வியாழன், பிப்ரவரி 13, 2014

மௌனம் !






ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,

நான்
ஒரு புன்னகை கேட்டபோது
ஒரு கோப்பை தேனீர் கேட்டபோது
ஒரு சந்திப்பு கேட்டபோது

ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,

நான்
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபோது
ஒரு குளிர் பார்வை தந்தபோது
ஒரு எதிர்பாராத நெருக்கத்தில் நின்றபோது
ஒரு ஏக்கபெருமூச்சு தந்தபோது
ஒரு கதை சொன்னபோது
ஒரு கவிதை எழுதியபோது
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,


நான்  ஒரு காதல் கேட்டபோதும் கூட
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,

இன்று
நானும் மௌனத்திலேயே உழலுகிறேன் !

காதலர் தின வாழ்த்துக்கள் !



சொல்லாமல் விடபட்டவைகளின் தொகுப்பில்
ஒரு காதல்
சில வார்த்தைகள்
சில உண்மைகள்
சில வரலாறு
என அட்டவணை நீண்டு கொண்டே செல்கிறது,

கேட்காமல் விடபட்டவைகளின் தொகுப்பில்
ஒரு முத்தம்
சில கேள்விகள்
சில கடன்கள்
சில மன்னிப்புகள்
சில கதைகள்,

காலகண்ணாடியில் நம்மை சரிசெய்ய
முயற்சித்து தோற்றுப்போனபின்,
எல்லோரும் நிறை மனிதர்களாக
நடித்து செல்கிறோம்....
நானும் கூட !!