைய ஆரம்பித்தது.

***************

ஆயிற்று.....சாட்டில் தொடங்கிய ஜீவா ரெஜினாவின் காதல் அதே சாட்டினாலே முடிந்தது. ரெஜினாவும் காதலித்த காரணத்திற்காக அழுது தீர்த்துவிட்டாள். 

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பி வருவாரோ???

ரெஜினா போனை தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு டீபாயில் தலையை சாய்த்துக்கொண்டு கீழே உட்காந்திருந்தாள். மொபைலில் "ஹலோ" என்று மெசேஜ் வந்து மொபைலின் திரையை உயிர்ப்பித்தத்தது. ரெஜினா மெதுவாக எடுத்து பார்த்தாள். ராகேஷ் தான் மெசேஜ் பண்ணிருந்தான்.

"ஹலோ" ....ரிப்ளை தட்டினாள்.

"ஆர் யூ பிரீ டு டாக் டியர்?"  - ராகேஷ் சம்பிரதாயத்துடன் தொடங்கினான்..

"எஸ்..ஐயாம் ..பிரீ " - ரெஜினாவும் சம்பிரதாயத்துடன் தொடங்கினாள்..

பக்கத்தில் மேஜை மேலிருந்த சின்னதாக பிரேம் போட்ட போட்டோவில் ஜீவா ரெஜினாவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.


இப்படிக்கு 
ஜீவா 

வியாழன், டிசம்பர் 08, 2016

மீண்டும் அதே பாடல்...(Keep Trying)


எதேச்சையாக கேட்டு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல்.

ஒரு பாடல்....


எதேச்சையாக கேட்டு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல்.

செவ்வாய், நவம்பர் 29, 2016

Love the Way ♥‿♥




Its rainy here....





After long I wished to write about my true love with whom I madly in love with. I think they are the only one who tend to make me feel happy in any situation possible....I wish to see it more often.

My first and special Love.......RAINS !!!!

When there is rain...I feel the love and start recollecting her memories. Love the way what i did...what she wants.


Love the way write poems for me.....
Love the way you send me those pics of intimacy..
Love the way you type love notes for me...
Love the way you call me different names..
Love the way you whisper your thoughts..
Love the way you playfully make me smile...
Love the way you show care to me..
Love your crazy ways of making love..
And the most beautiful...
I just Love the way you make my heart beat.. ♡

From Miles away...and Yes I am Charmed by YOU !!! 






With Love
Rasigan