என்னதான் சந்தோசமாக இருக்கிற மாதிரி வெளிய நடிச்சாலும்....ஊரைவிட்டு போகிறப்போ நினைவுகள் எல்லாம் அறுத்து எறிந்துவிட்டு போகிற மாதிரி ஒரு உணர்வு. என்ன இருந்தாலும் பழகின இடங்களும் பார்த்த தடங்களும் கண்ணைவிட்டு அகலும்போது....வாழ்கையின் ஒரு எல்லையில் கையறு நிலையில் நிற்கிறமாதிரி கண்ணீர் முட்டிக்கிட்டு வருகிறது.
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்...எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதைப்பற்றி அறியவில்லை
யார் தொடங்க...யார் முடிக்க...ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை
அச்சம் கலைந்தேன்...ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் ....வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி..
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே
(நன்றி: இருவர் படக்குழுவினர் மற்றும் கவிஞர் வைரமுத்து)