திங்கள், ஆகஸ்ட் 03, 2009

உறவாடி கலந்தோம் ...மறந்தோம்!


எப்படி இருந்த நாம் எப்படி ஆயிட்டோம்...


ஞாபகங்கள் எப்போதும் பின்னோக்கி செல்லும்போது மறக்க முடியாதது மழை..மழைக்காலம்!


சின்ன வயசில மழை நமக்கு எல்லாம் ஒரு விளையாட்டு தோழன் / தோழி. தண்ணீரிலே பிறந்தாலோ என்னவோ தண்ணீர், மழையை பார்த்தால் அப்படி ஒரு ஆர்வம் நமக்குள்.


டேய் ...மழையில விளையாடதே! அம்மாவின் குரல் கேட்டதும் மழையில கை நனைத்து விளையாடுறத கொஞ்சம் நிறுத்திக்குவோம். இருந்தாலும் மனசு அலை பாயும். அம்மா பார்க்காத நேரம் பார்த்து ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சிடுவோம். மழையில நனைந்து விளையாடும் பக்கது வீட்டு புள்ளைங்களை எல்லாம் ஏக்கத்தோடு பார்த்துகிட்டு நிப்போம். சாரல் முகத்தில வந்து அடிக்கிறப்ப உடம்பு சிலிர்க்க அந்த கணமே கண்ணை மூடி ரசிப்போம். மழை கொஞ்சம் விட்டதும், வெளிய போய் என்ன எல்லாம் மாற்றம் நடந்திருக்குன்னு ஒரு ரவுண்டு பார்த்துகிட்டு வருவோம். இப்படி மழை காலத்தின் ஒவ்வொரு அசைவையும் அணு அணுவா ரசிச்ச நாம...எப்படி இருந்த நாம....இப்படி ஆயிட்டோம்..

எப்படி???????

மழை வந்த ஓடி ஒளிஞ்சுக்கிறோம். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்கிறோம். மழையில நனைந்தா காய்ச்சல் வந்துடும்பா ! மழையில நனையாட்டி காய்ச்சல் வரதா? அது ஒண்ணுமில்ல காய்ச்சல் பழகிடிச்சு ஆனால் மழை தான் பழக்கமில்ல!
-----மழை இன்னும் பெய்யும்...

1 கருத்து:

  1. உண்மைதாங்க... என்னையும் எங்கம்மா மழையில விளையாடவே விடமாட்டங்க.. என் ஆதங்கத்த பதிவு பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்கோ......

    பதிலளிநீக்கு