நேற்றும் மழை பெய்திருந்தது
நேற்றும் காலையும் மாலையும் வந்து போனது
நேற்றும் பூக்களின் ஜனனமும் மரணமும் நிகழ்ந்தது
அனால் அது எல்லாம் எனக்கானதாக இருக்கவில்லை
எனக்காகவும் இல்லை
காரணம் நேற்றுவரை நான் காதலை காதலிக்கவில்லை
அவள் என் முன்னால் வந்திருக்கவில்லை
அவள் முகம் பார்த்த அடுத்த நொடி
இன்றைக்கு எப்போதோ எனக்குள் வந்திருந்த காதல்
எனக்கு சொல்லியது
மழைக்கு அவளின் மணம்
சூரியனும் சந்திரனும் அவள் பார்வையில்
அசுரனையும் கனவு காண சொல்லும் அவள் காதல்
காதல் பாஷையில் கண்கள் பேசியபோது
ஒவ்வொரு நாளும் விடியலுக்காக ஏங்கியது
ஒவ்வொரு பகலும் நீளமாக வேண்டியது மனது
எந்த உயிருக்கும் புரியும் மொழி
எந்த உயிரும் வேண்டி நிற்கும் வரம்
ஐ லவ் யூ ...